தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, May 8, 2012

சர்க்கரை நோய்!



1. இன்று உலகைப் பயமுறுத்தி கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நேரடியாக மனிதர்களை பாதிப்பது, தீவிரவாதமோ, அணுகுண்டோ அல்ல.! சர்க்கரை நோய் என்ற கொடிய பிரச்சினை தான். இதை நோய் என்று குறிப்பிட்டாலும், ரத்தத்தில் அதிக சர்க்கரை அல்லது குளுக்கோஸ் என்பது ஒரு இயல்பான மாற்றம் தான் அதாவது குறைபாடு. வரப்போகும் மூளை, இதயம், கிட்னி, கண் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கவிருக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கான அறிகுறி. உலக சுகாதார மையத்தின் சமீபத்திய ஆராய்ச்சி தகவல்களின் படி, இந்தியா தான் சர்க்கரை நோயாளிகளின் ஜனத்தொகையில் நம்பர் ஒன்.!

2. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், டி.பி., கான்சர் போன்ற பல பயங்கரமான வியாதிகள் இருந்தபோதும், நடைமுறையில், வெகுஜன பாதிப்பு சர்க்கரை நோயினால் தான்.

3. வயிற்றில் உள்ள கணையத்தில் ( பான்க்ரியாஸ்) தொடங்கும் பிரச்சினை உடலெங்கும் தொடர்வது, ஒரு மருத்துவ விந்தை. கணையம் சுரக்கும் "இன்சுலின்" என்ற ஹார்மோன் குறைபாடு தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரனமாக அறியப்பட்டது. தொடர்ந்த ஆராய்ச்சிகள், பான்க்ரியாட்டிக் பீட்டா செல்களின் குளுகோஸ் ஈர்ப்புத் தன்மை குறைபாடு ( சென்சிட்டிவிடி & ரெசிஸ்டன்ஸ்) போன்ரவை வலுப்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முன்னேற்ரங்கள்.

4. இந்த இன்சுலினை நேரடியாக உடம்பில் செலுத்த ஊசிகளும், பீட்டா செல் குறைபாடுகளை களைய, பல புதிய, மேம்படுத்தப்பட்ட, சுலமாக எடுத்துக்கொள்ளும் வகையில் மாத்திரைகளும் வந்து கொண்டே இருக்கிறது. ( அவை பற்றி தொடர்ச்சியாக காண்போம்).!

5. இந்தியாவில் இயங்கும் மருத்துவமனைகளில் 4ல் ஒரு பங்கு, சர்க்கரை நோய் குறைபாடுகள் சம்பந்தமாக உள்ள்து...டையாபடிக் கிளினிக்ஸ் & ஹாஸ்பிட்டல்ஸ் என்பது இன்னொரு முக்கிய தகவல்.!

6. வரும் காலத்தில், இந்த இன்சுலினை கணையம் தவிர, உடலின் வேறு ஏதாவது பகுதியில் சுரக்க வைக்க இயலுமா? என்பது பற்றி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடை பெறுகின்றன. கண்டு பிடிப்பவர்களுக்கு நிச்சயம் நோபல் தான். அதன் பின்னர் ஒரு பொற்காலம் மக்களுக்காக காத்திருப்பது திண்ணம்.

7. இதயம், கல்லீரல் போல பல மாற்று அறுவை சிகிச்சை முறைகள் நடை முறையில் உள்ள போதும், "கணைய மாற்று சிகிச்சை"...கைக்கு எட்டாத ஒரு மந்திரம் போல் உள்ளது. மருத்துவ ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக கணைய மாற்று சிகிச்சை சுலபமாயின்...வாயில் கொஞ்சம் சர்க்கரை அள்ளிப் போடலாம்.

நன்றி: நாகேஸ்வரன்

No comments:

Post a Comment