தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 அக்டோபர், 2017

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்பது ஏன்?


சிவன் கோவிலில் குறிப்பாக பிரதோஷ காலத்தில் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என சொல்வதுண்டு.

இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

நந்தி கர்ப்பகிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும், இது சிவனின் வாகனம், ஜீவாத்மாவை குறிக்கும்.
ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பதே, எனவே நந்தியின் குறுக்கே செல்வது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும்.
அதுமட்டுமின்றி நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
எனவே தான் கோவிலின் முதல்வனாக திகழும் நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை வழங்கப்படுகிறது.
 சிதம்பரம்_நடராஜர்_கோவில்_நந்தி_சிலை

http://news.lankasri.com/religion/03/134547

நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா?


சிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.

காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. இதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

பிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார். புரிந்துவிட்டதா? இனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள். அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும். 
http://www.maalaimalar.com/Devotional/Worship/2016/06/27140527/1021734/Nandi-impediments-know-why.vpf

கோவை_செம்மொழி_மாநாடு-_தஞ்சாவூர்_நந்தி_-_மாதிரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக