தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 மே, 2017

மனிதர்கள் உயிர்வாழ வேண்டுமா?? பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல விஞ்ஞானியின் தகவல்!

மனித இனம் உயிருடன் வாழவேண்டுமென்றால் பூமியை துறந்து, வேறு கிரகங்களை நோக்கி 100 வருடங்களுக்குள் செல்லவேண்டுமென பிரபல இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டிபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
மேலு உலகில் ஏற்படும் மாற்றங்களை குறித்து ஆய்வு செய்து வரும் ஹாக்கிங், கரும் துளை ஆய்வின் மூலம் காலத்தை வெல்லும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலக இருப்பு தொடர்பான ஆவணப்படமொன்றை உருவாக்கியுள்ளார். குறித்த காணொளியினுடாக இன்னும் 100 வருடங்களில் பூமி மனிதர்கள் வாழ்வதற்கான சூழலை கொண்டிருக்காது என தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்தோடு குறித்த ஆவணப்படத்தினுடாக, உலக சனத்தொகை பெருக்கம், தொற்றுநோய் பரவல்கள், வளங்கள் இழக்கப்படுகின்றமை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுவரும் அழிவு விதங்கள் குறித்த தெளிவுகளை ஹாக்கிங் வெளிப்படுத்துவதற்கு முயற்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
இந்நிலையில் மனிதர்கள் வேறு கிரகத்தில் வாழ்வது குறித்து, ஹாக்கிங் மற்றும் அவரது முதன்மையான மாணவராய் திகழ்ந்த கிரிஸ்டோப்பே கல்பர்ட் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டு ஆய்வுகளில் மேற்கொள்ளவுள்ள நிலையில் குறித்த தகவல்களை ஹாக்கிங் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.canadamirror.com/canada/86689.html
world

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக