தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

அதிபூதம்


மனித உடல் அதிபூதம் என்று அழைக்கபடுகிறது. இது அழியும் தன்மை உடையது. அதன் உள்ளே இருக்கின்ற ஆத்மா ( இறைவன் ) அழியமாட்டார். மனிதன் இறக்கும் போது எதை நினைத்தவாறு இறக்கிறானோ அதையே அடுத்த பிறவியில் அடைகிறான். இறைவனையே நினைத்தவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக இறைவனையே அடைகிறான். எந்த வேலை செய்தாலும் மனதளவில் இறைவனை நினைத்தவாறு செய்பவன் இறைவனையே அடைகிறான்.
மேலும் நமது உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கட்டுபடுத்தி மனத்தை நிலைநிறுத்தி மூச்சை (அல்லது ) பிராணனை உச்சந்தலையில் குவித்து “ஓம்” என்ற மந்திரத்தை சொன்னவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக மேலான நிலையை அடைகிறான்.
இந்த உலகம் எவ்வாறு செயல்படுகிறது என்றால், முதலில் பகவான் நாராயணன் பிரம்ம தேவனை உருவாக்கினார். பிறகு பிரம்ம தேவனுக்கு தெய்வீக அறிவுகளை புகட்டி உயிரினங்களை உருவாக்குமாறு கூறினார். அதன்படி பிரம்மன் அவருடைய பகல் பொழுதில் உயிரினங்களை உருவாக்குவார். இரவு வரும் போது அவர் உருவாக்கத்தை நிறுத்திவிடுவார். அந்த இரவின் போது உலக அழிவு ஏற்படும். அனைத்து உயிரினங்களும் அழிவு நோக்கி செல்லும். மீண்டும் பகல் வரும்போது அவர் உருவாக்கத்தை ஆரம்பிப்பார். இவ்வாறு உயிரின கூட்டம் எந்த வித சுயகட்டுபாடும் இல்லாமல் உருவாகியும் அழிந்தும் போகின்றன. இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் பிறப்பு – இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுபட முயற்சி செய்ய வேண்டும். அதாவது பிறப்பு – இறப்பு இல்லாத அந்த தெய்வீக லோகத்தை அதாவது பிரம்மத்தை அடைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் உத்தராயனத்தில் இறப்பவர்கள் மீண்டும் பிறப்பது இல்லை. தட்சினாயனத்தில் இறப்பவர்கள் மீண்டும் பிறப்பார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக