தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, October 14, 2016

மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளா? உண்மையை மறைக்கும் நாசா!

வேற்றுகிரகவாசிகள் மனிதனுக்கு இன்றைய நவீன யுகத்தில் சவாலாக காணப்படும் ஓர் சுவாரசியமான புதிர் என்று கூட சொல்லலாம்.
பூமி எவ்வாறு தோன்றியது? அதில் மனிதர்கள் எவ்வாறு கால்பதித்தனர்?
இதற்கான பதில் விஞ்ஞானம் மற்றும் ஆன்மிகரீதியாக நிறைய காணப்பட்டாலும், ஆரம்பத்தில் பூமியில் செல் உயிர் ஒன்றின் தோற்றத்தாலேயே உயிர்கள் தோற்றம் பெற்றதாக நம்பப்பட்டு வருகின்றது.
இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் பூமியில் காணப்படும் மனிதர்கள் வேற்றுக்கிரகவாசிகள்தான் என்ற ஓர் அறிவியல் செய்தி தற்போது கசிந்து கொண்டிருக்கின்றது.
அது எவ்வாறேனில் ஆரம்பத்தில் தோன்றியதாக கூறப்படும் அந்த செல் உயிரி இந்தப் பூமியை சேர்ந்தது அல்லவாம்.
சூரிய குடும்பத்தை பொருத்தவரை பூமியில் உயிரினம் தோற்றம் பெற முன்பு செவ்வாயில் உயிரினங்கள் செழிப்பாக வாழ்ந்திருக்கின்றன.
சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது, உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.
அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.
இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தனவாம்.
ஆனால் இந்த விண்கற்கள் பூமியை வந்தசேர எடுத்துக்கொண்ட காலம் மிகப்பெரிதாகும்.
இச்செயற்பாட்டை "Seeds Everywhere" என்ற வார்த்தையினால் வரையறுக்கலாம். விண்வெளியில் ஒழுங்கின்றி சுற்றித்திரியும் விண்கற்களில் நுண்ணுயிரிக்கள் புதைந்திருக்கின்றன, அந்த விண்கற்கள் நுண்ணுயிரிகளை சுமந்து செல்லும் “கேப்சூல்” போல் செயற்படுகின்றது.
பறந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் வெவ்வேறு கிரகங்களுக்கு உயிரினங்களை அனுப்ப இது ஒரு சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அண்மையில் உலகமும் இவ்வாறான ஓர் பரீட்சையை நடத்தியிருக்ககூடும் என்றால் நம்பமுடிகின்றதா? நாசா அனுப்பிய விண்கலம் ஒன்று பத்துவருட பயணத்தின் பின் விண்கல் ஒன்றில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
மனிதகுலத்தின் பெரும் வரலாற்றுசாதனையாக பேசப்பட்ட நிகழ்வு இது. அந்த விண்கலம் அங்கு சில ஆய்வுகள் நடத்தப்போவதாக நாசா தெரிவித்திருந்தது. ஆனால் பூமியில் வாழும் சில நுண்ணுயிரிகளை அதனுள் செலுத்தும் முயற்ச்சிதான் இது என்ற கருத்தும் தற்போது நிலவிவருகின்றது.
மேலும் அமெரிக்க விஞ்ஞானிகள் 1984இல் அண்டார்டிக்காவில் Allan Hills 84001 (ALH84001) என்ற 1.95kg எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள். இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யுகித்தனர். 1996இல் நாசா விஞ்ஞானி David Mckay என்பவர் இதில் “நானோபாக்டிரியாவின்” எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.
இந்நிகழ்வின் பின் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி “பில்கிளிண்டன்” செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டத்திற்கு பெரும் தொகை ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.
மனிதர்களாகிய நமக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் தீர்க்கதனமாக நம்புகின்றார்கள்.
இன்றளவும் நாசாவின் ஆளில்லா விண்கலங்கள் செவ்வாயில் தேடிக்கொண்டிருப்பது தண்ணீரையும் தாதுப்பொருட்களையும் மட்டுமல்ல. அங்கு வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்கள் மற்றும் ஆதாரங்களையும் தான்.
அவ்வாறான நிறைய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் அதனை பற்றிய முழுமையான தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர் நாசா.

No comments:

Post a Comment