தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஏப்ரல், 2016

முட்டை சைவமா? அசைவமா? என்று தெரியுமா?

கால்நடைகள் மூலம் நமக்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள் பால், முட்டை, இறைச்சி. இதில் பாலை சைவம் என சொல்கின்றோம். இறைச்சியை அசைவம் என முடிவு கட்டிவிட்டோம். ஆனால் இந்த முட்டை மட்டும் நடுவில் கிடந்து திண்டாடுகிறது.

பால் தருவதால் பசு இறப்பதில்லை. ஆனால் இறைச்சி வேணுமென்றால் ஒரு உயிரை கொன்றேயாக வேண்டும் இல்லையா. அப்படி பார்த்தால் முட்டையை சைவ உணவு என சொல்லலாம். முட்டைக்குள்ளேயிருந்து குஞ்சு வராது தடுத்துதானே முட்டையை சாப்பிடுறீங்கள்! என நீங்கள் கேட்கலாம்.
இப்போழுதெல்லாம் சேவல் சேராத, உயிர்கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத முட்டைகள்தான் பண்ணையிலிருந்து வருகிறது. கருவுள்ள முட்டை வேண்டும் என்றால் சேவல் வேண்டும். முட்டை உருவாகக் கோழியின் உடம்பில் இருக்கின்ற சத்தே போதும்.
பாலை சைவ உணவாக கருதுபவர்கள், உயிர்க்கரு இல்லாத முட்டைகளை சைவ உணவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார். சைவம், அசைவம் என்பது மனதை பொறுத்த விஷயம். நீங்களே யோசித்து முடிவெடுங்கள். ஆனால் முட்டை ஒரு உயர்ந்த உணவு.
முட்டையை பற்றிய சில பயனுள்ள தகவல்கள் :
நாட்டுகோழி முட்டையில்தான் சத்து அதிகமா?
பொதுவாக மஞ்சள் கரு நிறம் அடர்த்தியாக இருந்தால் அது சத்து நிறைந்தது என மக்கள் நினைக்கிறார்கள். சாந்தொபில்(xanthophyl) என சொல்கின்ற ஒரு பொருள்தான் மஞ்சள் நிறத்தை கொடுக்கின்றது. அதற்க்கும் சத்துக்கும் சம்பந்தம் கிடையாது.
பண்ணை கோழியில் நாம் கொடுக்கின்ற உணவில் எல்லா சத்தும் இருக்கின்றது. ஆனால் நிறம் கொடுக்கின்ற அந்த பொருள் குறைவாக இருக்கின்றது. அவ்வளவுதான். நாட்டு கோழி முட்டையைவிட பண்ணை கோழி முட்டை அளவில் பெரிதாய் இருக்கும். அதனால் கூடுதல் சத்து கிடைக்கும்.
முட்டை கெட்டுபோய் விட்டதா என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
கேண்ட்லிங் (candling) என்ற முறையில் ஒளிக்கதிர்களை செலுத்தி முட்டையின் தரம் அறியலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் உப்பை போட்டுக் கலக்கி அதில் முட்டையை மெதுவாக போடுங்கள். நல்ல முட்டையாக இருந்தால் பாத்திரத்தின் அடியிலே இருக்கும். பழைய முட்டையாக இருந்தால் பெருத்த பாகம் மேலே நிற்கும். அழுகிய முட்டை அப்படியே மிதக்கும்.
முட்டையை பாதுகாக்க :
*அழுக்கான முட்டையை வாங்கவேண்டாம். அப்படியே வாங்கினாலும் கழுவாமல் உடனேயே உபயோகப்படுத்தவும். கழுவினால் முட்டையின் ஓட்டில் நிறைய நுண் துழைகள் உள்ளன. அதன் வழியாக நுண்கிருமிகள் குறிப்பா சூடோமோனஸ் (pseudomonas) நுழைந்து முட்டையை கெடுத்துவிடும்.
*முட்டையை அடுக்கி வைக்கும்போது குறுகிய பகுதி அடியில் வரும்படி வைக்கவும்.
*முட்டையை அவிக்கும்போது நீரில் கொஞ்சம் உப்பு போட்டால் ஓடு உரிக்க எளிதாக இருக்கும்.
*வேகவைத்த முட்டையை உடனடியாக பச்சை தண்ணீரில் போட்டா பச்சை வளையம் ஏற்படாது.
*கரண்டியினால் அடித்து கலக்கும் போது நுரை எளிதாக வந்தால் அது நல்ல முட்டை.
*எலுமிச்சம் பழச்சாறு கொஞ்சம் ஊற்றி வேகவைத்தால் உடையாமல் அவித்து எடுக்கலாம்.
*முட்டை அடித்த பாத்திரத்தை எலுமிச்சம் பழச்சாறு அல்லது தோலால் துலக்கிப் பின் பாத்திரத்தை சூடுபடுத்தினால் வாடை போயிடும்.

- See more at: http://www.manithan.com/news/20160401119392#sthash.JnXV0SGl.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக