தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 6 மே, 2017

ஒப்பற்ற அதிசயம் ஒட்டகம் பற்றி ஒரு சுவாரஸ்ய பார்வை

ஒட்டகம் தனக்குத் தேவையான தண்ணீரையும் சேமித்துக் கொள்கிறது என்பதை பற்றி!..1,400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன !

பாலைவனத்து அரபிகளால் 160க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும், முக்கியமான பெயராக இறைவனின் பரிசு என்று அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கி கொள்கிறது (சுமார் 45கிலோ எடை இருக்கும் அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்.) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக.

உணவோ, நீரோ கிடைக்காத காலத்தில் அதன் திமிலின் கொழுப்பில் உள்ள ஹைட்ரஜனோடு அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.

உணவு மட்டும் கிடைத்தால் போதும் நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் காலம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காவிட்டால் கூட இரண்டின் தேவையில்லாமல் ஒரு வார காலம் பயணம் செய்யும். குளிர் காலங்களில் ஆறு மாத காலம் வரை கூட நீர் அருந்தாமல் வாழும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை 10 நிமிடங்களுக்குள் குடித்து விடும்.

குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அனுக்களில் ஏற்றிக் கொள்கிறது அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு விரிந்து இடமளிக்கிறது (மற்ற மிருகங்கள், மனிதர்களுக்கு ஒரு மடங்கு விரிந்தால் போதும் வெடித்து விடும்) மேலும் இரப்பையில் உள்ள நீர் அறைகளிலும் (WATER CELLS) நீரை ஏற்றிக் கொள்கிறது. மனிதனாகட்டும், மிருகமாகட்டும் எல்லாவற்றிற்கும் இர்த்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக (சுழுருNனு) இருக்கும்.

ஆனால் ஒட்டகத்திற்து மட்டும் முட்டை வடிவத்தில் (ROUND) இருக்கும்.
ஒட்டகம் ஒரு மாதம் நீர் அருந்தாமல் இருந்தால் கூட உடல் எடை 3மூமட்டும் குறையும். சாகாது. ஆனால் மனிதர்களுக்கு 72 மணி நேரம் நீரில்லாமல் போனால் உடல் எடையில் 8மூ குறைந்து மரணத்திற்கான ஏற்பாடு ஆரம்பித்து விடும்.

மனிதர்களுக்கு உடல் எடையில் 12மூ நீர் குறைந்தாலே போதும் கதை முடிந்துவிடும் ஆனால் ஒட்டகம் 40மூ இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும்.

குட்டிப் போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழைப்பை தாங்கி கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை. நீரிழப்பினால் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் மற்றும் மனிதன் இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் வெகுவாக குறைந்து விடும். அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு சூட்டினால் வெடிப்பு மரணம் (EXPLOSIVE HEAT DEATH) நிகழ்ந்து விடும்.

ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையாது. நீரில்லாமல் இதன் இர்த்தத்தில் நீர் அளவு குறையாது.

நீரில்லாமல் நீண்ட நாள் வறட்சி ஏற்பட்டு, நீண்ட இடைவெளிக்குப்பிறகு நீர் அருந்தினால், அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகளுக்கு (மனிதன்) நீர் போதை (Water Intoxication) ஏற்பட்டு இறப்பு நிகழந்துவிடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்குப் பிறகு நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரும் குடிக்கும். சாகவும் செய்யாது.
வெயிலின் சூடு 104 டிகிரியை அடைய வேண்டும்;.

அப்போது தான் ஒட்டகத்துக்கு வியர்வையே வரும். அதுவரை வியர்க்காது. அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்கவேண்டும். ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு தனித்தன்மையே ஆகும். மற்ற பிராணிகள் (மனிதன்) உடல் சூட்டை வியர்த்து குளிர்வித்துக் கொள்ளும்.

ஆனால் ஒட்டகம் மட்டும் பகல் காலங்களில் வெப்பத்தை 12 டிகிரி வரை சேர்த்து வைத்துக் கொள்ளும். அதனால் அதன் சூட்டை வியர்க்க வைத்து வெளியேற்றாமல் (வியர்ப்பது நீருக்கு நஷ்டம்) இரவின் குளிரான காற்றை பயன்படுத்தி வெளியாக்கி வடுகிறது.

ஒட்டகத்திற்கு இருப்பது போல் சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிகபட்சமாக தாது கழிவுகள் 8 சதமும் 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறு நீரில் 40 சதத்திற்கும் அதிகமான கழிவுகளும், குறைவான நீரும் இருக்கும் அந்த அளவிற்கு குறைவான நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சத்தி வாய்ந்தது அதன் சிறுநீரகம். (நம்முடையதாக இருந்தால் வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம்.

அதன் உடம்பில் புரோட்டின் என்ற சத்து குறைய ஆரம்பித்தால் சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (Microbial Synthesis) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றி விடுகிறது அதன் உள் உறுப்புகள்.

மற்ற பிராணிகளின் (மனிதன்) மலம் காய்வதற்கு குறைந்தபட்சமாக இரண்டு நாட்கள் வேவைப்படும். ஆனால் ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்றவைத்து விடலாம், என்ற அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது ஒட்டகம். பசுமலம், சிறுநீர் வழியாக 20 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு வெளியேற்றுகிறது. ஆனால் ஒட்டகம் 1 லிட்டர் நீரை கூட இழப்பதில்லை.

நம்முடைய மூச்சை ஒரு கண்ணாடியில் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். (நாம் 1-லிட்டர் காற்றை சுவாசித்து வெளியேற்றினோம் என்றால் 16 மில்லி கிராம் நீரை இழந்திருப்போம்) ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்ற எதற்குமில்லாத விசே~ மூக்கமைப்பு தான் இதன் காரணம். அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் இடுக்கான திசு அமைப்புகள். அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தில், மூன்றில் இரண்டு பகுதியை வெளியேறி விடாமல் தடுத்து விடுகிறது. மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பு வழியா மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை கூட மோப்ப சத்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு.
05 May 2017

http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1493975234&archive=&start_from=&ucat=1&

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக