தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 பிப்ரவரி, 2012

மதம் மாறுங்கள்--டாக்டர் அம்பேத்கர் !!



மதம் மாறுங்கள்

� மதம் என்பது மனிதனுக்காக; மனிதன் மதத்திற்காக அல்ல.

� உங்களுக்கு மனிதத் தன்மை வர வேண்டுமானால் நீங்கள் மதம் மாறுங்கள்.

� அமைப்பு ரீதியாகத் திரள வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

� வலிமை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

� விடுதலை பெற வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

� உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக விளங்க வேண்டுமானால் மதம் மாறுங்கள்.

� உங்களை மனிதர்களாக நடத்தாத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?

� கோயில்களுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி மறுக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?

� உங்களை தண்ணீர் குடிக்க அனுமதிக்காத ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?

� உங்களுக்குக் கல்வி மறுக்கும் மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?

� ஒவ்வொரு கட்டத்திலும் உங்களை அவமதிக்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?

� உங்கள் வேலை வாய்ப்புக்குத் தடையாக நிற்கும் ஒரு மதத்தில் நீங்கள் ஏன் நீடிக்க வேண்டும்?

� மனிதனுக்கு மனிதன் சரியான உறவுகள் கொள்வதைத் தடுக்கின்ற மதம் மதமே அல்ல; அது அடக்குமுறையின் அடையாளம்.

� மனித குலத்தை ஒரு சீராக மதிப்பதை மத விரோதமாகக் கருதும் மதம் மதமே அல்ல. அது ஒரு மன நோய்.

� புனிதமற்ற விலங்குகளைத் தொடுவதை அனுமதிக்கும் ஒரு மதம் அதே சமயம் மனிதனுக்கு மனிதன் தொடுதல் கூடாது என்று தடுக்குமானால் அது மதம் அல்ல; மடமை.

� ஒரு வகுப்புக்குக் கல்வி உரிமை இல்லை என்றும், அவ்வகுப்பு செல்வம் சேர்க்கக்கூடாது என்றும், ஆயுதம் ஏந்தக் கூடாது என்றும் தடை செய்யும் ஒரு மதம் மதமே அல்ல. மனித வாழ்வையே கேலிக் கூத்தாக்கும் ஒரு மார்க்கம்.

� கல்வி அறிவற்றவன் அதே நிலையில் இருக்க வேண்டுமென்றும் ஏழை ஏழையாகவே நீடிக்கவேண்டுமென்றும் வலியுறுத்துகின்ற மதம் மதமே அல்ல;அது ஒரு தண்டனை.

� கடவுள் எங்கும் உள்ளார் என்று உபதேசம் செய்து விட்டு, சக மனிதர்களை விலங்குகளை விடவும் கீழ்த்தரமாக நடத்துபவர்கள் வேடதாரிகள். அவர்களோடு நட்புறவே வைத்துக்கொள்ள வேண்டாம்.

� எறும்புகளுக்குச் சர்க்கரை போடுபவர்கள் மனிதர்களைத் தண்ணீர் குடிக்காத வண்ணம் தடுத்து, அவர்களை உயிர்க் கொலை செய்கிறார்கள் என்றால்அவர்கள் வேடதாரிகள்; அவர்களுடன் நட்புறவு வைத்துக் கொள்ள வேண்டாம்.

-டாக்டர் அம்பேத்கர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக