11 ,,,அழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற துடிக்கும் பூர்வீக மன்னர்கள் ,
நாடாளும் பூர்வீக வம்சத்தின் மண்ணை அபகரிக்க வேண்டுமானால் ஆக்கிரமிப்பாளர்களால் அவர்களது பெண்ணை ஆசை கொள்ள வேண்டும் என்பது ஈழ வம்சத்தின் வரலாற்றிலும் பல்வேறு பரிமாணங்களில் இழையோடி உள்ளது .ஆப்கானிஸ்தானின் இருந்து வந்த விஜயனாய் இருந்தாலும் பாண்டி நாட்டில் இருந்து வந்த பாண்டிய பண்டு வாசன் பரம்பரையாய் இருந்தாலும் இந்த வழிமுறையையே கையாண்டார்கள் .குலம் விட்டு குலம் தாவி திருமணம் செய்து உறவாடி வஞ்சகமாய் குறு நிலங்களுக்கு அரசர்களாகி குலநாசம் செய்தவர்கள் இந்த கலப்பு வம்சத்தினர் .பெண்ணாசை என்பது பெரும் தவறுகளையும் வரலாற்றில் செய்யும் என்பதை ஈழ விடுதலை போரியல் வரலாற்றில் நாலாம் கட்ட ஈழப்போரின் பின்னடைவின் போதும் நாம் கற்று கொண்டோம் .அது பற்றி பின்வரும் தகுந்த கால ஓட்டத்தில் வரும் நிகழ்வுகளின் நீரோட்டத்தில் பயணித்து பார்ப்போம்..
.மூத்த சிவன் தந்தை இழந்த அனுராத புரத்தை மீண்டும் கைப்பற்ற வலிமை இல்லாததால் கதிர மலை அரசர்களுடன் பகைத்து கொள்ளாமல் நாக வாணன் பெண்ணை திருமணம் செய்து பழி தீர்க்க வழி தேடினான் .இதை அன்று உணராத வாணன் தன் மகளை நல்ல எண்ண நோக்கத்தில் அவனுக்கு அவளை மணம் செய்து தானமாக அனுராத புர அரசையும் கொடுத்தான் ஆனால் மூத்த சிவன் தனக்கு பிறந்த ஒன்பது பிள்ளைகளையும் தாய் உறவுகளுக்கு எதிராகவே வளர்த்தான் .பௌகுத்து அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டிய பௌத்தத்தை பிரிவினையை செயல் வினையாக்க எண்ணிய மூத்த சிவனின் மூத்த மகன் தீசன் ,மதமாக ஏற்று கொண்டான் .அதை தளுவியவர்களை புதிய இனமாக உருவக படுத்தினான் .அன்றில் இருந்தே உண்ட கோப்பைக்கு இருண்டகம் செய்யும் வஞ்சகர் கூட்டம் மௌரிய தேசஅசோகனின் பிக்குகளின் வழிகாட்டலில் தீசனின் ஏவலில் உருவாகினர் .
ஆயிர கணக்கில் பிக்குகளை வரவளைத்து அனுராத புரத்தில் வீடு வீடாக சென்று பெளத்தை போதித்தார்கள் மக்களை மதம் மாற பல பரிசு பொருள்களும் உதவி தொகைகளும் வழங்கினார்கள் .மாறாதவர்களுக்கு பெரும் துன்பங்களும் விளைவித்தார்கள் .உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க வேண்டாம் என்ற புத்தரின் போதனையை அன்றே அரசியல் ஆதரவோடு பிக்குகள் மீற தொடங்கிவிட்டார்கள் இதை அறிந்த நாகர்கள் கடும் கோபம் கொண்டு கருத்து மோதல்களில் ஈடுபட்டார்கள் .
மகள் வாழ்க்கை பட்ட உறவுகளோடு போரிட்டால் வரும் அழிவுகளை கால கணிப்பு செய்தார்கள் கதிர மலையை ஆண்ட நாக வாணன் மகன், நாக வளை வாணன் சம காலத்தில் ஒரு சோழ நாட்டு திருமணக் கலப்பினாலும் குழப்பத்தில் இருந்தான் .வளை வாணன் மகள் பீலிய வளை சோழ இளவரசன் சோழின் நெடும் கிள்ளியை இந்திர விழாவில் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்தாள்..திருமணம் நடந்தாலும் நாக அரசன் மகளை சோழ நாடு அனுப்ப விரும்ப வில்லை அது மட்டுமன்றி நாகர்களின் வழக்கப்படி பெண்களை கடல் கடந்த நாட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். ஏற்கனவே அர்ச்சுனன் சித்திராங்கதை விடயத்திலும் இந்த வழிமுறை நடந்தது .ஆனால் அவர்களுக்கு ஆண்பிள்ளை பிறந்தால் சோழ நாட்டுக்கு அனுப்புவதாக மன்னர் உறுதி அளித்தார் அதன் படியே இளம்திரையனை சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தார் இளம் திரையன் கப்பலில் புறப்பட்டு போன வேளையில் தான் மூன்றாவது மிகப்பெரிய சுனாமி (கடல் கோள்) ஏற்பட்டு கப்பல் உடைந்தது .இந்த கடல் கோளால் நாகதீபத்தின் பெரும் பகுதி அழிவடைந்தது அந்த வேளையில் தான் நாம் இன்று காணும் சப்த தீவுகளும் ( நயினாதீவு, நெடும் தீவு,அனலை தீவு ,எழுவை தீவு .புங்குடு தீவு வேலணை .ஊர்காவர் துறை என்பன )யாழ் தீப கற்பத்தில் இருந்து பிரிந்தது .இளவரசன் இளம் திரையன் தொண்டையில் ஒரு கொடியால் சுற்றப்பட்டு குற்று உயிராய் கரை ஒதுங்கிய இடமே இன்றைய தொண்டை மானாறு எனப்படும் பிரதேசம் .இந்த கடல் கோளால் ஈழ நாடு பல அழிவுகளை சந்தித்தது .இந்த அழிவுகளில் இருந்து மீளாத கவலையோடு இருந்த வளை வாணன் சமகாலத்தில் அனுராத புர அரசினரோடு போரை தவிர்த்தான். ஆனால் தீசன் மௌரியர்களின் பக்கபலமும் கல்யாணி நாக அரசர்களின் உதவியும் கதிர்காம வேடுவ சத்திரியர்களின் உறுதுணையும் இருப்பதால் மிகவும் துணிவோடு பெளத்தை பரப்புவதில் வேகமாய் செயல் பட்டான் .கடல் கோளால் நாடு பல்வேறு அழிவுகளுக்கு உள்ளாகி இருக்கும் வேளையிலும் மதம் பரப்பும் செயலின் முழுமையாக ஈடுபட்டதீசனுடனும் அவன் தம்பிமாருடனும் சமாதானமாக நாட்டு மக்களை பாதிக்காத வகையில் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட வளைவாணன் தன் மகன் நாக குத்தனையும் அவனது நண்பனான இயக்கர் குலத்து தார தத்தனின் வம்சத்தில் வந்த ஈழ ஊர் என்று அழைக்கபடுகின்ற ஈழத்து உத்தர பிரதேசமான பூநகரியின் இளவரசன் ஈழ சேனனையும் அனுராத புரத்துக்கு அனுப்பி வைத்தார் .
இவர்கள் சிறந்த இரு குதிரைகளில் ஏறி அனுராத புரத்தை அடைந்தார்கள் அங்கு அரசர் அவையில் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை நாக குத்தன் தன் மாமியாருக்கு வணக்கம் தெரிவித்த பின்னர் தனது பேச்சை ஆரம்பித்து நாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவையும் புத்த புக்குகள் செய்யும் தொல்லைகளையும் நமது பூர்வீகர்களின் வழிபாட்டு தலமான மகேசன் திருக்கோவிலை இடித்து மகா விகாரை கட்டியது மிகவும் தவறு என்றும் அதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்றும் நம் மக்கள் படும் துன்பங்களையும் இவற்றை எல்லாம் நாம் நல்ல வழியில் தீர்த்து விட்டால் நாம் சண்டை இட்டு பிரிந்து வாழவேண்டிய தேவை இல்லை என்பதையும் நாம் ஒன்று பட்டாலே நாடு நன்றாக இருக்கும் நாட்டு மக்கள் சந்தோசமாக இருப்பார்கள் என்பதையும் எடுத்து கூறினான் .ஈழ சேனனும் தனது பக்க நியாயங்களை எடுத்து சொன்னான் .ஆனால் தீசனும் அவனது சகோதரர்கள் இவர்கள் தங்களோடு போரிட பயந்து விட்டார்கள் என நினைத்து இவர்கள் பேச்சுக்கு பணியாது மிகவும் இறுமாப்போடு பேசினார்கள் அதில் சூர தீசன் என்பவன் போரிட்டு அனுராத புரத்தை கைப்பற்ற முடியுமானால் கைப்பற்றுங்கள் கோழைகள் போன்று பேசாதீர்கள் என பதில் அழித்தான் கோபம் அடைந்த நாக குத்தனும் ஈழ சேனனும் அவையை விட்டு வெளி ஏறினார்கள் அந்த வேளையில் சபையில் இருந்த வளை வாணன் அக்கா தீசனின் தாயாரிடம் விடை பெற்ற நாக குத்தன் நாங்கள் அப்பாவின் அனுமதி பெற்று வர செல்கின்றோம் .அனுராதபுரத்தில் எங்கள் படை மறுபடியும் வெற்றி கொடி நாட்டும் என்று கூறி சென்றான் .கோபம் கண்களில் கொதிக்க கடுகதி வேகத்தில் குதிரையில் ஏறி கதிரை மலை வந்த இளவல்களை அரண்மைனையில் வர வேற்ற தங்கை பொன்னம்மை நாகச்சியாரிடம் நாக குத்தன் சிவந்த விழிகளோடு கேட்ட கேள்வி அப்பா எங்கே ? நாங்கள்அனுமதி பெறவேண்டும் .என்றான் .அரச சபையில் இருக்கும் தந்தையிடம் இளவல்களை அழைத்து சென்ற பொன்னம்மை அண்ணாவுடன் வந்த ஈழ சேனனை புன்னகை செய் ஒளிமுகத்தோடு விழி வழியில் இடை விடாது பார்த்தாள் .கோபத்தில் சிவந்திருந்த அவன் விழியை கண்டும் அவன் மெய் அழகில் மயங்கி மேனி சிலிர்த்தாள் .அன்றில் இருந்து அவன் கைப்பிடிக்கும் நாளை எண்ணி பொன்னம்மை கண்ணுறங்கி இருக்கமாட்டாள் என்பது அனைவரும் அறிந்ததே !இளவல்களை வரவேற்ற நாக வளை வாணன் கொண்டு வந்த செய்தியை கேட்டு முதலில் அதிர்ந்தே போனார் .அப்பா நமது புராதன மகேசன் ஆலயத்தை இடித்து மகா விகாரையை தீசன் சகோதரர்கள் நிறுவி விட்டார்கள் .இதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதை எம்மாலும் பொறுக்க முடியாது நாம் இதுவரை வழிபாட்டு தலங்களை அரச பிரட்சனைகளில் சம்பந்த படுத்தவில்லை மக்கள் மனங்களை என்றைக்குமே துன்பத்துக்கு உள்ளாக்கவில்லை எம்முடன் அவர்கள் சண்டை போடுவதற்கே மக்களை திசை திருப்புகின்றார்கள் அனுராத புர வீதி எங்கும் பிக்குகள் நடமாட்டம் மக்கள் வீடுகளை பூட்டி வைத்து கொண்டு வெளியே செல்லாமல் இருக்கின்றார்கள் அதனால் பிக்குகள் வீடு வீடாக சென்று தொல்லை கொடுக்கின்றார்கள்.சூர தீசன் எங்களை கோழைகள் என்று பரிகசிக்கின்றான் அதை கேட்ட தீசன் அட்டாகாசமாய் சிரிக்கின்றான் .தீசன் அரச காரியங்களில் இருந்து விலகி பெளத்தை மதம் என்று பரப்புவதில் ஆதரவு கொடுக்கின்றான்.அவன் தம்பி சூர தீசனே அனுராத புரத்தை ஆளப்போகின்றான் . அவன் எங்களை கோழைகள் என்றும் ஆண்மை இல்லாதவர்கள் என்றும் இன்னும் பலவாறாக துஷ்ட வார்த்தைகளால் எங்களை தூற்றினான் நாங்கள் உங்கள் அனுமதிக்காக அவர்களை அங்கு உயிரோடு விட்டு வந்தோம் என்றான் ஈழ சேனன் .மாமி இவற்றை பார்த்து ரசிக்கின்றார் இவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது நாங்கள் இன்றே அவர்களோடு போரிட புறப்பட போகின்றோம் .அனுமதி தாருங்கள் அரசே ! என்று நாக குத்தன் தந்தையிடம் கேட்கின்றான் .சமாதான வழியில் அவர்கள் வரவில்லையானால் அரச தர்மத்தின் படி நாம் போர் செய்தே ஆக வேண்டும் ஆனால் எமது மக்கள் பாதிக்காத வகையில் போரிட வேண்டும் அதனால் நீங்கள் தேர்சி பெற்ற பன்னிரண்டு படை வீரர்களோடு சென்று அனுராத புர கோட்டைக்குள் புகுந்து முற்றுகை இடுங்கள் நான் உதவிக்கு பின்னர் படை அனுப்புகின்றேன் என்று மகனையும் அவன் நண்பன் ஈழ சேனனையும் வழி அனுப்பி வைத்தார் ,,
வீரமும் விவேகமும் கொண்ட இளவல்கள் தங்களை போல் சிறந்த பன்னிரண்டு வீரர்களை தேர்ந்து எடுத்தார்கள் 12 உயர் ரக குதிரைகளில் ஏறி பொழுது விடியும் முன்னமே பூநகரி கடல் நீர் ஏரி ஊடாக அனுராத புரத்தை நோக்கி சென்றார்கள் ஈழ சேனனுக்கு பூநகரி கடல் நீர் ஏரி மிகவும் பழக்க பட்டது என்பதால் அவனே வழி காட்டிய படி முன்னாலே சென்றான் .அவன் பின்னாலே மற்றைய வீரர்கள் சென்றார்கள். வழியில் ஈழ சேனன் நாக குத்தனுக்கு தனது பூர்வீகர்கள் செய்த தவறுகளை பற்றி சொல்கின்றான் தனது மூதாதை தரா தத்தனின் மகள் குவேனி செய்த தவறாலே விஜயன் என்பவன் நாட்டுக்குள் நுழைந்தான் அவன் வந்ததாலேயே பிற்காலத்தில் அவர்களோடு திருமண உறவுகள் ஆகி பாண்டியர்களும் வந்து சேர்ந்தார்கள் அவர்களின் வருகையாலேயே எம்மவர்களும் அவர்களுடன் சேர்ந்து இலக்கலப்பு ஏற்பட்டது இன்று நாம் நமது தேசத்தின் மீதே படை எடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது இன்றைய நமது படை எடுப்பு மிகவும் முக்கியமானது இன்று நாம் தீசன் சகோதரரர்களை .வென்றே ஆக வேண்டும் இல்லையேல் நான் உயிரோடு திரும்ப மாட்டேன் எனது மூதாதையர் செய்த தவறால் நீங்களும் துன்பத்துக்கு உள்ளாவதை நினைத்து நான் குற்ற உணர்வோடு வருகின்றேன் நாம் இன்றைய போரில் வெல்வது உறுதி இல்லாவிட்டால் நான் வீர மரணம் அடைவது உறுதி என ஈழ சேனன் சொன்னான் .நாக குத்தன் நண்பா நான் உனக்கு பக்க பலமாக இருப்பேன் தீசன் சகோதரர்கள் எனது உறவினர்களாய் இருந்தாலும் இன்று புதிய வம்சத்தை தோற்று வித்து மதமாற்றம் செய்து எம் இனத்தை துன்புறுத்துகின்றார்கள் .அவர்களை தோல்வி காண வைத்து நமது நாட்டையும் மக்களையும் மீட்க நான் என்றும் உனக்கு உறுதுணையாக இருப்பேன் .
பன்னிரு வீரர்களோடு ஈழ சேனனும் , நாக குத்தனும் அனுராத புர அரண்மனைக்குள் வீராவேசத்தோடு புகுந்தனர். .வளரும் தொடரில் வரலாறு போகும் திசையில் நாமும் பயணித்து பார்ப்போம்
நாடாளும் பூர்வீக வம்சத்தின் மண்ணை அபகரிக்க வேண்டுமானால் ஆக்கிரமிப்பாளர்களால் அவர்களது பெண்ணை ஆசை கொள்ள வேண்டும் என்பது ஈழ வம்சத்தின் வரலாற்றிலும் பல்வேறு பரிமாணங்களில் இழையோடி உள்ளது .ஆப்கானிஸ்தானின் இருந்து வந்த விஜயனாய் இருந்தாலும் பாண்டி நாட்டில் இருந்து வந்த பாண்டிய பண்டு வாசன் பரம்பரையாய் இருந்தாலும் இந்த வழிமுறையையே கையாண்டார்கள் .குலம் விட்டு குலம் தாவி திருமணம் செய்து உறவாடி வஞ்சகமாய் குறு நிலங்களுக்கு அரசர்களாகி குலநாசம் செய்தவர்கள் இந்த கலப்பு வம்சத்தினர் .பெண்ணாசை என்பது பெரும் தவறுகளையும் வரலாற்றில் செய்யும் என்பதை ஈழ விடுதலை போரியல் வரலாற்றில் நாலாம் கட்ட ஈழப்போரின் பின்னடைவின் போதும் நாம் கற்று கொண்டோம் .அது பற்றி பின்வரும் தகுந்த கால ஓட்டத்தில் வரும் நிகழ்வுகளின் நீரோட்டத்தில் பயணித்து பார்ப்போம்..
.மூத்த சிவன் தந்தை இழந்த அனுராத புரத்தை மீண்டும் கைப்பற்ற வலிமை இல்லாததால் கதிர மலை அரசர்களுடன் பகைத்து கொள்ளாமல் நாக வாணன் பெண்ணை திருமணம் செய்து பழி தீர்க்க வழி தேடினான் .இதை அன்று உணராத வாணன் தன் மகளை நல்ல எண்ண நோக்கத்தில் அவனுக்கு அவளை மணம் செய்து தானமாக அனுராத புர அரசையும் கொடுத்தான் ஆனால் மூத்த சிவன் தனக்கு பிறந்த ஒன்பது பிள்ளைகளையும் தாய் உறவுகளுக்கு எதிராகவே வளர்த்தான் .பௌகுத்து அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டிய பௌத்தத்தை பிரிவினையை செயல் வினையாக்க எண்ணிய மூத்த சிவனின் மூத்த மகன் தீசன் ,மதமாக ஏற்று கொண்டான் .அதை தளுவியவர்களை புதிய இனமாக உருவக படுத்தினான் .அன்றில் இருந்தே உண்ட கோப்பைக்கு இருண்டகம் செய்யும் வஞ்சகர் கூட்டம் மௌரிய தேசஅசோகனின் பிக்குகளின் வழிகாட்டலில் தீசனின் ஏவலில் உருவாகினர் .
ஆயிர கணக்கில் பிக்குகளை வரவளைத்து அனுராத புரத்தில் வீடு வீடாக சென்று பெளத்தை போதித்தார்கள் மக்களை மதம் மாற பல பரிசு பொருள்களும் உதவி தொகைகளும் வழங்கினார்கள் .மாறாதவர்களுக்கு பெரும் துன்பங்களும் விளைவித்தார்கள் .உயிர்களுக்கு துன்பம் விளைவிக்க வேண்டாம் என்ற புத்தரின் போதனையை அன்றே அரசியல் ஆதரவோடு பிக்குகள் மீற தொடங்கிவிட்டார்கள் இதை அறிந்த நாகர்கள் கடும் கோபம் கொண்டு கருத்து மோதல்களில் ஈடுபட்டார்கள் .
மகள் வாழ்க்கை பட்ட உறவுகளோடு போரிட்டால் வரும் அழிவுகளை கால கணிப்பு செய்தார்கள் கதிர மலையை ஆண்ட நாக வாணன் மகன், நாக வளை வாணன் சம காலத்தில் ஒரு சோழ நாட்டு திருமணக் கலப்பினாலும் குழப்பத்தில் இருந்தான் .வளை வாணன் மகள் பீலிய வளை சோழ இளவரசன் சோழின் நெடும் கிள்ளியை இந்திர விழாவில் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்தாள்..திருமணம் நடந்தாலும் நாக அரசன் மகளை சோழ நாடு அனுப்ப விரும்ப வில்லை அது மட்டுமன்றி நாகர்களின் வழக்கப்படி பெண்களை கடல் கடந்த நாட்டுக்கு அனுப்ப மாட்டார்கள். ஏற்கனவே அர்ச்சுனன் சித்திராங்கதை விடயத்திலும் இந்த வழிமுறை நடந்தது .ஆனால் அவர்களுக்கு ஆண்பிள்ளை பிறந்தால் சோழ நாட்டுக்கு அனுப்புவதாக மன்னர் உறுதி அளித்தார் அதன் படியே இளம்திரையனை சோழ நாட்டுக்கு அனுப்பி வைத்தார் இளம் திரையன் கப்பலில் புறப்பட்டு போன வேளையில் தான் மூன்றாவது மிகப்பெரிய சுனாமி (கடல் கோள்) ஏற்பட்டு கப்பல் உடைந்தது .இந்த கடல் கோளால் நாகதீபத்தின் பெரும் பகுதி அழிவடைந்தது அந்த வேளையில் தான் நாம் இன்று காணும் சப்த தீவுகளும் ( நயினாதீவு, நெடும் தீவு,அனலை தீவு ,எழுவை தீவு .புங்குடு தீவு வேலணை .ஊர்காவர் துறை என்பன )யாழ் தீப கற்பத்தில் இருந்து பிரிந்தது .இளவரசன் இளம் திரையன் தொண்டையில் ஒரு கொடியால் சுற்றப்பட்டு குற்று உயிராய் கரை ஒதுங்கிய இடமே இன்றைய தொண்டை மானாறு எனப்படும் பிரதேசம் .இந்த கடல் கோளால் ஈழ நாடு பல அழிவுகளை சந்தித்தது .இந்த அழிவுகளில் இருந்து மீளாத கவலையோடு இருந்த வளை வாணன் சமகாலத்தில் அனுராத புர அரசினரோடு போரை தவிர்த்தான். ஆனால் தீசன் மௌரியர்களின் பக்கபலமும் கல்யாணி நாக அரசர்களின் உதவியும் கதிர்காம வேடுவ சத்திரியர்களின் உறுதுணையும் இருப்பதால் மிகவும் துணிவோடு பெளத்தை பரப்புவதில் வேகமாய் செயல் பட்டான் .கடல் கோளால் நாடு பல்வேறு அழிவுகளுக்கு உள்ளாகி இருக்கும் வேளையிலும் மதம் பரப்பும் செயலின் முழுமையாக ஈடுபட்டதீசனுடனும் அவன் தம்பிமாருடனும் சமாதானமாக நாட்டு மக்களை பாதிக்காத வகையில் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட வளைவாணன் தன் மகன் நாக குத்தனையும் அவனது நண்பனான இயக்கர் குலத்து தார தத்தனின் வம்சத்தில் வந்த ஈழ ஊர் என்று அழைக்கபடுகின்ற ஈழத்து உத்தர பிரதேசமான பூநகரியின் இளவரசன் ஈழ சேனனையும் அனுராத புரத்துக்கு அனுப்பி வைத்தார் .
இவர்கள் சிறந்த இரு குதிரைகளில் ஏறி அனுராத புரத்தை அடைந்தார்கள் அங்கு அரசர் அவையில் இவர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை நாக குத்தன் தன் மாமியாருக்கு வணக்கம் தெரிவித்த பின்னர் தனது பேச்சை ஆரம்பித்து நாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவையும் புத்த புக்குகள் செய்யும் தொல்லைகளையும் நமது பூர்வீகர்களின் வழிபாட்டு தலமான மகேசன் திருக்கோவிலை இடித்து மகா விகாரை கட்டியது மிகவும் தவறு என்றும் அதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர் என்றும் நம் மக்கள் படும் துன்பங்களையும் இவற்றை எல்லாம் நாம் நல்ல வழியில் தீர்த்து விட்டால் நாம் சண்டை இட்டு பிரிந்து வாழவேண்டிய தேவை இல்லை என்பதையும் நாம் ஒன்று பட்டாலே நாடு நன்றாக இருக்கும் நாட்டு மக்கள் சந்தோசமாக இருப்பார்கள் என்பதையும் எடுத்து கூறினான் .ஈழ சேனனும் தனது பக்க நியாயங்களை எடுத்து சொன்னான் .ஆனால் தீசனும் அவனது சகோதரர்கள் இவர்கள் தங்களோடு போரிட பயந்து விட்டார்கள் என நினைத்து இவர்கள் பேச்சுக்கு பணியாது மிகவும் இறுமாப்போடு பேசினார்கள் அதில் சூர தீசன் என்பவன் போரிட்டு அனுராத புரத்தை கைப்பற்ற முடியுமானால் கைப்பற்றுங்கள் கோழைகள் போன்று பேசாதீர்கள் என பதில் அழித்தான் கோபம் அடைந்த நாக குத்தனும் ஈழ சேனனும் அவையை விட்டு வெளி ஏறினார்கள் அந்த வேளையில் சபையில் இருந்த வளை வாணன் அக்கா தீசனின் தாயாரிடம் விடை பெற்ற நாக குத்தன் நாங்கள் அப்பாவின் அனுமதி பெற்று வர செல்கின்றோம் .அனுராதபுரத்தில் எங்கள் படை மறுபடியும் வெற்றி கொடி நாட்டும் என்று கூறி சென்றான் .கோபம் கண்களில் கொதிக்க கடுகதி வேகத்தில் குதிரையில் ஏறி கதிரை மலை வந்த இளவல்களை அரண்மைனையில் வர வேற்ற தங்கை பொன்னம்மை நாகச்சியாரிடம் நாக குத்தன் சிவந்த விழிகளோடு கேட்ட கேள்வி அப்பா எங்கே ? நாங்கள்அனுமதி பெறவேண்டும் .என்றான் .அரச சபையில் இருக்கும் தந்தையிடம் இளவல்களை அழைத்து சென்ற பொன்னம்மை அண்ணாவுடன் வந்த ஈழ சேனனை புன்னகை செய் ஒளிமுகத்தோடு விழி வழியில் இடை விடாது பார்த்தாள் .கோபத்தில் சிவந்திருந்த அவன் விழியை கண்டும் அவன் மெய் அழகில் மயங்கி மேனி சிலிர்த்தாள் .அன்றில் இருந்து அவன் கைப்பிடிக்கும் நாளை எண்ணி பொன்னம்மை கண்ணுறங்கி இருக்கமாட்டாள் என்பது அனைவரும் அறிந்ததே !இளவல்களை வரவேற்ற நாக வளை வாணன் கொண்டு வந்த செய்தியை கேட்டு முதலில் அதிர்ந்தே போனார் .அப்பா நமது புராதன மகேசன் ஆலயத்தை இடித்து மகா விகாரையை தீசன் சகோதரர்கள் நிறுவி விட்டார்கள் .இதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதை எம்மாலும் பொறுக்க முடியாது நாம் இதுவரை வழிபாட்டு தலங்களை அரச பிரட்சனைகளில் சம்பந்த படுத்தவில்லை மக்கள் மனங்களை என்றைக்குமே துன்பத்துக்கு உள்ளாக்கவில்லை எம்முடன் அவர்கள் சண்டை போடுவதற்கே மக்களை திசை திருப்புகின்றார்கள் அனுராத புர வீதி எங்கும் பிக்குகள் நடமாட்டம் மக்கள் வீடுகளை பூட்டி வைத்து கொண்டு வெளியே செல்லாமல் இருக்கின்றார்கள் அதனால் பிக்குகள் வீடு வீடாக சென்று தொல்லை கொடுக்கின்றார்கள்.சூர தீசன் எங்களை கோழைகள் என்று பரிகசிக்கின்றான் அதை கேட்ட தீசன் அட்டாகாசமாய் சிரிக்கின்றான் .தீசன் அரச காரியங்களில் இருந்து விலகி பெளத்தை மதம் என்று பரப்புவதில் ஆதரவு கொடுக்கின்றான்.அவன் தம்பி சூர தீசனே அனுராத புரத்தை ஆளப்போகின்றான் . அவன் எங்களை கோழைகள் என்றும் ஆண்மை இல்லாதவர்கள் என்றும் இன்னும் பலவாறாக துஷ்ட வார்த்தைகளால் எங்களை தூற்றினான் நாங்கள் உங்கள் அனுமதிக்காக அவர்களை அங்கு உயிரோடு விட்டு வந்தோம் என்றான் ஈழ சேனன் .மாமி இவற்றை பார்த்து ரசிக்கின்றார் இவற்றை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது நாங்கள் இன்றே அவர்களோடு போரிட புறப்பட போகின்றோம் .அனுமதி தாருங்கள் அரசே ! என்று நாக குத்தன் தந்தையிடம் கேட்கின்றான் .சமாதான வழியில் அவர்கள் வரவில்லையானால் அரச தர்மத்தின் படி நாம் போர் செய்தே ஆக வேண்டும் ஆனால் எமது மக்கள் பாதிக்காத வகையில் போரிட வேண்டும் அதனால் நீங்கள் தேர்சி பெற்ற பன்னிரண்டு படை வீரர்களோடு சென்று அனுராத புர கோட்டைக்குள் புகுந்து முற்றுகை இடுங்கள் நான் உதவிக்கு பின்னர் படை அனுப்புகின்றேன் என்று மகனையும் அவன் நண்பன் ஈழ சேனனையும் வழி அனுப்பி வைத்தார் ,,
வீரமும் விவேகமும் கொண்ட இளவல்கள் தங்களை போல் சிறந்த பன்னிரண்டு வீரர்களை தேர்ந்து எடுத்தார்கள் 12 உயர் ரக குதிரைகளில் ஏறி பொழுது விடியும் முன்னமே பூநகரி கடல் நீர் ஏரி ஊடாக அனுராத புரத்தை நோக்கி சென்றார்கள் ஈழ சேனனுக்கு பூநகரி கடல் நீர் ஏரி மிகவும் பழக்க பட்டது என்பதால் அவனே வழி காட்டிய படி முன்னாலே சென்றான் .அவன் பின்னாலே மற்றைய வீரர்கள் சென்றார்கள். வழியில் ஈழ சேனன் நாக குத்தனுக்கு தனது பூர்வீகர்கள் செய்த தவறுகளை பற்றி சொல்கின்றான் தனது மூதாதை தரா தத்தனின் மகள் குவேனி செய்த தவறாலே விஜயன் என்பவன் நாட்டுக்குள் நுழைந்தான் அவன் வந்ததாலேயே பிற்காலத்தில் அவர்களோடு திருமண உறவுகள் ஆகி பாண்டியர்களும் வந்து சேர்ந்தார்கள் அவர்களின் வருகையாலேயே எம்மவர்களும் அவர்களுடன் சேர்ந்து இலக்கலப்பு ஏற்பட்டது இன்று நாம் நமது தேசத்தின் மீதே படை எடுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது இன்றைய நமது படை எடுப்பு மிகவும் முக்கியமானது இன்று நாம் தீசன் சகோதரரர்களை .வென்றே ஆக வேண்டும் இல்லையேல் நான் உயிரோடு திரும்ப மாட்டேன் எனது மூதாதையர் செய்த தவறால் நீங்களும் துன்பத்துக்கு உள்ளாவதை நினைத்து நான் குற்ற உணர்வோடு வருகின்றேன் நாம் இன்றைய போரில் வெல்வது உறுதி இல்லாவிட்டால் நான் வீர மரணம் அடைவது உறுதி என ஈழ சேனன் சொன்னான் .நாக குத்தன் நண்பா நான் உனக்கு பக்க பலமாக இருப்பேன் தீசன் சகோதரர்கள் எனது உறவினர்களாய் இருந்தாலும் இன்று புதிய வம்சத்தை தோற்று வித்து மதமாற்றம் செய்து எம் இனத்தை துன்புறுத்துகின்றார்கள் .அவர்களை தோல்வி காண வைத்து நமது நாட்டையும் மக்களையும் மீட்க நான் என்றும் உனக்கு உறுதுணையாக இருப்பேன் .
பன்னிரு வீரர்களோடு ஈழ சேனனும் , நாக குத்தனும் அனுராத புர அரண்மனைக்குள் வீராவேசத்தோடு புகுந்தனர். .வளரும் தொடரில் வரலாறு போகும் திசையில் நாமும் பயணித்து பார்ப்போம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக