தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 பிப்ரவரி, 2012

இராவணன் யார்??வால்மீகி சொல்லாத ராவணன் கதை!!


விமானத்தை உலகிற்கு அறிமுகப்படு த்தியவர்கள் யார் என்றால் வில்வர்,ஒலிவர் என்ற ரைட் சகோதரர் என்றே பதிலிருக்கும்.உண்மையில் அதற்கு முன்னே ராமாயாணத்தில் சீதையை ராவணன் புஷ்பகவிமானத்தில் கடத்தியதாக வால்மீகி எழுதியுள்ளார்,அதை கம்பனும் மிகைப்படுத்தி வர்ணிக்கின்றார்.உண்மையில் வச்சிரவாணன்,சிவதாசன் சகோதரரே ஆரம்ப கண்டுபிடிப்பாளராம்!


சுகேசன் என்பவன் குமரிக்கண்டத்தில் உள்ள பெரிய மலையில் கோட்டையமைத்து ஒரு பேரரசை ஆண்டுவந்தான்,அவன் மகேந்திரமலை அல்லது மணிமலை என்றழைக்கப்பட்ட நாகர்குல தெய்வவதியை திருமணம் செய்து மாலி`யாவான்`,சுமாலி  என்ற புத்திரரை பெற்றான்.உரிய பிராயத்தில் மாலி அரசனானான்.இவன் பத்து நாடுகளை வென்று ஒரே கிரீடத்தில் பத்து நாட்டு முடிகளையும் இணைத்து அணிந்திருந்தான்.இலங்கையை மிக அழகாக சிறப்பாக ஆண்டான்.
சுமாலியும் மாதோட்ட நாகர்குல இளவரசி கேதுமதியை மணந்திருந்தான்.இவர்களுக்கு ஆண்பிள்ளை இல்லை,ஒரே மகள் கைகேசி.இதனால் கேதுமதியின் அண்ணனும் புலஸ்தியர் குணவதியின் புதல்வனுமான வச்சிரவாகு ஆட்சிக்கு வந்தான்.வச்சிரவாகு அழகாபுரி இயக்கற்குல தேவகன்னி என்ற இளவரசியை மணந்து வச்சிரவாணனை பெற்றான்.தந்தைக்குப்பின்  இவன் ஆட்சிக்கு வந்து அழகாபுரியையும் இலங்காபுரியையும் ஆண்டான்.பொன்னும் பொருளும் இவனிடம் குவிந்திருந்ததாலும் பெரிய தேசத்தை ஆண்டதாலும் இவனுக்கு குபேரன் என்ற புகழ்ப்பெயர் காலப்போக்கில் ஏற்படலாயிற்று??!!.இவனே சூரியப் பிரகாசம் புஷ்பகவிமானம் என்ற இரு கடல் விமானங்களை விஸ்வகர்மா மூலம் அமைத்திருந்தான்.நாட்டை கட்டிய சிற்பியும் அவரே!!இம்மன்னன் காலத்திலேயே ஈழத்தில் முதன்முதலில் சிவன்கோயில்கள் அமைக்கப் பட்டதாக அறியப்படுகிறது.


வச்சிரவாகு தங்கை கொதுமதி சுமாலி மகளான கைகேசியை இரண்டாம் தாரமாக மணந்து சிவதாசன்(ராவணன்),பரமன்(கும்பகர்ணன்),பசுபதி(விபூஷணன்),உமையம்மை(சூர்ப்பனகை)என்பவர்களை பெற்றான்.வச்சிரவாணன் இலங்காபுரியின் ஆட்சி உரிமைக்குரிய  சிவதாசனிடம் நாட்டையும் புஷ்பகவிமானத்தையும்  கொடுத்துவிட்டு அழகாபுரிக்கு சென்று அதை சிறப்பாக ஆண்டான்.சிவதாசன் மண்டோதரியை மணந்து தம்பிகள் மற்றும் தங்கை மாமாக்கள் மாரீசன் போன்றோரின் துணையுடன் இலங்கையை சீதையை காணும் வரை சிறப்புடன் ஆண்டான்.இவன் கலைகளில் வித்தகன்,வீணையில் இவனை வெல்ல யாருமில்லாதவன்.இவனது புகழை வால்மீகிமட்டுமல்லாது கம்பனும் ராமன் வாயிலாக புகழ்கின்றனர்.சிவா பக்தனான இவன் இமயத்தை பெயர்த்து இலங்கைக்கு கொண்டுவர முயன்றதாக கதையும் உண்டு.கோணமலையில் இராவணன் வெட்டும் ஏழு கிணறும் இவன் கதை சொல்லும்.தேவாரத்தில் இவன்பற்றிய பாடல்கள் உள்ளன.


நன்றி சிவமேனகை!!
பிரதி எடுத்துப் போடுகிறேன் என்பதால் அதை தடைப் படுத்திய தமிழர்களை விட ,ஆரியர் என்றால் உயர்ந்தவர்கள் என்பது அர்த்தம் என்பதை உணர்ந்தும் தவறான கருத்துக்களை மக்களிடம் விதைக்கும் விசங்களை விட மனிதன் குரங்கிலிருந்தே வந்தான் என்ற விஞ்ஞானத்தை ஏற்றவருக்கு தமிழனே  முதற்சந்ததி  என்றதே ராமாயணம் என்பதால் பெருமைதானே.இன்று தேவரும் இல்லை,அசுரரும் இல்லை.குரங்கால் வந்த மனிதனே உள்ளான்.அதன் ஆரம்பம் அறிவிலும் வீரத்திலும் சிறந்த சுக்ரீவன்,வாலி,மாருதி,ஜாம்பவான் இன்னும் பல குரங்குகளே!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக