தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 ஜூன், 2017

கலிகாலம் உலகம் அழியும் தருவாயில் : அதிர்ச்சி அளிக்கும் உண்மை

பார்த்தவுடனே பயம்கொள்ளத் தோன்றும் விசயம் இது. என்ன உலகம் அழியப்போகிறதா என்று எள்ளி நகையாடுபவர்களும் இருக்கலாம். அடப்போப்பா இப்படித்தான் மாயன் நாகரிகம் சொன்ன டிசம்பர் 21 உலகம் அழிஞ்சிடும்னு வெளிவந்த கதையெல்லாம் கேட்டு அலுத்துப் போச்சினு நினைக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒன்று நினைவிருக்கட்டும், மாயன்களைக் காட்டிலும் மிகுந்த அறிவு கொண்டவர்கள் நம் முன்னோர்கள் என்பதுதான் அது. நம் முன்னோர்கள் சொன்ன பல விசயங்கள் நடந்துகொண்டே வருகிறது. முன்னோர்கள் வெறும்வாயால் சொன்னால் நம்பமாட்டோம் என்றுதான் அதனுடன் இறை நம்பிக்கையையும் இணைத்து கூறிவந்தனர்.

பொதுவாகவே, இந்து மதத்தின் சில உண்மைகளும், அமானுஷ்யங்களும் இன்றும் கூட அறிவியல் ரீதியாக பதில் தெரியாத புதிராக தான் காணப்படுகின்றது. அப்படி ஒரு இடம்தான் இது. இங்குள்ள ஒரு தூண் விழுந்தால், உலகமே அழிந்துவிடும் என்பதுதான் நமக்கு அதிர்ச்சி அளிக்கும் விசயம். ஆம் … உலகம் அழியப்போகிறதாம்.

உலகம் அழிகிறதா ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் “கேதாரேஷ்வர்” என்ற ஆச்சரிய குகையினை காணலாம். இந்த குகைக்குள் சென்றால் பல மர்ம முடிச்சுகள் அவிழும் என்று கூறப்படுகிறது.

குகைக்குள் மர்மம் குகைக்கு உள்ளே சென்றால் அங்கு நீரினால் சூழப்பட்ட சிவலிங்கம் ஒன்றை பார்க்கலாம். இந்த சிவலிங்கமானது 5 அடி உயரம் கொண்டது. இதன் அருகில் சென்று வழிபடுவது என்பது மிகவும் ஆபத்தானது.

சிரமத்திலும் சிரமம் இந்த சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். சாதாரண சூழ்நிலையில் இதை கடந்து லிங்கத்தை அடைவதே சற்று கடினம் தான். அப்படி இருக்க குளிர் காலங்களில் செவ்லதென்பது மிகவும் சிரமமானது. மேலும் மழைக்காலங்களில் இக் குகையை சென்றடைவது கணிப்புக்கு மீறிய விசயமாகும்.

நான்கு தூண்கள் இந்த சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப் பெற்றுள்ளன. இவை தான் உலகம் அழியப்போவதை கணிப்பதாக கூறப்படுகிறது.

தூண்கள் சொல்லவருவதென்ன? இந்த நான்கு தூண்களும், “சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம்” ஆகிய நான்கு யுகங்களை தெளிவு படுத்துவதாக நம்பப்படுகின்றது. நான்கு யுகங்கள்தான் உள்ளது என புராணம் கூறுவதாக நம்பப்படுகிறது. Dinesh Valke

தூண்கள் இடிந்தால் என்ன நடக்கும் ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழுமாம். தூண்கள் இடிவது என்பது ஒரு யுகம் முடிந்துவிட்டதை குறிப்பதாகும். அப்படியானால் உலகம் அழிகிறதா? rohit gowaikar

3 தூண்கள் 4 வது யுகம் ஒரு யுகம் என்பது நம்மால் அளவிடமுடியாத வருடங்களாகும். பலர் தங்கள் கருத்துப்படி பல்வேறு வருடக் கணக்கை கூறுகின்றனர். ஆனால் இதுவரை மூன்று யுகங்கள் முடிந்துவிட்டதாகவும், நடப்பது நான்காவது யுகம் என்றும் கூறுகின்றனர்.
கலிகாலம் அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என நம்பப்பட்டு வருகின்றது. உலகம் அழிந்தாலும் அந்த அழிவிலிருந்து மனித ஜென்மத்தை காப்பாற்றவும் வழி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக