தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 மே, 2012

அருகும் கோரையும்


அருகும் கோரையும்
===============

அருகுகூட நிறையப் பேருக்குத் தெரியும். காரணம் சாணத்தை பிடித்துவைத்த பிள்ளையார் மேல் அருகம் புல்லைக் குத்தி வைப்பார்கள். தற்காலத்தில் கொஞ்சம் பேருக்கு அருகம்புல் ஜூஸ் சாப்பிடுவது நல்லதென்று தெரியும். 

ஆனால் கோரையைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரியாது. கோரைப் பாயைக்கூடத் தெரியாது.

ஆனால் இப்போது நாம் பேசப் போவது விவசாயிகளோடு நெருக்கமான அருகம்புல்லும் கோரையும் பற்றி.

அருகம்புல் ஒரு அற்புத மூலிகை! கால்நடைத் தீவனம். முக்கியமாக அருகம்புல்லை விடக் கால்நடைகளுக்குச் சிறந்த பசுந்தீவனம் இருக்கமுடியாது.

வரப்பு வாய்க்கால்களிலும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் நீர்வளத்தைப் பொறுத்து வளரும்.

எவ்வளவு வரட்சியையும் தாங்கும் எவ்வளவு ஈரத்தையும் தாங்கும். வரட்சியால் அருகு அழியுமென்றால் உலகத்தில் வேறொன்றும் இருக்காது.....

மேலும் வாசிக்க/
 — 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக