தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஏப்ரல், 2013

வெடி மருந்தை கண்டு பிடித்ததும் அதை முதன் முதலில் பயன்படுத்தியவர்களும் சீனர்களே!


வெடி மருந்தை முதன் முதலில் 14 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் பயன்படுத்தினர் - ஒரு பிரபல தகவல் களஞ்சியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்

# இது ஒரு தவறான தகவல்.இன்று நாம் படிக்கும் வரலாறு பெரும்பாலும் ஐரோப்பியரின் கருத்து திணிப்புகளே.வெடி மருந்தை கண்டு பிடித்ததும் அதை முதன் முதலில் பயன்படுத்தியவர்களும் சீனர்களே! 11 ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் பேரனும்,ராஜேந்திர சோழனின் மகனுமாகிய அநபாய சோழன் கடாரத்தின் மீது படையெடுத்தபோது அங்கிருந்த மன்னன் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட வெடி மருந்துகளைப் பயன்படுத்தி போரிட்டான்.வெடி மருந்து பற்றி அதுவரை சோழர்கள் அறிந்திருக்கவில்லை.கடுமையான அக்கடற்போரில் சோழர் படைகளின் மரக்கங்களுக்கு(கப்பல்கள்) பெரும் சேதம் ஏற்பட்டது. மரக்கங்களை பழுது பார்க்கவும் ,உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்கவும் சோழர் படை பின்னோக்கி சென்று மிகச்சிறிய தீவுகளான மோகினித் தீவுகளின்(அந்தமான்) தலைநகரான மாநக்காவரத்தை (தற்போதைய போர்ட் பிளேர்) கைப்பற்றியது.போர்க்கப்பல்களின் பழுது நீக்கப்பட்டவுடன் சுவர்ணத்தீவுகளின் (இந்தோனேஷியா,ஜாவா,சுமத்ரா) மீது முதலில் போர்த்தொடுத்தார் அநபாய சோழன்.அப்போது சோழர்களின் போரிடும் முறையை மாற்றிக் கொண்டனர் அதாவது வெடி மருந்துகளின் தீயினால் மரக்களங்கள் எரிந்துவிடாமல் இருக்க பாய்மரக்கப்பல்களில் இருந்த பாய்களை கழற்றிவிட்டு துடுப்புகளால் மரக்கத்தை நகரச்செய்தார்கள்.இதன் பிறகு கடாரத்தின் (தாய்லாந்து,வியட்நாம்,மலேஷியா)மீது படையெடுத்து வெற்றி பெற்று புலிக்கொடியை பறக்கவிட்டார்கள்.ராஜராஜ சோழன் காலத்தில் ராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது போர் தொடுத்து வென்றபோது வெடி மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஆனால் அவரின் மகன் அநபாய சோழர் கடாரத்தின்மீது போரிட்டபோது வெடிமருந்து கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.
இது ஒரு சிறிய உதாரணம்தான்.இதுபோல் வரலாற்றின் பக்கங்களில் தமிழர்களின் வீரமும்,பெருமையும் மறைக்கப்பட்டே வந்திருக்கிறது.

© நம்பிக்கை ராஜ்

Ref: புதுச்சேரி ரோமன்ட் ரோலண்ட் நூலகத்தில் உள்ள வரலாற்று ஆய்வு புத்தகங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக