தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய ராஜேந்திர சோழன்!


இந்திய சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்புயுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோதுஎதிரிகள் மீதுபடையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள்இருந்தார்கள்.
வடக்குப்படையெடுப்புகளால்முடக்கப்பட்டபோது,தெற்கைஎட்டுத்திக்கிலும்பட்டொளி வீசிப்பறக்கும் பளபளக்கும்சாம்ராஜ்யத்தை உருவாக்கி தகதகவென மின்னும்தந்தையும்மகனும் வந்தார்கள்அவர்கள் வாள் வீச்சுவடக்கையும் தாக்கியதுகடல் கடந்தும் தாவியதுவேழம்அவர்களுக்கு வெள்ளாடாகவும்மலைகள் அவர்களுக்குமண்மேடாகவும் காட்சியளித்தன.
வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக்கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன்இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும்படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான்.அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்கமுடியவில்லைஇன்றைய ஹைதராபாத்ஒடிஸா,வங்காளம் எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன்மண்டியிட்டன’ என்று, ‘வந்தார்கள்-வென்றார்கள்’ என்றசரித்திரம் படைத்த சரித்திர நூலில் மதன் குறிப்பிடுகிறார்.அவர் எழுப்பியுள்ள வினாவைப்போல கஜினியும்,ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால்இந்தியாவின்வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும்ஆனால்ராஜேந்திரனின் ஆர்வமோ மலேயாசுமத்திராவைக்கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது.
எவரும் சிந்திக்காத திசையில் ராஜேந்திர சோழனால்மட்டும் எப்படி யோசிக்க முடிந்ததுவாளைச்சுழற்றிக்கொண்டு வான் முட்டும் வீரமுழக்கம்இட்டுக்கொண்டு எப்படி வங்கம் வரை செல்ல முடிந்தது?காரணம் எளிதுஎதிரியாய் எண்ணி அவர்கள் பலங்களைத்துல்லியமாகக் கவனித்துஅவற்றை உடைக்கும்வலிமையை உருவாக்கிக் கொண்டான்வெளிநாடுகளில்சிம்ம கர்ஜனை புரிந்து சீறி எழுந்து அந்நாட்டு வீரர்களைதுவம்சம் செய்ய அவனால் எளிதில் முடிந்ததற்குஅவனுடைய இந்த உத்தியே காரணம்.
போர் என்பது உடல்களுக்குள் நடக்கிற யுத்தம் மட்டுமல்ல,அது மனங்களிடையேயும் நிகழும் மல்யுத்தம் என்பதைஅவன் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான்.அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தையும்முன்கூட்டியே ஊகித்து அவற்றைக் கச்சிதமாக உடைத்துத்தகர்த்தவன் அவன்.
தந்தை ராஜராஜன் என்கிற மாபெரும் நிர்வாகிஉருவாக்கித்தந்த அடித்தளமும்ஈட்டிய செல்வப்பொதியும்,உண்டாக்கிய நிலநிர்வாக முறையும்அடிக்கல் நாட்டியகடற்படையும் அவனுக்குப் பரந்துபட்ட வாய்ப்பைஉருவாக்கியதுஅதில் மளமளவென கட்டுமானம் செய்துஉயர்ந்த கோபுரத்தை அவனால் எழுப்ப முடிந்தது.
ராஜேந்திரசோழனின் சாகசங்கள் சுவாரசியமானவை.அவனும் அவன் தந்தையும் ராஷ்டிரகூடர்களைப்போர்க்களத்தில் ஓட ஓட விரட்டியவர்கள்வடமேற்குக்கர்னாடகாதெற்கு மகாராஷ்டிரம் ஆகியவற்றில் சோழசாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர்துங்கபத்ராவைத் தாண்டிசாளுக்கியர்களை வீழ்த்தினார்கள்பனவாசிமனயகேடாநாட்டு மன்னர்கள் சோழர் படைகள் வருவதைக்கண்டதும்பயந்துபோய் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒளிந்துகொண்டார்கள்வடக்கு ஹைதராபாத்தையும்கைப்பற்றினர்.
பராந்தகன்பாண்டியர்களைப் பந்தாடிய போதுபயந்து ஓடியபாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் மகுடத்தைஒப்படைத்து ஓடிப்போனான்அதைத் தன் படையெடுப்பில்மீட்டான் ராஜேந்திரன்சிங்களமன்னனின் மகுடத்தைத்தட்டிப்பறித்து அவனைக் குறுகச் செய்தான்சிங்கள மன்னன்ஐந்தாம் மஹிந்தனைக் கைது செய்ய... அவன் 12 ஆண்டுகள்சோழர் சிறையில் இருந்து இறந்துபோனான்.
பாண்டியர்களையும்சேரர்களையும் அமுக்கி வைத்துக்கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான்பிறகு தன் மகனைஜயவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில்மதுரையின் ஆளுநராக நியமித்தான்ராஜேந்திரன்கலிங்கத்தை வென்றான்அப்போது கோதாவரிக்கரையின்படையின் பின்வரிசையில் அவனே நின்று பகைவர்கள்தாக்காதபடி பாதுகாப்பு வளையம் அமைத்தான்வங்கமன்னன் மஹிபாலாவை போர்க்களத்தில் வென்றான்.
ராஜேந்திரசோழன் இயல்பாகவே துணிச்சலும்வீரமும்கொண்ட தளபதிபோரின் நுணுக்கங்களையும்,அசைவுகளையும் சரியாகக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன்.எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்ட அவன் எப்படிப்போர்க்களத்தில் அவனை எதிர்த்து வந்த மதம் பிடித்தயானையை தனியொரு வீரனாக வெட்டிச் சாய்த்தான்என்பதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்அதுவரைதமிழகத்தில் படை திரட்டுவது என்கிற பழக்கமே இருந்தது.ஆனால் ராஜராஜன் நிலையான படையை உருவாக்கி,அதில் இருக்கும் வீரர்களை செதுக்கி செதுக்கி சிறந்த திறன்கொண்டவர்களாக மாற்றினான்அவனுடைய மகனும்அவர்கள் எப்போதும் கூர்மைப்படுத்தப்பட்ட குத்தீட்டியாகத்திகழும்படி போர்களை வடிவமைத்தான்ராஜேந்திரன்காலத்தில் சோழப்படை துளியும் ஓய்வின்றி தொடர்ந்துபோர்க்களத்திலேயே கழித்ததுஆனாலும் அவர்கள்அலெக்ஸாண்டருடைய வீரர்களைப்போல ‘ஹோம் சிக்என்று அடம்பிடிக்கவில்லை.
ராஜேந்திரனுடைய வங்கப்படையெடுப்பு அவனுடையகடற்படை தெற்காசிய நாடுகளுக்குப் படையெடுப்பதற்கானமுன்னோட்டமாகவே இருந்ததுபிற்காலச் சோழர்கள்இந்தியப் பெருங்கடலையும்வங்காள விரிகுடாவையும்நிலப்பரப்பாக நினைக்குமளவு கப்பல் கட்டும் பணியில்தேர்ந்து விளங்கினர்கடலும்காற்றும் அவர்கள்கலங்களுக்குக் கட்டுப்பட்டனஅவர்கள் கடல்களைத் தங்கள்கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்இரவும் பகலும் சோழக்கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவணிகக்கப்பல்கள்பத்திரமாகப் பயணிக்கப் பாதுகாப்பு அளித்தனஅதுவரைஅப்படியொரு அமைப்பு தமிழகத்தில் விரிவாகஏற்படுத்தப்படவில்லைவர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்டநாவாய்விரிவுபெற்று சக்தி வாய்ந்த கடற்படையாகஉருவம் பெற்றது. ‘சோழர்கள் கடலின் தோழர்கள்’ என்றநிலை ஏற்பட்டது.
பத்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் மூன்று புதிய சக்திவாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயினஎகிப்தில்பாட்டிமிட்ஸ்சீனத்தில் சாங்இந்தியாவில் சோழர்கள்.மூவருமே இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் பெருமளவுஈடுபட்டனர்வரலாற்று ஆசிரியர்கள்சோழர்கள்தெளிவாகவும்உறுதியாகவும் ஒவ்வொரு அடியையும்எடுத்து வைத்து கடற்படையெடுப்பை நடத்தியதாகசிலாகிக்கிறார்கள்அவர்கள் ஒருபோதும் அவசரக்கோலத்தில் படையெடுப்பு நிகழ்த்தவில்லைஎந்தப்போர்க்களத்திலும் சின்ன சிராய்ப்புகூட ஏற்படாமல்சோழப்படை தொடர்ந்து வெற்றிக்கொடியையே நாட்டியது.இலங்கையும்மாலத்தீவுகளும் அவர்களுடைய கடல்வணிகத்திற்கு முக்கிய மையங்களாகத் தேவைப்பட்டன.ஒரிஸாவங்கம் போன்ற நாடுகளும் அவர்களுடையகடல்வணிகத்தைத் தடைசெய்து அவ்வப்போதுவியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததால்ஏற்பட்ட எரிச்சலால் அவற்றை அடித்து நொறுக்கி, ‘வாலைச்சுருட்டிக்கொண்டு இருங்கள்இல்லாவிட்டால் நான் வாளைஉயர்த்தவேண்டியிருக்கும்’ என்று எச்சரிப்பதற்காகவேராஜேந்திரன் படைகளுடன் திக்விஜயம் செய்தான்.
சோழர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அமைதியாகவாழமுடியும் என்கிற சூழல் தெற்காசிய நாடுகளுக்குஏற்பட்டதுஆர்ப்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில்ஆழிப்பேரலை வந்ததைப்போல் ஆரவாரம் நிகழ்த்தும்.பிரளயம் போன்ற பேரோசையுடன் கம்பீரமாய் நீரைக்கிழித்துச் செல்லும்சோழர்கள் நாவாய் புறப்பட்டால்,கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூடஇடமில்லாத அளவு மரக்கலங்கள் அணிவகுக்கும்.அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே எதிரிநாட்டுமன்னர்கள் நடுங்கி ஒளியுமளவு அவை காட்சியளித்தன.அங்கோர்வாட் மன்னன் முதலாம் சூர்ய வர்மன்விசுவாசத்தை நிரூபிக்கஎதிரிகளை வதைக்கஉபயோகப்படுத்திய அவனுடைய சொந்தத்தேரைராஜேந்திரனுக்குப் பரிசாக அளித்து தாஜா செய்தான்.
கடாரத்தை ஆண்ட ஸ்ரீவிஜய ராஜ்ஜியத்திற்கும்சோழர்களுக்குமிடையே நட்புறவு இருந்துவந்தது.ராஜராஜன் காலத்திலிருந்து விலையுயர்ந்த பரிசுகளைச்சோழர்களுக்கு அளித்துஅவர்களிடம் கடார மன்னர்கள்கடமைப்பட்டவர்களாகவே காட்டிக்கொண்டனர். 1016ம்ஆண்டு ஸ்ரீவிஜயம் ஜாவாவை வீழ்த்தியவுடன்சீனத்துடன்தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பெரும் சக்தியாக ஊடுருவப்பார்த்தார்கள்ராஜேந்திரன் சீனத்திற்கு 1020ம் ஆண்டு ஒருதூதுக்குழுவை அனுப்பிசாங் சாம்ராஜ்ய மன்னன் எந்தவகையிலும் கடற்படையெடுப்புக்கு ஊறுவிளைவிக்காதவாறு பார்த்துக்கொண்டான்அதுதான்அவனுடைய ராஜதந்திரம்ஏற்கெனவே 1022-23ம்ஆண்டுகளில் கலிங்கம் மூலமாக கங்கைவரை சென்றுஎச்சரிக்கை செய்துதான் எடுக்கவிருக்கும் படையெடுப்புக்குஇடைஞ்சலில்லாமல் பார்த்துக்கொண்டான்.புலிவேட்டைக்குப் போகும்போதுஎலிகள் வந்தால்அவற்றை நசுக்க சக்தி விரயமாகுமே என்பதால்தான்.
1025ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் நாட்டிற்குச் சோழக் கடற்படைபுறப்பட்டதுஒவ்வொரு கப்பலிலும் திறம் வாய்ந்ததேர்ந்தெடுக்கப்பட்ட சோழ வீரர்கள்வாளைச்சுழற்றுவதிலும்அம்பில் பந்தத்தைச் சுற்றிநெருப்புக்கோளங்களை குறி தவறாமல் எறிவதிலும்அவர்கள் கில்லாடிகள்உணவுஉடைஆயுதம் என்றுநுணுக்கமாகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளுடன்அந்தப் படையெடுப்பு முடுக்கிவிடப்பட்டதுஏற்கெனவேபரிச்சயமான வழியில்ஏதோ பள்ளிக்குப் போவதைப்போலபதற்றமில்லாமல் பயணம்சோழர்கள் வழியில் மலாய,சுமத்ரா என்று அவர்கள் அத்தனை துறைமுகங்களையும்அடித்து நொறுக்கியவாறு முன்னேறினர்சீனத்துடன்தொடர்பில்லாமல் இருந்த அந்த நாடுகள்சீன உதவியையும்கோரமுடியவில்லை.
நேர்த்தியாக வாள் வீசும் வாள் பெற்ற கைக்கோளர்களும்,குறி தப்பாமல் அம்பை இலக்கில் சரமாரியாகச் செலுத்தும்வில்லிகளும் எதிரிகளை வெட்டிச்சாய்த்தும்,குத்திக்கிழித்தும் கடலைச் சிவப்பாக்கும் வேலைகளைச்செய்தனர்கடாரம் படையெடுப்பின்போது ராஜேந்திரனேசோழப் படையின் தளபதியாய் இருந்தான்ஸ்ரீவிஜயசாம்ராஜ்யம் சோழப் படையெடுப்பில் ஆடிப்போனது.சோழர்களின் மரக்கலங்களை எதிர்த்து புறப்பட்டு வந்தஸ்ரீவிஜயக் கப்பல்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்தஎரியம்புகளாலும்தீப்பந்தங்களாலும் சேதமடைந்துசின்னாபின்னமாயினராஜேந்திரனின் வீரர்கள் விட்டஅம்புகள் கப்பல் செலுத்தியவர்களின் கழுத்திற்குக் குறிவைத்தனசீறிப் பாய்ந்த சோழவீரர்கள் அந்தப் படகில்இருந்த கடார சிப்பாய்களைக் கண்டந்துண்டமாக வெட்டினர்.கடார சிப்பாய்களின் கால்சராய் நனைய கடல் மட்டம்உயர்ந்ததுசோழப்படையின் வேகமும்புயல் போன்றதாக்குதலும் அவர்களை கதிகலங்க வைத்தன.கடாரத்தையும்ஸ்ரீவிஜயத்தையும் சோழர்படைசூறையாடியது.
அந்நாட்டு மன்னனே கைதியாகும் சூழல் ஏற்பட்டதுசங்க்ரமவிஜயதுங்கவர்மன் சிறைபிடிக்கப்பட்டான்ராஜேந்திரனின்கால்களில் விழுந்து விடுதலை பெற்றான்கப்பற்படைதிரும்பி வரும் வழியில் மலேயாசமிரிநிக்கோபார்தீவுகளையெல்லாம் வெற்றிபெற்றுத் திரும்பியது.
ராஜேந்திரனுடைய தொடர் வெற்றிபடை பலத்தாலோஉணர்ச்சியும்உள்ளுணர்வு மிக்க வீரர்களாலோ மட்டும்விளையவில்லைஅது நேர்த்தியான ஒருங்கிணைப்பின்பலன்பல்லாண்டுகள் சிறிது சிறிதாக வடிவமைக்கப்பட்டவெற்றிக்கோட்டைஎதிரிகள் என்ன செய்வார்கள் என்பதைமுன்கூட்டியே ஊகித்து அந்தத் தடைகளைஅப்புறப்படுத்திவிட்டு சுற்றுலா போவதைப்போல அவன்படைகள் சென்றுவர ஏற்பாடுகள் செய்தான்அவனுக்குஅவனே எதிரியாய் எண்ணி செயல்பட்டதால்எதிரிகள்அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லைஅவன்பெருமைக்காகப் படையெடுக்கவில்லைஅந்த நாட்டின்மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற எண்ணம்ஒவ்வொரு வீரனின் உள்ளத்தில் ஏற்பட்டதாலும்,பொருளாதாரம் மேம்படும் பொது நோக்கமிருந்ததாலும்அவன் வெற்றியைத் தவிர வேறெதையும் சந்திக்கவில்லை
நன்றி : Mehandran Hari

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக