தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 பிப்ரவரி, 2016

பெண் எப்பொழுதெல்லாம் அழகாகிறாள்?..

* அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

* தாவணிக் கோலத்தில் சுப நிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
* பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
* அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
* யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்று கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
* அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
* காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.
* தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.
* தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.
* ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.
* ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது, நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.
* சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
* தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக