தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 10, 2013

ஆகாயத்திலே நடந்த உண்மை.


சஹித் பழனி பாபா அவர்கள் Gulf Air மூலமாக இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு பயணம் செய்யும் போது முதல் வகுப்பு இருக்கையில் நடந்த உரையாடல்கள் விமானப் பணி பொண்ணுடன்.................

பைபிளை எடுத்து வைத்துப் படிக்கிறேன்.நான் பெரும்பாலும் அரபி உடைகளையே விரும்பி அணிவேன்.மேலொட்டமாய்ப் பார்த்தாலும் கிறிஸ்துவ தோற்றம்.தலையை மூடியிருப்பதைக் கண்டால் முஸ்லிமின் வடிவம்.20 நிமிடம் கழித்து பயணிகள் அதிகமில்லாததால் பணிப்பெண் வந்து பணிவிடைகளை முடித்து விட்டு என் தேவைகளுக்காக நின்றவர் நீண்ட நேரம் குழம்புகிறார்.

பின்னர் மெதுவாய் fபாதர் நீங்கள் கிறிஸ்துவரா?முஸ்லிமா? என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்கிறார்.
"ஆட்சேபகரமற்று நான் ஒரு முஸ்லிம்" என்றேன்.
"முஸ்லிம் கையில் பைபிளா? 
ஏனிந்த மாற்றம்? எப்படி வந்தது இந்த ஆகர்ஷனம் (Attraction?
பைபிளின் புனிதம் இப்படி மாற்றங்களை ஏற்படுத்துவதுதான்! தேவனின் மகிமையை என்னென்பேன். ஒ! ஜீஸஸ்" கண்களில் நீர்த்துளிகள். மெய்சிலிர்க்கப் பேசுகிறார்.
அவரின் ஆதங்கம் தணியும் வரை நான் மவுனமாயிருக்கிறேன். பிறகு மெதுவாய்ப் பேசினேன்.

"சகோதரியே! உங்கள் வயது?"
"22 வயது"
" எனக்கு 38 வயது ஆகிறது. நீங்கள் பைபிளை எத்தனை வருடமாய் படிக்கிறீர்கள்?"
" சிறு வயது என்றால், சுமாராக எத்தனை வயதில்?"
" 12 வயது முதல்!"
" அப்படியானால் 10 வருடமாய் படிக்கிறீர்கள்- நான் எனது 15 வயது முதல் இன்று 23 ஆண்டுகளாய் படிக்கிறேன்.!"
" நானும் ஐந்து ஆறு வருடமாய் தீவிரமாய் படிக்கிறேன்!"
" நீங்கள் - புராட்டஸ்டண்டா - கத்தோலிக்க்ரா? பியூரிட்டடா - கிறிஸ்துவரின் எப்பிரிவு?
" நான் ரோமன் கத்தோலிக்!"
" வெரிகுட்! உங்களுக்குள் இத்தனைப் பிரிவுகளும் ஒரே பைபிளை கடைப்பிடிக்கிறீர்களா?"
" இல்லை . நான் தேர்ந்தெடுத்தது K.J.V (King James) வர்ஷன்."
" பைபிளை எழுதியது யார்?"
" யார் சொன்னது எழுதியது என்று? பைபிள் ஆண்டவனால் அருளப்பட்டது?".
" யார் மூலமாக?"
" ஏசுநாதர் (ஈஸா நபி) மூலமாக!"
" அப்படி என்றால் அதற்கு முன் பைபிள் இல்லையா?"
" அதன் பெயர் பழைய ஏற்பாடு (Old Testament) "
" ஏசுநாதர் தான் இதை அருளினார் என்று பைபிளில் எங்கே போட்டுள்ளது? 
நான் தான் கடவுள்; என்னையே வணங்குங்கள்; என்று ஏசு எங்காவது ஓரிடத்தில் சொல்லி உள்ளாரா?"
" பார்த்துத் தான் சொல்ல வேண்டும்."
" சரி போகட்டும் என் சகோதரியே!
ஒரு புனித நூல் என்றால் - கடவுளிடமிருந்து இறங்கியது என்றால், அதில் முரண்பாடுகள் இருக்கக் கூடாதல்லவா?"
" கட்டாயமாக!"
" இறங்கியது முதல் அது உருமாறாது யாராலும் திருத்தப்படாது, அப்பழுக்கற்று அப்படியே இருக்க வேண்டுமல்லவா?"
" நிச்சயமாக!"
" சகோதரியே! எல்லா சுவரிலும் எல்லாச் சர்ச்சுகளிலும் பொதுவாக என்ன எழுதி உள்ளது? ஏசு எதற்காக இப்பூவுலக்கு வந்தார்?"
" ஏசு சமாதானத்தை போதிக்க வந்தார் என்று எழுதியுள்ளது. ஏசு சமாதானத்தையே விரும்பினார் என்று நாங்களனைவரும் ஏற்றுக் கொள்கிறோம்."
" சகோதரியே, பைபிளில் என்ன போட்டுள்ளது பாருங்கள்."
என்கையிலுள்ள பைபிளை தருகிறேன்.
49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள்.
53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.
லூக்கா - 12:49,51,52,53
34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.
35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
மத்தேயு - 10:34,35
ஏசுவின் வரிகளைச் சுட்டிக்காட்டியதும், பைபிளை என் கையிலிருந்து பிடுங்கி மேற்படி வசனங்களை திரும்பத் திரும்ப படிக்கிறார்.
முகம் சிவக்க,மனம் குழப்ப,புருவம் நெளிய தயவுடன் கொஞ்சம் இருங்கள்!(Excuseme) எனக்கூறிவிட்டு நெரெ(Cabincrew) பணிப்பெண்கள் அறை நோக்கிச் சென்று தனது பைபிளை எடுத்து புரட்டுகிறார். அட்டை, விலாசம்,அடிக்கப்பட்ட இடம் இவைகளை சரிப்பார்க்கிறார். இரண்டும் ஒன்று தான். வாசகங்களும் ஒன்றே! ஒரு பாட்டில் நீர் கொண்டுவந்து முழுவதும் குடிக்கிறார், வியர்வைத் துடைக்கிறார், சோர்ந்து அமர்கிறார், தன் கண்களையே நம்ப முடியாது தவிக்கிறார்.
அவரின் குழப்ப நிலையைக் கண்ட நான் " என்ன அன்புச் சகோதரியே! தங்கள் மனம் புண்படும்படி நான் ஏதாவது கூறியிருந்தால் மன்னியுங்கள். எனக்கு உங்கள் வயதில் சகோதாரிகளுண்டு.என் கருத்தை நான் கூறவில்லை. பைபிளில் உள்ளதையே எடுத்து வைத்தேன்! பாவம் உங்கள் 10 ஆண்டு பைபிளின் பாசத்தை நான் சிதைத்து விட்டேனா?"
' இல்லை சார், எனக்கு அதிர்ச்சியாய் உள்ளது! எப்படி இப்படி எழுதப்பட்டுள்ளது? யார் இப்படி செய்தது? என்னால் நம்ப முடியவில்லை!'
" சகோதரியே,அதை முஸ்லிம்களோ இந்துக்களோ செய்யவில்லை, செய்யவும் முடியாது. இதை சரிபார்த்தவர்கள் லிஸ்ட்டில் 32 மேதாவிகள் (Bible Scholars and 52 Demominations) 52 - உயர் பாதிரிஸ்தானிகர்கள் கூடி சரிப்பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. அதனால் மொழிபெயர்ப்பில் கோளாறு இல்லை. அப்படிக் கருத்தில் கொண்டாலும் இதோ தழிழ் பிரதி, இதுவும் அப்படியே! இதோ அரபிப்பிரதி" (தனக்கும் அரபி தெரியும் என்று வாங்கிப் படிக்கிறார்) ஆமோதிக்கிறார்.
" சகோதரியே! ஏசுநாதர் பேசிய மொழி என்ன?"
" அராமிக் (ARAMIC)"
" பைபிளிம் மூலப்பிரதி எந்த மொழியில் இருந்தது?"
" ஹிப்ரு (HEBREW)"
" தற்போது அராமிக் மொழியும் வழக்கில் இல்லை, மூலப்பிரதியும் காணாது போய்விட்டது."
" அராமிக் வழக்கில் இல்லை - பைபிளின் மூலப்பிரதி காணாது போய்விட்டது என்று யார் சொன்னது?"
" பைபிளே சொல்கிறது."
கடைசியில் திறந்து Summary of the book of the bible ( நூல் வரலாறு)K.J.V என்ற தலைப்பின் கீழ்: அதில் உள்ள வாசகம் இதோ!
NEW TESTAMENT
The New Testament, Which has a total of twenty seven Books, being with the four Gospels, which record the life and teachings of christ from four different view points Although the Originai autograph No Longer Exist.
27 புத்தகங்களைக் கொண்ட புதிய ஏற்பாடானது 4 சுவிஷேஷங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏசுநாதரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை நாலு கோணங்களில் பதிவு செய்கிறது. அதன் மூலப்பிரதி காணாமல் போய்விட்டதால்...
" சகோதரியே, நிலைமை இப்படி இருக்க நீங்கள் எதைவைத்து இதை நிருபிப்பீர்கள்? கடவுளால் அருளிய வேதம் காணாமல் போனதா? எப்படிச் சகோதரியே நம்புவது? காலம் காலமாய் கடைசி நாள் கியாமத் (Day of Judgemant) வரை வழிகாட்ட வேண்டிய நூல் எங்கோ வழி தவறினால், அதைப் பின்பற்றினால் என்ன நிலைமை? 
குருடன் குருடனுக்கு வழிக்காட்டினால் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதுவும் வழிகாட்ட வந்த முதல் குருடனே காணாது போன பின்,அடுத்தவன் அழைக்கிறான் -வாருங்கள் அவன் காட்டிய பாதையில் நான் கூட்டிச் செல்கிறேன் " ஏசு அழைக்கிறார்" என்று கூப்பாடு போட்டால் எப்படியம்மா ஏற்றுக் கொள்வது?
நான் பரந்த மனதுடனே கேட்கிறேன் எது சரி - சகோதரியே?
பிறகு, ஏசுவை நீங்கள் என்னவென்று நினைக்கிறீகள்?" என்றேன்.
" அவரே கடவுள் என்று எண்ணி வழிபடுகிறேன்" என்றார்.
" சரி - அவர் கடவுள் என்றால் ,எதை வைத்து அவரைக் கடவுள் என்கிறீர்கள்?"
" ஒரே வரி உலகில் யாருமே உடலுறவற்று பிறக்கவில்லை. அவரே - அவர் மட்டும் தந்தையற்று பிறந்துள்ளார்".
" தந்தை இல்லாது பிறந்ததனால் மட்டுமே அவர் இறைவன் என்றால் அதே பைபிளில் வரும் ஆதம் - ஏவாள் (ADAM & EVE) தாயுமற்று தந்தையுமற்று பிறந்துள்ளானரே! அவர்களை எப்படி அழைப்பது Super God என்றா?
ஆரம்பமும் அற்று முடிவும் அற்று,தாயும் இன்றி தகப்பனும் இன்றி, வம்ச வரலாறு,வம்ச வழியும் இன்றி,சமாதானத்தின் ராஜா மெல்கிதேக்கு(Kings of Peace)என்றழைக்கப்படும் தீர்க்கதரிசி பற்றி பைபிளின் எபிரெயருக்கு எழுதின நிருபத்தில் வருகிறதே - அதிகாரம் 7:2 முதல் 4வது வசனம் வரை - அவரை ஏன் கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை?
ஏசுநாதரே கடவுள் என்றால்,அவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படும் 3 நாள் இப்பூலகையும், கோள்களையும் வான்களையும் ஜீவராசிகளையும் யார் கவனித்துக் கொண்டது?
அவரது தாயின் வயிற்றில் 10மாத வளர்ச்சியின் போது உலகையாரம்மா கவனித்துக் கொண்டது?
நாத்திகனுக்கு இவைகள் நல்ல பிடியாகி விட்டதே!
ஏசுநாதரின் கடைசி வார்த்தைகள் என்ன என்று பைபிள் சொல்கிறது?
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு " ஏலோயீ! ஏலோயீலாமா சபக்தானி" என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு 'என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று அர்த்தமாம்.
மாற்கு 15:34
அவரே தேவன் (கடவுள்) என்கிறீர்கள். ஆனால் அவரே 'என் தேவனே! என் தேவனே!! ஏன் என்னைக் கைவிட்டீர்' என்கிறார். யாரையம்மா அழைத்தார்? தன்னைத் தானே அழைத்தாரா? ஏனிந்த குழப்பம்?"
மவுனம் பதிலாய் உள்ளது.
" கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கப்பெறும் என்று மத்தேயூ - 7:7ல் கூறியுள்ளப்படி நாம் கேட்டு கடவுளிடமிருந்து கிடைப்பது ஒரு பக்கமிருக்கட்டும். இவர் கேட்டே கிடைக்கவில்லையே! எப்படியம்மா இவர் பேச்சை நாம் கேட்பது என்று எந்த பாமர மகனும் யோசிப்பானல்லவா?"
இதற்கும் அச் சகோதரியிடமிருந்து மவுனமே பதிலாய் வந்தது.
" ஒரு புனித நூல் அனாச்சாரங்களுக்கும் அசிங்கங்களுக்கும் அப்பாற்பட்டு இருக்க வேண்டுமல்லவா? யாரோடும் ஆண், பெண் பேதமின்றி, பகிர்ந்து அர்த்தத்துடன் படிக்க வேண்டுமல்லவா? ஒரு புனித நூலை ஓதும்போது மனது கலக்கமோ, தயக்கமோ இன்றி உள்ளம் தெளிவடைய வேண்டுமல்லவா? மாறாக குழப்பமோ குதர்க்கமோ ஏற்பட்டால் அது புனித நூலாகாதல்லவா?"
" ஆமாம்!"
" சரி, சகோதரியே! நீங்கள் குளிக்கும்போது நான் மாடியிலிருந்து பார்ப்பது கூடுமா?"
" தண்டனைக்குரிய குற்றம்"
" சாதாரண மனிதனான எனக்கே கூடாது என்றால் இறைநேசச் செல்வர்கள் இதைச் செய்யலாமா?"
" யார் செய்தாலும் மிகப் பெரிய தண்டனை தரப்பட வேண்டும்".
" அப்படியானால் டேவிட்டை ஏன் தன்டிக்கவில்லை?"
" எந்த டேவிட்?"
(DAVID தாவூது) பைபிளில் வரும் ஏசுவின் முன்னோர்கள், ஏசுவின் பரம்பரை பட்டியலில் முதல் இடம் வகிப்பவர்!" (Genealogy)
" எங்கே போட்டுள்ளது?"
" இதோ - சாமுவேல் - அதிகாரம் - 11"
II Samuel - Chapter II version: 2 to 5
அதிகாரம் பதினொன்று சாமுவேல்
2. ஒரு நாள் சாயங்காலத்தில் தாவீது ( டேவிட் ) தன் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை உப்பரிகையின் மேல் உலாத்திக் கொண்டிருக்கும் போது ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின் மேலிருந்து கண்டான். அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள்.
3. அப்போது தாவீது அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான். அவள் எலியாமின் குமாரத்தியும், எத்தியனான உரியாவின் ம்னைவியுமாகிய பத்சேபாள் - என்றார்கள்.
4. அப்போது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்து வரச் சொன்னான், அவள் அவனிடத்தில் வந்தபோது அவளோட சயனித்தான். பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக் கொண்டு தன் வீட்டுக்குப் போனாள்.
5. அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினான்.
" போதும் நிறுத்துங்கள் சகோதரியே! ஒரு நபி - ஒழுக்கத்தை போதிக்க வேண்டியவரே - விபச்சாரம் அதுவும் பிறன் மனைவி என்று விசாரித்து தெரிந்து இந்தத் தவறை செய்துள்ளார்.
" அதன் பின்னால் உரியாவை ( பத்சேபாளின் கணவனை) பின்னர் கொலை செய்ய திட்டமிட்டு முடிக்கிறார்.
இதுதான் பைபிளின் லட்சணமா ?

No comments:

Post a Comment