தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, September 11, 2013

மிகத்தொன்மை வாய்ந்த தமிழர்களின் வரலாறு

(ஒவ்வொரு தமிழனும் அறிய வேண்டியது!)
மெசொபோத்தேமியா<சிந்துவெளி புலப்படுத்தும் தமிழ்ப்பண்பாடு<இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் கறேபியன் தீவுத் தமிழர்கள் .
இதுதானா நாளைய எமது தலைமுறையின் நிலையும்?-இழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் தமிழர்கள்

காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகு முழுதும் சைவத தமிழின் /தமிழனின் பெருமையையும் தொன்மையையும் வல்லமைகளையும் கண்டு எப்படியாவது தமிழினத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தர அடிமைககளாக்கிப் பயன் பெற்று தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத்தின் கட்டுக்கோப்பைப் பூண்டோடு அழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது. நாம் எமது வல்லமைகளைப் புரிந்து கொண்டு பிரயோக சாத்தியக்கூறு உள்ள பொதுவான தளத்தை அடையாளங் கண்டு அதில் நிலை எடுத்து உலகை ஆள முடிந்தாலும் ஆச்சரியம் இல்லை.உதாரணமாகக் கல்வி தமிழருக்கு பொதுவான தளமாக இருந்தாலும் கூட அட்சரங்கள் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி கற்கும் வாய்ப்பைத் தவிர்த்து விட்டு படித்த முட்தாள்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற படிப்பித்தல் முறைகளையே நாம் நாடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உலகின் முதல் நாகரிக மாந்தன், எத்தனை ஆண்டுகளானாலும் அழிய முடியாத பண்பாட்டைக் கொண்டவன், உலகின் முதல் நகரை அமைத்தவன், உலக மக்களுக்கு எல்லாவற்றையும் கண்டுபிடித்துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும் மேலாக உலகிற்கு உன்னத மொழியை தந்தவன் என்று தமிழனின் பெருமை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச் சொன்னவனும் தமிழனே என்றால் மிகையாகாது.

ஆனாலும் நாம் எம் சிறப்பை அறிந்துவிடாதிருக்க எம்மையே முட்டாள்களாக்கி, திசைதிருப்பி

கடலுக்கடியில் குமரிக்கண்டம்..கடலுக்கடியில் பூம்புகார் என்னும் ஒரு சிறிய வட்டத்துள் சுழல விட்ட மேற்குலகின் தந்திரமான செயலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. அதற்க்கு சாமரம்வீசிக்கொண்டு தம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும் தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை.

அழித்தொழிக்கப்பட்ட மெசொபோத்தேமியா தமிழர்கள்

அழித்தொழிக்கப்பட்ட மாயன் கூட்டம் தமிழர்கள் “நுண்வினைக் கம்மியர் காணா மரபின; துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு மயன் விதித்துக் கொடுத்த மரபின” “மயன் விதித்தன்ன மணிக்கால் அமளி” “ [-சிலப்பதிகாரம்-]

அழித்தொழிக்கப்பட்ட தமிழீழ தமிழர்கள் --FROM1505

அழித்தொழிக்கப்பட்டசிவாலயம் ……
ABC News -
A- temple believed to be 1000 years old has been located by archaeologists, three metres below ground at one of Indonesia's universities.
B- Taj Mahal is Lord Shiva Temple
7, 8ஆம் நூற்றாண்டுகள் முதற்கொண்டே பழந்தமிழருக்கு மலாயாவுடன் தொடர்பு இருந்துள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் கடல்வழிப் பயணம் மேற்கொண்டு மலாயாவில் கடாரம் எனும் பெயரில் நிலப்பரப்பை உருவாக்கி ஆட்சி செய்துள்ள வரலாறு உண்டு.

தொடக்க காலத்தில் வணிகத் தொடர்புகளின் பொருட்டுதான் தமிழர்கள் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ளனர். கடாரத்தில்(Kedah) பூசாங் நதிக்கரையி ல் (Sungai Bujang) குடியிருப்புகளை அமைத்தனர். வந்தவர்கள் சைவர்கள் என்பதால் பூசாங்கில் சிவாலயங்களையும் கட்டினர். அவ்வாலயங்களின் எச்சங்கள் இன்றும் இருக்கின்றன. அவை தமிழன் வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
-ஆலயங்களின் எச்சங்கள் இன்று படிப்படியாக அழிந்துவருகின்றன. இவை முற்றாக அழிவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்கு முன்பாக இந்திய அல்லது தமிழக அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை இங்கு வருகை மேற்கொண்டு அகழ்வாய்வு செய்தால் பற்பல உண்மைகள் வெளிவரக்கூடும். நமது வரலாற்றுச் சான்றுகளைக் கண்டுபிடித்து ஆவணப்படுத்த இயலும்.

இதில் சிக்கல் என்னவென்றால்,(முட்டாளாக்கிய பகுத்தறிவு .)

தமிழக, இந்திய எல்லைக்குள் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளை எல்லாம் அழித்தொழிக்கும் நடுவண் அரசையும் அதற்குத் துணைபோகும் தமிழக அரசையும் நம்புவதும் எதிர்பார்ப்பதும் ஏமாற்றத்திலேயே போய் முடியலாம்

இந்த நூலை நான் எழுதியதன் நோக்கம், உலகில் உன்னதமாய் வாழ்ந்த ஒரு இனம் இன்று உலகின்முன் உருக்குலைந்து கிடந்தும் ஒருவர்கூட எம்மினத்தின் தொன்மையை மற்றவர் முன் நிறுவவோ அதைக் காக்கவோ முனையவில்லை. நாம் மட்டுமே எமக்காகப் போராடி எம்மை முன்னிறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு சிறிய தீப்பொறியே பெருநெருப்பை உண்டாக்க வல்லது. கற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் கற்றவர்களே தமிழுக்கு எதிரிகளாய் உள்ளனர்.

இதை வாசிப்போருள் ஒருவரோ ஒரு சிலரோ எம் தொன்மையைப் புரிந்துகொண்டு ஏதாவது செய்வதற்கு முன்வர மாட்டார்களா?? என்னும் நப்பாசைதான் என்னை இதை எழுதத் தூண்டியது.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழர் தம் அடிமனதில் இன்னும் தம் இனத்தை உயர்த்திப் பார்க்கும் ஆசை கொண்டிருப்பார். அவர் தம் தொன்மையைக் கண்டறிந்து உலக நாடுகள் முன் அதை நிறுவித் தமிழரை மீண்டும் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.

.தமிழா உனக்குப் பிச்சைப்போட யாரும் இல்லை : தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும்.

!சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்---
துலங்குக வையக மே!--தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்
தமிழால் சாதித்தோம் ! தமிழால் சாதிப்போம் !!
தமிழா சாதித்தோம் ! தமிழா சாதிப்போம்

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழியசெந்தமிழ் திருநாடு!!!

LINK--http://arulakam.wordpress.com/
ARULAKAMWORDPRESS.COM---எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு..

No comments:

Post a Comment