தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

இராமனின் பிறப்பு,,


இராமனின் பிறப்பு,,

அயோத்தியை அறுபதாயிரம் ஆண்டுகள் ஆண்டானாம் தசரதன்,,, 
இவனுக்கு அறுபதாயிரம் மனைவிகள்,,,
அதுபோக, கோசலை கைகேயி, சுமத்திரை என்று மூன்று மனைவிகள்,,

குழந்தைப்பேறு இல்லாத தசரதன், வசிஷ்ட முனி மூலமாக, அசுவமேத யாகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் (!!??) என்று அறிந்தான்,,

அதில் வல்லவனான கலைக்கோட்டு முனிவனை அழைத்து வந்தார்கள்,சரயு­ நதிக்கரையில் யாகம் தொடங்கியது,,

கோசலை யாகக்குதிரையை சுற்றிவந்து அதனை மூன்று துண்டுகளாக வெட்டிக் கொன்றாள்.குதிரை­ முண்டங்களுடன் இரவு முழுதும் இன்பமாக இருந்தாள்,,

மறுநாள் தசரதன் கலைக்கோட்டு முனிவனின் எடுபிடிகளான அத்வர்யு,ஹோதா, உகதா ஆகியோருக்கு தன் மனைவிகள் மூவரையும் தற்காலிக தானம் செய்தான்,,

முனிவர்கள் மூவரும் தசரதன் மனைவியருடன் கூடிக் களிப்புற்றனர்,,

பின்னர் தர்மபத்தினிகள் மூவரும் கருவுற்றனர்,,
இக்கருக்களின் உருக்களே ராமனும் அவன் இளவல்களும்,,,

---ஆதாரம்-வால்ம­ீகி ராமாயணம் 14 ஆம் சருக்கம்,, மொழிபெயர்த்தவர்­ பண்டித அனந்தாச்சாரியார­்,,


கடவுளாக முன்னோரை அதுவும் நம் முன்னோரை கொண்டாடுதல் தவறில்லை,ஆனால் உண்மை தெரிந்து கொண்டாடினால் மதிப்பாகும்,இதை அசிங்கமாக நினைத்து எழுதுபவர்கள் தெய்வமாக மதிக்கும் வெள்ளையரும் பலருடன் பாயை பகிர்கிறார்கள்,குழந்தை பெற்றது யாருக்கு என்று தெரியாமல் நேற்றுவரை அவதியும் பட்டுள்ளார்கள்.பல ஆயிரமாண்டுகளுக்கு முன்னால் நடந்ததை உள்ளபடி எழுதிய வால்மீகி,அதை மதிக்கும் மக்கள் கௌரவத்துக்கு உரியோரே!!நம்மவர் போல நேற்று நடந்ததையே திரிக்காமல் இருந்த நல்லவர்கள் அவர்கள்,பின்னர் கம்பன் திரித்தான்!!அவன் தமிழன்!ஆனால் அன்றே எழுதும் படிக்கும் திறனில் அவர்கள் இருந்துள்ளார்கள்!!ஞாபக சக்தி கொண்டிருந்ததால் செவி வழியாக இன்றுவரை இக்கதைகள் தொடர்கின்றன என்றெல்லாம் அறிவு பூர்வமாக பார்க்கையில் அவர்கள் அறிவாளிகள்,இவர்கள் ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக