தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

அம்மாவுக்காக-அன்று சினிமா அறிவை போதித்தது இன்றோ!!!


வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் 
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம்
உன்னை சேரும் 
பெற்றெடுத்து பெயர் கொடுத்த அன்னை அல்லவோ 
நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ 

தாய் பாலில் வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழைக் கண்டேன்
உண்ணாமல் இருக்க கண்டேன்
உறங்காமல் விழிக்கக் கண்டேன்
மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
இது உன்னிடத்தில் நான் அறிந்த பாடம் அல்லவோ

அன்னை சிந்தும் கண்ணீர் எல்லாம்
பிள்ளையால் பன்னீர் ஆகும்
ஆசை தரும் கனவுகள் எல்லாம்
அவனால்தான் நனவுகள் ஆகும்
அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா?
அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக