தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 ஏப்ரல், 2012

மகாத்மா காந்தியின் பொக்கிஷங்கள் இங்கிலாந்தில் ஏலம்!


தேசதந்தை மகாத்மா காந்தியின் வட்ட வடிவக் கண்ணாடி, நூல் ராட்டை மற்றும் புல் வெட்டும் கத்திகள் உள்ளிட்ட பல்வேறு அரிய பொருள்கள் வருகிற 17ம் திகதி இங்கிலாந்தில் ஷ்ராப்ஷைர் என்ற இடத்தில் ஏலம் விடப்படவுள்ளது.
முல்லாக் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்துகிறது. இந்த ஏலத்தின் மூலம் ஏறக்குறைய 10,000 பவுண்டுகள் திரட்ட முடியும் என்று அந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்த ஏலத்தில் 1948ம் ஆண்டு காந்தி சுடப்பட்டபோது அவ்விடத்திலிருந்து எடுக்கப்பட்ட மண், புற்கள் உள்ளிட்ட அரிய பொருட்களும் ஏலத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக