தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 அக்டோபர், 2017

அரணை கடிக்குமா? அது கடித்தால் மரணம் நிகழுமா? எது உண்மை எது பொய்?


”அரணை கடித்தால் மரண தண்டனை”, ”மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மலையிலும் மருந்தில்லை, ஆனால் மடியில் இருக்கின்றது என்று எமது பெரியோர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

உண்மையில் இந்த வாக்கியங்களின் பொருள் நேரடினானவையா என்று சிந்தித்துப் பார்த்தால் இல்லை என்பதுதான் விடை வரும். அப்படியாயின் எதற்காக எமது முன்னோர்கள் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்?

எமது முன்னோர்கள் எம்மை விட புத்திசாலிகள், நவீன உலகுக்குள் தலையைச் செருகியிருக்கும் நாம் இயற்கை தொடர்பான எந்தவொரு தேடலுக்கும் முன்வருவதில்லை. ஆனால் நமது அப்பனும் ஆச்சியும் இயற்கையோடே வாழ்ந்து இயற்கையை நேசித்த காரணத்தினால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணத்தினை வைத்து அது காலாகாலத்தில் அழிவடைந்து போகாமல் இருக்க புடம்போடல்களை வைத்திருந்தார்கள்.

அரணை கடித்தால் மரண தண்டனை என்று சொன்னமையானது, அரணை இலகுவில் யாரையும் நெருங்கி வந்து கடிக்காது, அப்படி கடித்தாலும் யாருக்கும் எதுவும் நேராது. தப்பித்தவறிக் கடிக்கும் அரணைகளை கல்லால் எறிந்து கொன்றுவிடுவார்களாம். இதனாலேயே அரணை கடித்தால் மரன தண்டனை என்று புடம்போட்டார்கள்.

மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மலையிலும் மருந்தில்லை என்று சொன்னதும் ஒரு புடம்போடல் தான். அதாவது மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மலையில் எல்லாம் மருந்து தேடி அலையவேண்டிய அவசியம் இல்லை, அதற்கு மடியிலேயே தகுந்த மருந்து இருக்கிறது. அதுதான் சுண்ணாம்பு என்றனர் எம் முன்னோர்.

சரி அரணை பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

அரணை (skink) என்பது சின்சிடே (Scincidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல்லி இன ஓந்திகளாகும். இவை வறண்ட இடங்களில் வசிக்கக் கூடிய உயிரினமாகும். வெப்பமான வேளைகளில் மட்டுமே இவை வெளியில் இயங்குகின்றன. இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ, பொந்துகளிலோ நுழைந்து கொள்ளும். நீண்ட குளிர்காலங்களில் பொந்துகளில் நுழைந்து கொண்டு நுழைவுப் பகுதியை பாசியால் அடைத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கத் தொடங்கிவிடும்.

அரணையின் தோல் உலர்ந்தது. கொம்புச் செதில்கள் எனும் படிவைக் கொண்டு மூடிக் கொண்டிருக்கும். இத்தோல் அதன் உடலை வறண்ட காற்றில் நீர் ஆவி ஆகாதபடி காக்கிறது. இவை தோலினால் மூச்சு விடுவதில்லை. கோடை காலத்தில் அரணை அடிக்கடி தோல் உரித்துக் கொள்ளும். உள்ளிருந்து வளரும் புதிய படிவு பழைய தோலுக்கு அடியில் உருவானதும் தோலின் கொம்புப் பொருளிலான படிவு சீரற்ற துண்டுகளாகப் பிரிந்து விழுந்து விடுகின்றன.

இவ்வாறான அரணை மிகவும் சாதுவான ஒரு பிராணியாகும். அது மனிதர்களைக் கண்டால் ஓடி மறைந்துவிடும். அரணைக்கு மறதிக் குணம் அதிகமாம். அதாவது தான் கடிக்கவேண்டும் என்று எதிர்பார்த்த ஒன்றை நோக்கி மெதுவாக வருமாம். ஆனால் கிட்ட வந்ததும் தான் நினைத்துவந்த காரியத்தை மறந்துவிட்டு வந்த வழியே திரும்பிவிடுமாம்.

அரணை தன் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க உரிய நேரத்தில் தனது வாலினை ஒடித்துவிட்டு தப்பிடிடுமாம். இத்தகைய அரணை சாதாரணகாக பல்லிக் குடும்பத்தைச் சேர்ந்த ஓந்தி இனமாதலால் அது கடிக்கவும் மாட்டாது, கடித்தாலும் விஷமும் ஏற்படாது.

கடவுள் படைத்த இந்த உலகத்தில் எந்தவொரு உயிரினமுமே தீங்கான சிந்தனைகளைக் கொண்டிருப்பதில்லை. அவற்றின் தேவைகளும் அவசியங்களும்தான் மற்ற உயிரினம்மீதான ஆதிக்கத்தினைச் செலுத்தவைக்கின்றன.

விஷம் என்பதற்காக நாம் பாம்புகளை ஒதுக்கி வைக்கிறோம், ஒவ்வாமை ஏற்படும் என்பதற்காக சில பிராணிகளை அருவருப்போடு தள்ளி வைக்கிறோம். ஆனால் மனிதப் பிறவியினை எடுத்த நாம், எம்மால் அழிக்கப்படும் எத்தனை தரைவாழ் நீர்வாழ் பிராணிகளால் தள்ளிவைக்கப்படவேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?


”அரணை கடித்தால் மரண தண்டனை”, ”மண்ணுண்ணிப் பாம்பு கடித்தால் மலையிலும் மருந்தில்லை, ஆனால் மடியில் இருக்கின்றது...

http://www.manithan.com/living/04/145018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக