தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

இலங்கையின் மறைக்கபட்ட வரலாற்று உண்மைகள்!!!


கட்டாயம் படிக்கவும், பகிரவும்.

*அது தி.மு.வா அல்லது கி.மு.வா?!

இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது.

சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி தனி ஈழ நாடு கேக்கிரார்கள். சிங்களவர்களின் கோவம் நியாம் தானே. தமிழன் பிழைக்க போன இடத்தில் தனி நாடு கேக்கலாமா? இது சரியா? தவறா என்பது அரசியல் இதுதான் இலங்கையின் நீண்ட நாள் அரசியல் பிரஜ்ஜனயா இருக்கு

கொஞ்சம் தமிழர் வரலாற்றை புரட்டி பார்த்தல்
இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இலங்கைக்கு வந்த பின்னர்தான் பௌத்த மதமும் சிங்களவர்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி. சங்கிலி பாண்டியன் .தி .மு. எல்லான் என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதெல்லாம் கல் சுவடுகள் வரலாற்றில் நிருபிக்கப்பட்ட உண்மைகள். சிங்களவர்கள் இலங்கைக்கு வரும் முன் இந்த இலங்கை இப்படிதான் இருந்து இலங்கை முழுவதும் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள்.

இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு இலங்கைக்கு வந்த அடையாளமாக தான் இலங்கை அரசாங்கமே பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என்ற தபால் முத்திரையை வெளியிட்டது.

அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.

பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, தமிழ் ஈழம் என்று சொல்லுகின்ற வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது. தமிழர்களுக்கு சொந்தமான நாடு. மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர். இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. தமிழர்கள் பூர்வ குடி மக்கள்... என்பதை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று அண்மையில் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன குறிபிட்டு இருந்தார்

வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் சில இனவாத சக்திகள் இது தொடர்பில் தமிழ் வரலாறு அறிந்தவர்களிடம் என்னிடம் விவாதம் நடத்துவதற்குத் தயாரா? என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன அண்மையில் சவால் விடுத்து இருக்கிறார். இவர் ஒரு சிங்களவர் என்பது குறிப்பிட தக்கது 


Prince Rajsekera இந்தப் பெயர்களில் எந்த ஒரு அரசும் இருக்கவில்லை. சுத்தமான புனைகதையாகும். ஆனுர்புரி பற்று - ராசரட்டை, தும்பறைபற்று - மலையரட்டை, கழனிபற்று - கல்யாணி, கதிர்காமப்ற்று - ரோகணம். இவை எல்லாம் வன்னிப் பற்றுக்கள்.



  • Sivananthan Muthulingam Muthali மகாவம்சத்தை எழுதியவர் மகாநாம என்ற பிக்கு. அவர் காஞ்சிபுரத்திலிருந்து வந்தவர் என்ற உண்மை தெரியாமல் அல்லது மறைத்து விட்டு தமிழரும் சிங்களவர்களும் குடுமிப் பிடி சண்ட போடுகிறார்கள்.

    தவிர சிங்களம் என்ற மொழி இந்தியாவில் அதுவும் வாடா இந்தியாவில் இருந்தமைக்கு
     எந்த சான்றும் கிடையாது.

    அரச வம்சங்கள் கங்கை வெளி நாகரிக உற்பத்திகள். அவர்கள் சம்ஸ்கிருத. பிரக்க்ருத மொழிகளின் முன்னோடிகள்.

    பல்லவர்கள் ஆரம்பத்தில் "பாளி" மொழியிலேயே கல்வெட்டுக்களை எழுதியுள்ளனர். தமிழில் அல்ல.

    "ஷத்திரியர் என்ற சாதியினர் பற்றி எதுவும் கூறாமல் அல்லது தெரியாமல் "ஆண்ட" அரசர்களை நம்மடை ஆள் என்று உரிமை கொண்டாடுவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

    சேர, சோழ,பாண்டிய,பல்லவ என்ற வார்த்தைகளின் தமிழ் மூலங்களை இதுவரை எந்த தமிழ் வித்துவானும் கண்டு பிடிக்கவில்லை. ஏனென்றால் அவை தமிழ் சொற்களல்ல.

    சிங்களம் என்ற மொழி இலங்கை உற்பத்தி மாத்திரமே. சிங்கள மொழியின் சுவடுகளை மலையாளத்தில் அதிகம் காணலாம். சிங்கள எழுத்துக்களும் மலையாள எழுத்துக்களும் ஏறக் குறைய ஒரே மாதிரியானவை.

    யாழ் மன்னர்களின் சிம்மாசனப் பெயர்கள் பரராசசேகரன், ஜெகராஜசேகரன் என்றே உள்ளன. அது மாத்திரமின்றி அவர்கள் "ஆரிய சக்கரவர்த்திகள்" என்றே அழைக்கப்பட்டனர். இங்கே தமிழ் புலுடா விடுபவர்களுக்கு பொறுக்க ஒன்றுமே கிடையாது.

    ராஜசேகரன் என்ற கேரளத்து அரசனின் பெயரே யாழ் அரசர்களுக்கும் சிம்மாசனப் பெயராக அமைந்து இருந்தது. இந்தப் பெயர் எப்படி வந்தது என்று யாரும் சொல்லக் காணோம். தமிழ் அரசர்களுக்கு "ராஜசேகரன்" என்ற பெயரே கிடையாது.

    தற்போதைய தமிழ் பன்னாடை அரசியலுக்கு ஏற்றதாக வரலாற்றை வளைக்க பல முட்டாள்கள் இப்பொழுது முற்பட்டிருக்கிறார்கள்.

  • நோர்வே நக்கீரா செங்கையாளியான் சிற்றம்பலம் இவர்கள் மகாவம்சத்தைத் சார்ந்து எதுவுமே எழுதவில்லை. மகாநான என்ற பல்லவ பிச்சுவே மகாவம்சத்தை எழுதினான்; துட்டகைமுனுவையும் உருவாக்கினான். யார் மகாவம்சத்தை தமிழாக்கம் செய்தார்கள். சிவானந்தனவர்கள் சொல்வதே யதார்த்தமானது. பல்லவர்களுக்கும் மூவேந்தர்களுக்கும் அடிக்கடி போர் நடந்திருக்கிறது. முக்கியமாக காசியப்பன் சிகிரியா வரலாறுகளின் காணலாம். இராஜசேகரன் சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. பல்லவர்கள் சிங்கையாரியர்களின் வரலாற்றை எப்படித் தமிழ்வரலாறு என்று வாசிக்கச் சொல்கிறீர்கள். எனது வாசிப்பில் நான் அறிவது மலையாளம் சிங்களமொழிக்குப் பிந்தியதே. இளங்கோவடிகள் சேரநாட்டில் இருந்து தமிழில்தான் எழுதினார். அங்கே மலையாளம்தான் ஆழுமையுள்ள மொழியாக இருந்திருந்தால் அவர் மலையாளத்தில் அல்லவா எழுதியிருக்க வேண்டும். அன்று மலையாளப்பகுதியில் தமிழ்தான் பேசப்பட்டது. எனது பார்வையில் பாளி மொழி பெளத்தமதத்துடன் தான் இலங்கைக்கு வந்தது. எனது பார்வையில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே இனத்தவர்களே. தேவநம்பிய தீசனின் மதமாற்றத்தின் பின்னரே வடக்கு தெற்கு என்று பிரிந்து அடிபத்தொடங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக