தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

இந்த கண்களில் ஒன்றை தெரிவு செய்யுங்க: உங்கள பத்தி நாங்க சொல்றோம்


சில புகைப்படங்கள் உங்கள் குணாதிசயங்கள் மற்றும் திறமையை வெளிக்காட்டி விடும்.
அப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறு கண்களில் ஒன்றை தெரிவு செய்தால் அதில் கூறப்பட்டுள்ள குணாதிசயங்கள் உங்களுடையதோடு ஒத்து போவதை நீங்கள் காணலாம்.
இந்த கண் உங்கள் தெரிவு என்றால் நீங்கள் வெளிப்படையானவர் என அர்த்தம், நீங்கள் மற்றவர்களுடன் எளிதாக இணைவதோடு அவர்களின் இதயத்தில் உடனடியாக இடம் பிடிப்பீர்கள்.
எந்த விடயத்திலும் ரிஸ்க் எடுக்க தயங்காத நிலையில் அதனால் ஏற்படும் பாதிப்பை கண்டும் நீங்கள் பயப்படமாட்டீர்கள்.
மற்றவர்களுக்கு உதவும் மனபான்மையோடு, உங்கள் பிரச்சனையை வெளியில் சொல்லாமல் நீங்களே முடித்து கொள்ளும் பக்குவமும் உங்களுக்கு இருக்கும்.

இரண்டாவது கண்ணை நீங்கள் தெரிவு செய்த பட்சத்தில் உங்கள் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் நீங்கள் நேர்மையானவர்.
ஒருவரின் செயல் இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் நம்புவீர்கள்.
அநீதி மற்றும் சமூகத்தில் நிலவும் அனைத்து தீமைகளையும் நீங்கள் உற்று நோக்குவீர்கள். இருப்பினும், அந்த வலியை உள்ளேயே வைத்து கொண்டு, அதை அடிக்கடி வெளிகாட்ட விரும்பமாட்டீர்கள்.

மூன்றாவது கண் உங்கள் தெரிவாக இருந்தால், உங்களுக்கு கடந்தகாலத்தில் பெரிய குழப்பங்கள் இருந்திருக்கும். அதிலிருந்து தற்போது வரை முழுவதுமாக மீண்டு வரமுடியாமல் இருப்பீர்கள்.
வாழ்க்கையில் பல விடயங்கள் உங்களுக்கு நடந்தாலும், கீழே விழுந்தால் அதிலிருந்து மீண்டு வரும் திறன் உங்களிடம் இருக்கும்.

நான்காவது கண் உங்கள் தெரிவாக இருந்தால் நீங்கள் அதிகம் சிந்திப்பவராக இருக்கக்கூடும்.
பெரும்பாலான விடயங்களை பற்றி நீங்கள் அதிகம் சிந்திப்பீர்கள். இதற்கு காரணம், குறித்த விடயங்களை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான்.
இதன் காரணமாக உங்கள் வாழ்க்கை ஒரு புதிராகவே உங்களுக்கு தோற்றமளிக்கும்.

இந்த கண்ணை நீங்கள் தெரிவு செய்தால், உங்கள் குணாதிசயம் மர்மமாகவே இருக்கும். உலகிற்கு மட்டுமில்லாது உங்களுக்குள்ளேயே மர்மமாக இருக்கும்.
குறைவாகவே பேசும் நீங்கள் பல்வேறு விடயங்களை நேரில் காணாமல் வேறு ஒருவர் மூலமே காணவோ, தெரிந்து கொள்ளவோ விரும்புவீரர்கள்.

ஆறாவது கண் உங்கள் தெரிவாக இருந்தால் நீங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமான மனிதராக இருப்பீர்கள்.
ஒரு விடயத்தை நீங்கள் மன்னித்தாலும், மறக்க மாட்டீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களை கவனமாக நோக்கும் நீங்கள் ஆழமாக உணர்கிற சக்தியைக் கொண்டிருக்கும் மிகுந்த உணர்ச்சிமிக்க ஆத்மாவாக இருப்பீர்கள்.
அதாவது சில சமயங்களில் சிறிய விடயங்கள் கூட பெரியளவில் உங்களை பாதிக்கும்.


http://news.lankasri.com/lifestyle/03/171942?ref=rightsidebar-tamilwin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக