தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, October 19, 2017

அரக்கர்கள் தமிழரென்னும் மூடத்தனம் யார் தந்தது?!

பூமி தட்டையானது என்று இந்துக்கள் சொன்னதில்லை,அது கிறிஸ்தவ கொள்கை,பூமி உருண்டை என்று சொன்னவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்,அப்படித்தான் ஜியார்டானோ புரூனோஎரிக்கப்பட்டதும் !!

(இவர் உலகம் உருண்டை, பூமி சுற்றுவதால்தான் இரவுபகல் ஏற்படுகிறது, சூரியன்தான் சூரியமண்டலத்தின் மையம் . சூரியனை மையமாக வைத்தே பூமி சுழன்று கொண்டு இருக்கிறது. விண்வெளியில் தெரியும் விண்மீன்களைப் போன்றதே சூரியன். எல்லா விண்மீன்களுக்கும், பூமிபோல கோள்கள் உண்டு. இந்த பிரபஞ்சம் எல்லையற்றது என்ற கருத்துக்களை உலகத்தின் கண்முன்னே. முதன்முதல் படைத்த விஞ்ஞானி , அதற்காக அவருக்கக் கிடைத்த மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா? ரோம் நகர கிறித்தவ திருச்சபை புரூனோவை உயிருடன் பட்டாசு கொளுத்தி எரித்துக் கொண்டாடியது!)

உருட்டுவதானால் ஒரு ஆரம்பம் ஒரு முடிவு தொடுகை அற்ற தன்மை(பாய் போல)இருக்க வேண்டும் அல்லவா! மேலும் பூமியில்த்தான் கடல் உண்டு,மகாவிஷ்ணு இருப்பதும் கடல்தான் அது பாற்கடல்!அதுதான் விஞ்ஞானிகள் பேசும் பால்வெளி(milkyway),இப்படி நாம் தீபாவளி,சூரன் போர்,இராமாயணம்,மகாபாரதம் போன்றவற்றை அறிவால் ஆராயவேண்டும்!இந்திக்காரன்,வெள்ளைக்காரன் சொல்லிவிட்டான் அசுரர்,அரக்கர் எல்லாம் தமிழர் என்றும் நம் புராணக்கதைகள் நம்ப முடியாதவை என்றும் விஸ்ணு எதற்காக பன்றியாக,மீனாக ....தோன்றவேண்டும் என்றெல்லாம் விதண்டாவாதம் செய்யமுதல் அது பற்றி படித்தறியவேண்டும்!
உயிர்கள் எப்படி தோன்றின என்பதை பத்து அவதாரங்களில் சில குறிக்கின்றன என்று சொல்லப்பட்டுள்ளது!

என் பள்ளி நண்பர்களே அறிவுக்கு வேலை கொடுக்காமல் நரகாசுரன் தமிழன்,தமிழனை தாழ்வு படுத்த ஆரியர் சொன்னகதையே தீபாவளி பற்றிய கட்டுக்கதை என்கின்றார்கள்,கதைதான் ஆனால் அது அறிவுக்காக தமிழரால் தரப்பட்ட கடவுளை மையமாக கொண்ட கதை!நேரடியாக பொருள் சொல்லாமல் அறிவாளர் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய கதைகள் இருந்தால் அவை தமிழர் சொன்னவை என்பதை தமிழரே உணராமைக்கு காரணம் தமிழன் தன் தனித்தன்மையை இனக்கலப்பால் இழந்துவிட்டான் என்பதாலோ!

தமிழன் இராவணன்,சூரன்,இரணியகசிபு ...என அனைத்து அரக்கரும் தமிழன் என்பதை ஏற்று நிற்க அந்த தமிழரின் தாய் தந்தையரின் வம்சம் இவர்கள் ஆரியர் என சொல்லும் கடவுளர்,தேவர்,முனிவராகவே(பார்ப்பனர்)உள்ளமை இவர்கள் அறிவுக்கு விளங்காதுள்ளதுதான் எனக்கு புரியவில்லை!

பிரஜாபதி புலஸ்தியரின் பேரன் விஸ்ரவ முனிவருக்கும்(ஆரியர்?) - அசுர குலத் தலைவர் சுமாலியின் மகள் கேகசிக்கும் பிறந்தவர்களே இராவணன், விபீடணன் கும்பகர்ணன் மற்றும் சூர்ப்பனகை ஆவர். இராவணன் - மண்டோதரிக்கும் பிறந்தவர்கள் இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன் மற்றும் நராந்தகன் - தேவாந்தகன் ஆகியோர் ஆவார்.

சூரபத்மனின் பெற்றோர் தந்தை கஷ்யபர்(ஆரியர்?), தாய் அதிதி,சூரபத்மனின் ஒரே சகோதரி அஜமுகி (ஆடு முகம் கொண்டவள்),சூரபத்மனின் சகோதரர்கள் கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன்.


தீபாவளி என்றால் என்ன?

புராணம் கூறுவது... நாம் நம்பும் புராணக்கதைகளில் ஒன்று.

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிசுணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விசுணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விசுணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விசுணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விசுணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும்.

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்று கொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விசுணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

நரகாசூரன் ஊர் மாகிசமகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் சோதிசா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை தமிழ் அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

சிந்தியுங்கள்.. சிந்தியுங்கள்..

தீபாவளி கதையை எடுத்து கொண்டால் நராகசூரனை [அசுரனை] கொன்றதாகத்தான் கூற படுகின்றது.

அசுரர்கள், அரக்கர்கள், தஸ்யுக்கள், ராட்சதர்கள், குரங்குகள் என்று சொல்லபடுவர்கள் எல்லாம் யார் ?வரலாற்று பேராசிரியர்கள் என்ன சொல்கின்றனர் என்று பார்ப்போம்.

'தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியர் அல்லாதவர்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயண கதையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது [ரோமேஷ் சந்திர தத் எழுதிய ''புராதன இந்தியா ''என்னும் நூல் பக்கம் 52]

ராமாயண கதை என்பது ஆரியர்கள் , தென் இந்திய தஸ்யுக்கள் or தமிழர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதை சித்தரித்து காட்டுவதாகவும் ''
[சிதம்பரம் பிள்ளை எழுதிய 'திராவிடரும் ஆரியரும் ''என்ற நூல் பக்கம் 24].

''தென் இந்தியாவில் இருந்த மக்களே (தமிழர்கள்) தான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும் ,அரக்கர்கள் என்றும் அழைக்க பட்டிருகின்றனர் ''
[விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் என்னும் நூலில் ராமாயணம் என்ற தலைப்பில் 587-589 ம் பக்கம் ].

''ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர்கள் என்றும் , தஸ்யுக்கள் , அசுரர்கள் , என்றும் கூறபட்டிருக்கின்றது.. ஆரியருக்கும் , ஆரியரல்லாதவரும் இருந்து கொண்டு இருந்த அடிபடையான பகமையை பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம் . இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும், அரசியல் வேற்றுமையுமே இந்த பகைமைக்கு காரணம் ''
[டாக்டர் ராதா முகர்ஜி எழுதிய ''இந்து நாகரீகம்''என்னும் நூல் பக்கம் -69].

ராமாயணமும் , மகாபாரதமும் இந்தோ -ஆரியர் காலத்தையும் அவர்களுடைய வெற்றிகளையும் , உள் நாட்டு சண்டைகளையும் பற்றி சொல்வதாகும் ..
[ஜவஹர்லால் நேரு எழுதிய ''டிஸ்கவரி ஆப் இந்திய நூல் பக்கம்-76-77].

''இராமாயணம் என்பது தென்இந்தியாவில் ஆரியர் பரவியதை குறிக்கும் ''
[ஜவஹர்லால் நேரு -அதே நூல் பக்கம்-82].

இந்த வரலாற்று உண்மையை அடிப்படையாக தெரிந்து கொண்டால் நாம் கொண்டாடும் பண்டிகைகளில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட அசுரர்கள் எல்லாம் நம் தமிழ் முன்னோர்கள் என்ற பேருண்மை சூரிய ஒளி போல தெரிந்து விடும் ..

No comments:

Post a Comment