தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

இலைகளுக்கு பெயர்கள்!!




தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.
வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை
பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு
கோரை,அறுகு இவற்றின் இலை ---புல்
நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள்
மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை
சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் --மடல் 
நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் --தோகை
தென்னை,பனை இவற்றின் இலைகள் --ஓலை
அகத்தி,பசலை இவற்றின் இலைகள் --கீரை 

1 கருத்து: