தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 ஜூலை, 2015

சிவனின் அடியை காண விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்ததன் ஆழமான ரகசியம்:


பிரம்மா பெரியவரா அல்லது விஷ்ணு பெரியவரா என்பதை சிவனிடம் கேட்கும் பொழுது, சிவனின் ஜோதி வடிவத்தின் அடி முடியை யார் முதலில் அடைகிறார்களோ அவரே பெரியவர் என்று சிவன் சொன்ன உடனே பிரம்மா தன்னுடையை அன்னப்பறவை வாகனத்தில் சவாரி செய்து மேலே பறக்கிறார். மகாவிஷ்ணுவோ வராக (பன்றி) அவதாரம் எடுத்து, பூமியை தோண்டி கீழே சென்று சிவனின் அடியை காண முயற்சிக்கிறார். ஆனால் இருவருமே தோல்வி அடைந்து சிவனையே உயர்ந்தவர் என்று ஏற்று கொள்வதாக புராண கதை சொல்கிறது. ஆனால் இந்த கதையினால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது? இந்த கதையோடு நமக்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை தெரியாமலேயே இந்த கதையை இது நாள் வரை நாம் கேட்டு வந்தோம். இப்பொழுது இந்த ஆன்மீக கதையின் ஆழமான ரகசியத்தை தெரிந்து கொள்ளும் பொழுது நமக்கும் இந்த கதைக்கும் உள்ள நேரடி தொடர்பை நாம் அறிந்து கொண்டு ஆன்மீக விழிப்புணர்வு அடைய முடியும். இந்த ஆழமான ஆன்மீக ரகசியத்தை தாங்கி வரும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு அடைய செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக