குமரிக்கண்ட மக்களது நாகரீகம் {பாகம் 1 }
குமரிக்கண்ட மக்கள் தற்கால மக்களைவிடப் பெரிதும் நெட்டையானவர்களே ஆறடிக்கும் மேற்பட்டு ஏழடி வரையிலும் அவர்கள் உயர்ந்திருந்தனர் .
அவர்களின் உடலின் எடை 160 கல் முதல் 200 கல் வரை என்று கூறப்படுகிறது.அவர்களுடைய கைகள் மனிதர்களின் கைகளைவிட நீண்டவையாகவும் ,பெரியவையாகவும் ,சதைப்பற்று மிக்கவையாகவும் இருந்தன .கால்கள் இதற்கொத்து நிட்சிபெறாமல் திரட்சியுடையவையாய்
இருந்தன .தலை உச்சியில் முடி இயற்கையாகவே கட்டையாக இருந்தது .ஆனால்,பின்புறம் நீண்டு வளர்ந்து பலவகையாக அழகுபெற முடிக்கப் பெற்றிருந்தது .முடிகள் மென்மையும் பொன்மையும் வாய்ந்தவை .கல்லில் செதுக்கப்பட்ட சிலைகளினாலும் ,தொழில் தீட்டப்பெற்ற ஓவியங்களினாலும் அவர்கள் மிகுதியாக அணிகலன் அணியவில்லை என்றும் ,தலைமுடியைப் பின்னி முடிப்பதையே பேரனியாகக் கொண்டனர் என்றும் ,அவ்வோர் அணியிலேதானே அவர்கள் தம் பலவகைப் பட்ட திறன்களையும் திருத்தக் காட்டினர் என்றும் அறிகிறோம்.அவர்கள் உருண்டு நீண்ட கழுத்துடையவர்கள் .சிறுமணிகளாகிய மாலை ஒன்றினை கழுத்தனியாகக் கொண்டார்கள் .காலடிகளும் ,கைகளும் , அங்கைகளும் {உள்ளங்கை} மிகப் பரந்திருந்ததோடு விரல்களின் எல்லாக் கனுக்களும் {ஒரு பிரிவாக } தடையின்றி அசையக்கூடியவையாய் இருந்தப்படியால் அவர்கள் தற்காலமனிதர்களைவிட மிக நுண்ணிய வேலை திறனுடையவராய் இருந்தனர் .
தொடரும் ..........
குமரிக்கண்ட மக்களது நாகரீகம் {பாகம் 2 }

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக