தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 செப்டம்பர், 2013

சதா சர்வ காலமும் தன்னை நினைத்து கொண்டே இருந்ததால், அசுரனையும் பரமாத்மா திருவடியில் இணைத்துக்கொள்வார்!


கம்சன் தெரியுமா? ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் அன்னை தேவகியின் அண்ணன்.. கிருஷ்ணரின் தாய் மாமன். தனக்கு மரணம் கிருஷ்ணரால்தான் என அறிந்து, எப்படியாவது அவரை கொல்ல துடித்தான்..பல அசுரர்களை கோகுலத்துக்கு அனுப்பினான்.. சதா சர்வ காலமும் கிருஷ்ணர் ஞாபகமாகவே இருந்தான். தூங்கும் போதும் அவனுக்கு கிருஸ்னர் ஞாபகம். தூங்கி எழுந்த போதும் அவனுக்கு கிருஷ்ணர் ஞாபகம். நடக்கும் போதும், உட்காரும் போதும், உணவு அருந்த போதும், தன அசுர நண்பர்களிடம் விவாதிக்கும் போதும் சதா சர்வ காலமும் பரமாத்மனின் ஞாபகமாகவே இருந்தானாம்.. எப்படியாவது அவரை அழிக்க வேண்டும் என்று துடித்தானாம். இறுதியில், கிருஷ்ணரால் கொல்ல பட்டான்.. சதா சர்வ காலமும் தன்னை நினைத்து கொண்டே இருந்ததால், அந்த அசுரனையும் பரமாத்மா தன திருவடியில் இணைத்து கொண்டார்..

இந்த கம்சன் போலதான் நம்ம ஊர் நாத்திகர்களும் உள்ளனர்.. சதா சர்வ காலமும் இறை வெறுப்புதான்.. இருபத்தி நான்கு மணி நேரமும், எப்படி நம் தர்மத்தை கேவல படுத்தலாம்.. நம் நம்பிக்கைகளை ஒழிக்கலாம் , எப்படி வேத புராண கதைகளை அவர்கள் தரத்துக்கு ஆபாசமாக மாற்றி, எழுதலாம் பேசலாம்.. என்று எண்ணி கொண்டே உள்ளனர்..

ஒருவேளை பகவான் இவர்களையும் தன் திருவடிகளில் இணைத்து கொள்வானோ? யார் கண்டது ? அவன் சித்தம்.. அவன் என்னபடியே அனைத்தும் நடக்கும்.. நடக்கட்டும்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக