தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 10 அக்டோபர், 2012

மரணத்துக்கு அப்பாலும் ஆத்மா வாழ்கிறது!!


"ஹே.. கிருஷ்ணா..! அபிமன்யுவின் மரணம் என்னை கொல்கிறது..! சொர்க்கத்து சென்று அவன் எப்படி இருக்கிறான் என்பதை பார்த்தாலே நான் நிம்மதி அடைவேன்..!" என்றான் அர்ஜூனன். கிருஷ்ணரும் சொர்க்கத்துக்கு அர்ஜுனனை அழைத்து சென்றார். அங்கே அபிமன்யு பூங்கொடி ஊஞ்சலில் ஊஞ்சால் ஆடிக்கொண்டு இருந்தான்.
"மகனே..!" என்று கதறி ஒடி தழுவினான் அர்ஜூனன். அவசரமாய் விலத்தி விட்டு "யார் நீ..?" என்றான் அபிமன்யு. ஆச்சரிய விழியோடு கிர
ுஷ்ணன் முகம் திரும்பி பார்த்தான் அர்ஜூனன்.
புன்னகையோடு கிருஷ்ணர், "ஆம்.. அர்ஜூனா..! மரணத்தோடு உன் உறவு.., பாசம்.. அனைத்தும் அவனுக்கு முடிந்து விட்டது.. இப்போது நீ யார் என்பதே அவனுக்கு தெரியாது. ஆனால் நீதான் வீணாக வருந்தி கொண்டு இருக்கிறாய்..!" என்றார்.

உயிருடன் சொர்க்கத்துக்கு செல்லலாமா அது சாத்தியமா என்ற ஆய்வுக்கு போகாதீர்கள். இதில் அவர்கள் உங்களுக்கு என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள்.

மரணத்தோடு நம் உறவுகள் முடிந்து விடுகிறது.. ஆனால் அதற்கு அப்பாலும் நாம் இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக