தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காமம்


ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிருனும் ஓம்பப்படும்!,அதை கட்டுப்பாடு என்பதும் அடக்குமுறை என்பதும் அவரவர் பார்வை!காமத்தை அடக்கினால் ஞானி,காமத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டவன் குடும்பஸ்தன் ,காமத்துக்கு அடிபணிந்தவன் சமூகவிரோதி!ஆனால் தமிழன் தமிழனால் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றை கடைப்பிடிப்பவன்!அப்படி இல்லை என்றால் அவன் தமிழன் அல்ல,அதை கடைப்பிடிக்கும் இனத்துக்கு உரியவனாகிறான்

பெரிய அறிவாளி என்று சொல்கிறவங்க எல்லாம் காமம் என்று வரும்போது தொபுகடி என்று விழுந்து போய்விடுகிறார்கள். இவை எல்லாம் எதை குறிகிறது. அடக்கப்பட்ட உணர்வுதான். இதை அசிங்கம் என்று சொல்ல முடியல அழகு என்று சொல்ல முடியல...

ஆன ஒன்று மட்டும் நிச்சயம் காமம் மதத்தால் அருவருப்பாக ஆக்கபட்டுயுள்ளது. ஒரு துணை விரும்பினால் இன்னொரு துணை ஏற்றுக்கொள்வது தவறில்லை...தாகம் வந்தால் நீர் அருந்துகிறோம், பசி வந்தால் உணவு உண்கிறோம், தூக்கம் வந்தால் தூங்குகிறோம் ஆனால் உடலுக்கு ஏற்படும் பசியை மட்டும் சமுக கட்டுபாடு, மத கட்டுபாடு என்ற பெயரில் ஏன் அடக்கி வைக்கவேண்டும். தேவைப்படுவோருடன் தேவைப்படுவோருக்கு பாதுகாப்பாக உடலுறவு வைத்துகொள்ளலாம்.

அடக்கபடுவதுதான் ஒரு நாள் வீரியம் கொண்டு அறுத்துகொண்டு போகும்..இது இயற்கை
RK Guru

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக