தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 பிப்ரவரி, 2016

அன்னை மடியில் கண் மலர்ந்தோம்!


பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது. பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரண மாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்வித பயனும் அளி க்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அவர்கள் பசி,தாகத்தினால் தனிமையில் வாடிவதங்கி மடிவார் கள்.
இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.தாய்,மகன் இருவரும் எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒரு வித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித் துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான். உடனே, ""அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான்.
அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?
இங்கே போடப்பட்டுள்ள கிளைகளை கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்."வயதாகி விட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச்சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயா பயனற்றவர் என்று உள்மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன் வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்க லானான் .அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்ததாம்.

👉 நீ நல்லவனா கெட்டவனா என்று தெரிவதற்கு முன்னாலேயே தன் வயிற்றில் இடம் கொடுதிதவள் உன் தாய்  எத்தனை ஜென் மம் சம்பாதித்தாலும் நீ இருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது என்றால் அது உன் தாயின் கருவறை என்பதை மறந்து விடாதே 
👉 எத்தனையோ கஷ்டங்கள். நஷ்டங்கள்.துன்பங்கள்.துயரங்கள்
அவமானங்கள் கடந்த பிறகும் ஒன்றுமே தெரியாதது போல் காட்டிக்கொண்டு குடும்பத்தின் மத்தியில் சிரித்துக் கொண்டிருக் கும் தந்தைக்கு நிகரான நம்பிக்கை ஊட்டும் புத்தகம் இந்த உலகில் வேறேதுமில்லை 
💞 நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.
அவர்களை கண் போன்று பாதுகாப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக