தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஏப்ரல், 2016

இன்றும் நிலைத்திருக்கும் தொன்மை மொழி தமிழ்!



அமெரிக்காவின் மிகப்பெரும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் மாதிரி 30 மடங்கு பெரியதான பிரமிடுகளை 4500 ஆண்டுகட்கு முன்பு கட்டிய எகிப்தியர்கள் பேசிய எகிப்திய மொழி இன்று இல்லை.

3000 ஆண்டுகட்கு முன்பு மாபெரும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை சுமந்த வட இந்தியப் பெருமொழி சமஸ்கிருதம், தொல்பொருள் காப்பகத்தில் வைக்கப்படடுள்ளது.

உலகத்தின் மாபெரும் வல்லரசை 2800 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கிய ரோமாபுரி மன்னர்கள் வளர்த்த இலத்தின் மொழி, இன்று யாருடைய தாய்மொழியும் இல்லை.

மகான் புத்தர் தம் புரட்சிகரமான கருத்துகளை 2600 ஆண்டுகட்கு முன் பரப்பிய பாளி மொழி, அறவே அழிந்துவிட்டது.

உலகை என் காலடியில் பணிய வைப்பேன் என்ற எழுச்சியோடு படை நடத்திச் சென்று ஆசியாவின் முக்கிய பகுதிகளை வென்ற மகா அலெக்சாந்தர் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய கிரேக்க மொழி, இன்று திரிந்து விட்டது.

வரலாற்றின் போ்கையே மாற்றி அமைத்த அன்பரசர் ஏசுநாதர் 2000 ஆண்டுகட்கு முன்பு தம் கருத்துகளை போதித்த அரமிக் மொழி (ஹுப்ரூ மொழியின் கிளை மொழி) இன்று வழக்கிழந்து விட்டது.

ஆனால், இந்தப் பழம்பெரும் மொழிகள் வாழ்ந்து சிறந்த காலத்தில் தானும் வளமாக வாழ்ந்து, இன்று தன் பழைய தோழமை மொழிகள் அனைத்தும் மாண்டு போன போதும், நீண்ட மனித வரலாற்றின் பார்வையாளனாக, இன்றும் இளமையோடு வாழும் ஓரே மொழி தமிழ் மொழி மட்டுமே!

ஆனால், இந்த வளம் கொழிக்கும் தமிழ் மொழியின் சொந்தக்காரர்கள், தமிழ் மொழியை பேச தயங்குவது ஏன்?

கடவுளுக்கு அழிவில்லை என்று சொல்வார்கள்....
உண்மையில்  தமிழுக்கு மட்டுமே  அழிவில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக