தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஏப்ரல், 2013

ஆடு நனைவதை கண்டு அழும் ஓநாய்களுக்கு!!


அவர்கள் எங்களது இடங்களை ஆக்கிரமித்தார்கள் – அமைதியாக இருந்தீர்கள்! ! ! !

எங்களது மக்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்தார்கள் – அமைதியாக இருந்தீர்கள்.

எங்களது மக்களை நாட்டை விட்டு துரத்தி மற்ற நாடுகளில் அகதிகளாக ஆக்கினார்கள் – அமைதியாக இருந்தீர்கள் .

எங்களது பெண்களை கொடுமை படுத்தி கொன்றார்கள் அப்போதும் அமைதியாக இருந்தீர்கள்.

எங்களது சொந்த நாட்டிலேயே எங்களை அடிமைகளாக நடத்துகிறார்கள் – அமைதியாக இருக்கின்றீர்கள்.

கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு எங்களை கொலை செய்தார்கள் – அமைதியாக இருந்தீர்கள்
ஆனால் இப்பொழுது.

நாங்கள் இப்பொழுது எங்களது நாட்டின் விடுதலைக்காக போராடுகிறோம் –

இப்பொழுது நீங்கள் கூறுகிறீர்கள் எங்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று

நீங்கள் எப்படி அழைத்தாலும் எங்களுக்கு பரவாயில்லை.

ஆனால்

எங்கள் நாட்டின் மக்களிடம் எங்களைப் பற்றி கேளுங்கள் அவர்கள் எங்களைப் பற்றி கூறுவார்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று.
போராளிகள் என்று.எங்களுக்கு இது மட்டும் போதும்.

நான் ஒரு சுதந்திர போராட்ட வீரன்,

தமிழீழம் நிட்சயம் ஒரு நாள் சுதந்திர நாடாக தான் இழந்தஅணைத்து இடங்களை மீட்டெடுக்கும்

அப்பொழுது எங்களது தியாகங்கள் வரலாற்றில் பதியப்படும்.

அந்த நாள் உலக வரலாற்றில் ஒரு சர்வாதிகார நாட்டை வீழ்த்திய நாளாக இருக்கும்….


via - ஈழ மண் வாசம்


தோளோடு நின்று போராடி எதிரியை அடக்கிய போராளிகளை துரோகிகளாக்கி திருடராக்கி ஆயுதத்தால் மக்களை அச்சுறுத்தி அனைத்தையும் நம்பவைத்து சாப்பிட மட்டும் வாய் திறக்கச்சொன்ன சகோதர யுத்தமூலம் இல்லாத இடத்துக்கு தலைவனான போராளிகள் தலைவா,நாடு கிடைக்குமுன்னே கலை எடுப்பதாகச் சொல்லி அனைத்து பயிரையும் அழித்துவிட்டு நட்பு நாட்டை எதிரியாக்கி ஏகாதிபத்தியத்தை நண்பரென்று நம்பி மாற்று இயக்கத்தை மட்டுமல்லாது பிரதித்தலைவனையும் காட்டிக்கொடுக்கும் துரோகியாக்கி பல சகோதரர்களை கொன்றழித்து தாகம் தீராமல் மெய்ப்பாதுகாப்பாளனாய்  நின்றவனை கட்டளைத்தளபதியாக்கி அவனையும் துரோகியாக்கி அப்பிரதேசமெங்கும் குருதியாற்றை தமிழர் ரத்தமாய் ஓடவிட்டாய்!!சொந்தச்செலவில் சூனியம் வைத்தபின் உன்னால் விரும்பி ஏற்கப்பட்ட்ட நோர்வே ஏகாதிபத்தியத்தின் ஏவலன் விதானையா உனக்கு ஆப்பு!!அந்த ஆப்பில் அனைத்து தமிழர் தலைவிதியும் வேந்தே போனது,நீ உனது பெற்றோர்,பிள்ளைகளைக்கூட காப்பாற்ற நாதியற்று எங்கோ சென்றுவிட்டாய்!!உன் வால்களுக்கும் போராட்டத்தின் நிலை விலங்கா அனைவருக்கும் அன்னியப் போராட்ட வரலாற்றை படிப்பில் அறிந்த அறிவாளிகளுக்கும் நீ தன்நிகரில்லாத் தலைவன்.உனது மதிப்புக்குரிய ஏகாதிபத்தியத்துக்கு நீ பயங்கரவாதி,உண்மை தமிழனுக்கு முரடன்,அயலாருக்கு உண்டவீட்டுக்கு நஞ்சு வைத்தவன்!!இதையும் வரலாறில் குறித்தால் நாளை தமிழன் நலம் பெறுவான்!!ஓநாய்கள் என்றுமே ஆட்டுக்கு அன்பு செலுத்தாது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக