தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 26, 2013

ஆண்கள் கவனத்துக்கு ஏழு செய்திகள்!


ஆண்கள் கவனத்துக்கு ஏழு செய்திகள்
**********************************

1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.

2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.

3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.

4. ஒருவன் கடவுளிடன் இரண்டு வரங்கள் கேட்டான், உலகிலேயே மிகச் சிறந்த மதுவைக் கையிலேந்திய உலகிலேயே மிகச் சிறந்த பெண் என்னருகில் வேண்டும். கடவுள் வரமளித்தார். மதுவை கையில் வைத்துக் கொண்டிருந்தது கருணைக் கடல் அன்னை தெரசா. ( கேட்பதைத் தெளிவாகக் கேளுடா முண்டம் என்று கடவுள் உள்ளுக்குள் பேசியிருப்பார் உரக்க. )

5. அசத்தல் செய்தி சோகச் செய்தியாவது எப்போது ?அழகான காதலி, காதலனிடம் வந்து ‘உன் நண்பர்கள் அத்தனை பேரையும் விட நீ தானடா அற்புதமாய் முத்தமிடுகிறாய்’ என்று அவன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையிலேயே சொல்வது !

6. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.

7. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ?

அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

No comments:

Post a Comment