தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 அக்டோபர், 2012

லிங்கம் விளக்கம்


லிங்கம் விளக்கம்: 
நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. 
***www.fb.com/thirumarai
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்களும் இல்லாதது. 

மனம்,சொல்,செயல் இவற்றிற்க்கு மேல் வேறொரு உயர்வான நிலை இல்லை எனுமளவிற்கு உயர்ந்தது.

உருவமற்றது.

ஆகவே இன்னதென நம்மால் சுட்டிக்காட்ட இயலாதது.
அதுவே அனைத்துமானது,
பற்பல குணாதிசயங்களைக் கொண்டது.
நிறமில்லாதது,
அழிவென்பதே இல்லாதது,
ஈரேழு உலகங்களும் தோன்ற அழிய காரணமாயிருப்பது,
இதுதான் எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையை நமக்கு கொடுக்காதது.

இத்தகைய நம் அனைவரையும் இயக்க வைக்கும் சக்தியை நாம் பரமசிவம் என்றால் எல்லோரும் அறிந்தது என பொருள் படும்.

மேற்சொன்னவாறு ஐம்புலனில்லாத எட்டாத நிலையைக் கொண்ட,
இதற்கு மேல் வேறொரு உயர்ந்த நிலையினை சுட்டிக்காட்ட முடியாத,
உலகம் தோன்ற அழிய காரணமான
இதனை உருவம் உள்ளது அதாவது 'சகளம்' என்றும்,
உருவமற்றது அதாவது 'நிட்களம்' என்றும் பிரிக்கலாம்.

மேற்ச்சொன்ன சகலநிட்கள நிலையையே நாம் லிங்கம் என்போம்.

லிங்கம் சிவரூபம் அதாவது மேலேயுள்ளது.

அது பொருந்தியிருக்கும் பீடம் சக்தி வடிவமாகும்.
பொதுவாக லிங்கத்தை ஞான சக்தியின் மறுவடிவமாக கொள்ளலாம்.
இத்தகைய ஞான சக்தியின் மறுவடிவமான லிங்க உருவமே சிவபெருமானின் உடலாகும்.

லிங்கம் மூவகைப்படும் .
அவ்வியக்தம், வியக்தம், வியக்தாவியக்கம்.
இதில் கை, முகம் வெளிப்படாமல் இருப்பது அவ்வியக்தம், வெளிப்படுவது வியக்தம்.
அருவுருவத் திருமேனியுடையது வியக்தாவியக்தம். சிவலிங்கத்தின் உருண்டையாக இருக்கும் பகுதி ருத்ரபாகம் என்றழைக்கப்படும்.

பீடத்தின் கீழாக உள்ள நான்கு மூலையும் பிரம்மபாகம்.
பீடத்தில் லிங்கம் பொருந்தியுள்ள எட்டு மூலையும் திருமால்பாகம்.
ருத்ரபாகம் ஆணாகவும்,
திருமால்பாகம் பெண்ணாகவும்
பிரமபாகம் பேடு எனவும் குறிக்கப்படும்.

கன்ம சாதாக்கியம் என்பதற்கேற்ப
லிங்கத்தின் நடுவே சதாசிவனும்,
மேற்கே ஈசனும்,
வடக்கே பிரம்மனும்,
தெற்கே திருமாலும்,
கிழக்கே ஈசனும் அமைந்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக