தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

வெற்றிலையில் இவ்வளவு ரகசியம் ஒழிந்திருக்கா.!

நமது மூதாதையர்கள் அனைத்து காரியங்கள் செய்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று சொல்லி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.
நமது வாழ்க்கையை நெறிப்படுத்தும் தத்துவங்கள் பல வகைகள் உள்ளன.
அதிலும் உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்களும் அதில் அடங்கியுள்ளதால்தான் தாம்பூலம் தட்டில் வெற்றிலையை வைத்து கொடுத்தனர்.
ஆனால் இது வெற்றிலை போடும் பலருக்கு தெரிவதில்லை. அப்படி வெற்றிலையில் என்னதான் இருக்கின்றன என்று பார்ப்போம் வாங்க.
வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான அளவில் கலந்து சுவைத்தால் அதனின் சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய வைக்கிறது. மேலும், இதயத்தை வலுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்:
வாதம், பித்தம், கபம் என்ற மூன்றும் சரியான விகிதத்தில் இருந்தால் நோய் எப்பவும் வராது என்பதைவிட நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு கிடைக்கிறது.
கிருமிகளை அழிக்கும்:
தாம்புலத்தோடு சேர்க்கும் ஏலம் கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் போட்டால் கிருமிகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை பெற்றுள்ளது.
பாலியல் ரீதியான சில பிரச்சனைகளை போக்கும் வல்லமை படைத்தது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Romance-Liveday3
http://www.sudarworld.com/16711

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக