தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஏப்ரல், 2013

திருநங்கைகள்


திருநங்கைகள் அல்ல உன்னின் நற்தங்கைகள்……….

படைப்பின் பரிதாபம் ; பார்ப்போரின் பரிகாசம்
அடைப்புக்குறிக்குள் இவர்களின் குறியீடுகள்
அடைபட்டு போயின………..

ஒரு பாலில் தோன்றி இன்னொரு பாலுக்கு
மொழிபெயர்க்கப்பட்ட இவர்களின் மனப்பாலை
உணர மறுக்கும் இனப்பால்கள் உள்ளவரை
நங்கையின் நளினங்கள் நகல்களாகவே…….

சொல்லுக்கும் செயலுக்கும் தூரங்களை வைத்துக்கொண்டு
உலவும் உலகில்
சொல்லாத சொல்லுக்கும் செய்யாத செயலுக்கும்
தன்னை மாய்த்துக் கொள்ளும்
இவர்கள் சாபத்தின் சொக்கட்டான்கள்……….
.
இனங்கள் இரண்டு மட்டுமே
எனினும் இடையில் அகப்பட்ட இவர்கள்
இரண்டும் கெட்டவர்களாக காட்சியளித்தாலும்
உணர்வில் உயிரின் உச்சத்தைத் தொடுபவர்கள்

மாண்டுபோனால் மண்ணுக்கு இறையாகும் - இந்த
மாய உடலை மெய்யென நினைத்து
முகமூடிகளை முகவடிவாக பாவித்து
உலவும் மாந்தர்களின் மனதோடு
ஒப்பிட வேண்டாம் இவர்களை.......

உன்னின் உதிரம் இவர்களுக்குள்
உன்னின் உணர்வு இவர்களுக்குள்
உன்னின் உவகை இவர்களுக்கும்-பின்
ஏனிந்தப் பிரிவினை?

நாம் கொள்ளும் பாவம் நாமறியோம்;
நாம் செய்யும் பாவம் நமதறிவோம்…………
இனி இவர்கள் திருநங்கைகள்
அல்ல
உன்னின் நற்தங்கைகள்………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக