அறிவியல் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் போதிலும் கிரகணத்தின் போது திருச்சி கிருஷ்ணாபுரத்தில் தாம்பால தட்டில் உலக்கையை நிற்க வைத்தால் எந்த பிடிப்புமின்றி நிற்பதும், முடிவடைந்ததும் தானாக கீழே விழுவதும் நடைபெறுகிறது.
அந்த காலங்களில் அறிவியல் வளர்ச்சி பெறாத போது தாம்பால தட்டில் உலக்கையையோ அல்லது கடப்பாரையையோ நிற்க வைத்தால் எந்த பிடிப்பும் இல்லாமல் நின்றால் கிரகணம் தொடங்கிவிட்டதாகவும், கீழே சாய்ந்துவிட்டதால் கிரகணம் முடிந்து விட்டதாகவும் மக்கள் கணித்து வந்தனர்.
தற்போது அறிவியல் என்னதான் வளர்ச்சி பெற்றிருக்கும் போதிலும் திருச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட முறையையே பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த காலத்தில் பயன்படுத்தி வந்த இந்த முறையை இந்த காலத்துக்கு மக்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காக கிருஷ்ணாபுரத்தில் இதுபோன்ற முறையை ஊர்மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த முறை சூரிய கிரகணத்துக்கும் பொருந்துமாம்.
http://www.manithan.com/india/04/160020?ref=rightsidebar-tamilwin
No comments:
Post a Comment