தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 10, 2013

ஆதி காவியம்-பகுதி ,5,,,


பிரம்மாவினுடைய ஐந்தாவது தலையை சிவன் ஆணையில் வைரவன் குத்தி கிள்ளி எடுத்துவிட்டான் என்ற செய்தி பிரபஞ்சத்தில் சகல திசைக்கும் பரவியது .பிரம்மாவும் அவனது புத்திரர்களும் அவர்களை சார்ந்தவர்களும் தவ வலிமையும் மனவலிமையும் கர்வமும் உள்ளவர்கள் .சிவனும் சிவகணங்களும் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்தவர்கள் .உலக நன்மை மட்டுமே தங்கள் குறிக்கோளாக கொண்டு மக்களுக்கான துன்பங்களை துடைப்பதில் பெரும் பங்கு ஆற்றுபவர்கள் .இந்த இரு குழுவினரும் மோதிக்கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் மிக பெரும் அழிவுகள் நிகழும் ,அதுவும் சிவன் உக்கிரம் கொண்டால் சர்வ நாசம் நிகழும் ,என்பதை உணர்ந்த அங்கு தவம் செய்து கொண்டு இருந்த சப்த ரிசிகளும் .இவர்களுக்குள் போர் ஏற்படாத வாறு தடுக்க ,ஆதி சக்தியால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து ஆதி சத்தியை உடனே அழைத்து வர சென்றார்கள் . .

தற்பெருமையால் தன்னை யாரும் நெருங்க மாட்டார்கள் என்று கருதிய பிரம்மா தலை கொய்யப்பட்டதும் .தன் தவறை உணர்ந்துகொண்டான் ,ஆனால் அவனுடன் சேர்ந்து தவம் செய்து கொண்டு இருந்த பிரம்ம புத்திரர்களான ,தட்ஷன் , நாரதர் ,சனகர் ,சனந்தனர் ,சனாதனர் ,சனற்குமாரர் ,ஆகியோரும் .சிவன் குழுவினரை எதிர்த்து வசை மாரி பொழிந்தனர் .சண்டைக்கு தயாராகினர் .தாயார் சரஸ்வதி அவர்களுக்கு தந்தை பிரம்மா செய்தது பிழை அதனால் தான் தண்டிக்க பட்டார் .அவரே தான் செய்தது பிழை என்று உணர்கின்றார் .என் பிள்ளைகளான நீங்கள் ஏன் இவ்வாறு வீண் தர்க்கம் புரிகின்றீர்கள் .என்று எடுத்து கூறினார் .ஆனால் அவர்கள் கோபம் அடங்கவில்லை .தாய் சொல்லை கேட்பதாகவும் இல்லை .

அந்த வேளையில் ஆதி சக்தியும் அவருடன் அவரது பரிவாரங்களும் ,விஷ்ணுவும் அவரது குழுவினரும் அவ்விடத்துக்கு வருகின்றார்கள் .லட்சுமியும் சகோதரர் சிவன் குழுவினர் மாந்தர்களோடு சண்டை பிடிக்க போகின்றார்களா அதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என்று சிவன் குழுவில் இருந்த பெரியவர்கள் ,முனிவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்துக்கு வந்தார்கள் .அந்த பகுதியில் வாழ்ந்த செருக்கு மிகுந்த தாருகாவனத்து முனிவர்களை தவிர ஏனையவர்கள் அனைவரும் அந்த பகுதியில் வந்து ஒன்று கூடினார்கள் .

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்த ஆதிசக்தி .மனிதர்களாகிய நாம் எமக்குள்ளே மோதி கொள்வது நல்லதல்ல .நாம் சக மனிதர்களை நெறிப்படுத்தி அவர்களுக்கு வாழ்வின் சூட்சமங்களை வழிமுறைகளை கற்று கொடுக்கவேண்டும் .ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொள்ளவோ தாக்கவோ முற்பட கூடாது .இந்த உலகில் பிறந்த அனைவரும் சகல கலைகளையும் கற்கவும் .மற்றவர்களுக்கு கற்று கொடுக்கவும் உரிமை உள்ளவர்கள் ,இங்கு நான் பெரிது நீ பெரிது என்ற கருத்துக்கு இடம் இல்லை .இந்த உலகில் ஜனனமாகும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்கள் அன்னையும் அப்பனுமே உயர்வானவர்கள் .அவர்கள் கூற்றை செயலை பிள்ளைகள் மதிக்கவேண்டும் .அந்த வகையில் பிரம்ம குமாரர்களே உங்கள் அன்னையானவள் ஆணைக்கு கட்டுப்படவேண்டியது உங்கள் கடமை ஆகின்றது .

ஆதி சக்தியான நான் இந்த உலக உயிர்களை பரிபாலித்து அவர்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவி புரியவும் மனிதர்களுக்கு கலைகளை கற்றுகொடுக்கவுமே எனது வாழ்வை தியாகம் செய்து வருகின்றேன் .அருளும் அறிவும் வழங்கி உலக மேன்மைக்காக பாடுபடும் அதேவேளை என்னை எதிர்த்து நிற்கும் சக்தி யாராக இருந்தாலும் அவர்களை அழித்து மனித குலத்தை காப்பாற்றவும் தயங்க மாட்டேன் .மனித ஆசைகள் எனக்குள்ளும் இருப்பதை உணர்கின்றேன் அவற்றை நான் எனது ஐம்புலன்களால் அடக்கி ஞானத்தின் வாயிலாக அவற்றில் இருந்து விடுபட முயற்சிக்கின்றேன் .

ஆதி சிவனும் அவரது சிவகணங்களும் தங்கள் வாழ்வை கொடிய விலங்குகளிடம் இருந்தும் ஏனைய தீய சக்திகளிடம் இருந்தும் மனித குலத்தை காப்பாற்றுவதற்கே அர்ப்பணித்து இருக்கின்றார்கள் .அந்த அறப்பணியில் இன்று அவர்கள் கணங்களில் ஒரு வீரனை காலனை இழந்து துக்கமான மனநிலையில் நிற்கின்றார்கள் .அந்த வகையில் பிரம்மாவும் நீங்கள் அனைவரும் பேசத்தகாத வார்த்தைகளால் அவர்களை துன்புறுத்தியதும் கர்வம் கொண்டு சிரிப்பொலி எழுப்பியது மாபெரும் குற்றமாகும் .அதற்கு சரியான தண்டனையையே சிவன் பிரம்மனுக்கு வழங்கி இருக்கின்றார் .இவர் கர்வத்தையே அடக்கி இருக்கின்றார் .அதை பிரம்மாவும் உணர்ந்து இருக்கின்றார் என்பதை நினைத்து நான் பெருமிதம் கொள்கின்றேன் .

சக்தியின் உண்மையான தெளிவான பேச்சில் தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்த சிவன் தன்னை அறியாமலே கோபம் தணிந்து சக்தியை பார்த்து புன் முறுவல் செய்தார் .சக்தியும் பதிலுக்கு வணங்கி புன்னகை செய்தார் .இன்று இந்த குமரி நாட்டில் வாழும் பெரும் தொகையான மக்களும் இங்கே குழுமி இருப்பதால் நாம் மனித குலத்தின் வளர்க்சிகாகவும் பாதுகாப்புக்காகவும் பல்வேறு நெறி முறைகளை வகுக்க வேண்டும் .அந்த நெறி முறைகளின் படி மனித குலத்தை வளர்த்து மேன்மை அடைய செய்யவேண்டும் .எமது வாழ்வுக்கு பூமாதேவி தாயே தொடக்கம் .எனவே தாய் சொல்லை தட்டாத பிள்ளைகளாக ஜனனம் எடுக்கும் ஒவ்வொரு குழந்தையும் இருக்கவேண்டும் .எனவே தாயவள் ஆதி சக்தியின் ஆணைப்படி நாம் ஒவ்வொருவரும் செய்யப்போகும் கடமைகளை வகுத்துகொள்வோமாக என்று சிவன் கூறினார் .

அதுவே சரியானது என்று எல்லோரும் ஒருமித்து அகிலத்தின் முதன்மையான ஆதி சக்தியின் வாக்குக்கு நாம் அனைவரும் கட்டுபடுவோம் என்று சொன்னார்கள் .பிரம்மாவும் பிரம்மகுமாரர்களும் அவ்வாறே கூறினார்கள் .

ஆதி சக்தி ,சிவனையும் ,பிரம்மாவையும் ,விஷ்ணுவையும் ,முன் வருமாறு அழைத்து ,ததீசி ,மிருகண்டு ,அதர்வணர் ,மற்றும் சப்த ரிசிகளையும் ,சரஸ்வதி ,லட்சுமி ,காளி ,ஆகிய தேவியரையும் அருகில் அழைத்து ,இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதர்களுக்கு முதன்மையானவர்கள் தாயும் தந்தையும் .இன்று தாய் தந்தை குழந்தைகள் என்று மனித குலத்துக்கு முன் உதாரணமாக இருப்பவர்கள் .தவத்தில் உயர்ந்த பிரம்மனும் ,தேவி சரஸ்வதியும் ,அவர்களது பிள்ளைகளும் .எனவே மனித குலத்தின் விருத்தியையும் வளர்ச்சியையும் ,பரிபாலனத்தையும் பிரம்மன் தலைமை ஏற்று செய்ய வேண்டும் .இதற்கு சப்த ரிசிகளும் ஏனைய முனிவர்களும் ஏனையோரும் இவர்களுக்கு சகல விதத்திலும் உதவ வேண்டும் .

அடுத்து வனங்களை வாழும் தலமாக்கி ,பயிர்களை நட்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும் உணவு வழங்கும் மகோ உன்னத சேவையை செய்யும் மகா விஷ்ணு இங்கு இருக்கின்றார் .இவரை பற்றி நான் பல விதத்தில் அறிந்து இருந்தாலும் இன்று தான் இவரது அறிமுகம் எனக்கு கிடைத்தது .என்று ஆதி சக்தி கூற இருவரும் கரம் கூப்பி வணக்கம் தெரிவித்து கொண்டனர் .அருகில் நின்ற லட்சுமியும் கைகள் நடுக்க விஷ்ணுவுக்கு வணக்கம் சொன்னாள் .முதல் பார்வையில் இருவரும் சங்கமித்தார்கள் .விஷ்ணுவின் புன் சிரிப்பு லட்சுமியை ஆட்கொண்டது .ஆதி சக்தியின் தொடர்ந்து கருத்தை கூறதொடங்க இவர்கள் கண்கள் மட்டும் விலகின .

விஷ்ணு ,ஆறுகள், கடல்கள் ,மலைகள் ,வனங்கள் ,ஆகியவற்றை அண்மித்த எந்த பகுதியானாலும் அவற்றை மக்கள் வாழும் தலங்களாக மாற்றி மக்களை பரவலாக இருப்பிடங்களை ஏற்படுத்தி வாழ வழி அமைக்கின்றார் . அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்யவும் ஏனையவர்களுக்கும் கொடுக்கவும் அவர்களுக்கு அறிவுரை கூறுகின்றார் .சிலாதன் மேற்பார்வையில் கால் நடைகளையும் வளர்த்து குழந்தைகளுக்கு பால் கிடைக்க செய்கின்றார் .எனவே மக்களின் அவசிய தேவையான உணவை வழங்கி அவர்கள் உயிர்களை காக்கும் இவர் .உலக ஜீவராசிகளை காக்கும் பணியையும் பூமியின் சகல பகுதிகளுக்கும் சென்று அங்கு வாழும் மக்களுக்கு வழி காட்டியாகவும் இருப்பார் .இவருக்கு இவரை சார்ந்தவர்கள் பெரும் துணையாக இருப்பதோடு நாமும் துணையாக இருப்போம் ,,,,,,

இதுவரை மனித குலத்தை கொடிய விலங்குகள் ,பாம்பு ,தீய சக்திகள் போன்றவற்றின் அழிவில் இருந்து எங்களை பாதுகாத்து எங்களுகெல்லாம் அங்க ரட்சகராய் இருக்கும் சிவன் .இவர் இந்த சிருஷ்டியை பாதுகாப்பதையே தனது கடமையாக கொண்டு இருக்கின்றார் .இவரால் தான் இந்த மனித குலம் இன்று தீய சக்திகளிடம் இருந்து காப்பாற்றபட்டு இருக்கின்றது .நாம் இன்று நிம்மதியாக நடமாடுகின்றோம் உயிர்வாழ்கின்றோம் என்றால் அதற்க்கு காரண கர்த்தா இவர்தான் எனவே நாம் அனைவரும் இவரை ஒரு தாயினும் மேம்பட்ட நல்ல தலைவனாக ,தந்தைக்காக மதிக்க வேண்டும் .இவரே நம்மை இந்த அகிலத்தில் அழிவுகளில் இருந்து காப்பாற்றுவார் .

ஆதி சக்தியாகிய நான் ஞானத்தை கல்வியை பிரம்மன் மனைவி சரஸ்வதி மூலமாகவும் ,செல்வத்தை தானத்தை ,வளர்க்கவும் பெருக்கவும் அவற்றை இல்லாதவர்களுக்கு கொடுக்கவும் ,சிவனது சகோதரியான இலட்சுமியையும் ,வீர வித்தைகளையும் தற்காப்பு கலைகளையும் ,பத்திரர் மனைவியாகிய காளியையும் பயிற்றுவித்து அவர்கள் மூலமாக அனைத்து மக்களுக்கும் போதிப்பேன் .

நான் வகுத்த இந்த நெறிமுறைகளில் இருந்து யாராவது தவறுவார்கள் ஆக இருந்தால் அல்லது ,அவர்களால் சரியாக செய்ய முடியாமல் போனால் நானும் சிவனும் இணைத்து அவற்றை சீர் செய்வோம் தவறுபவர்களுக்கு தண்டனையும் வழங்குவோம் ,,,,,,,,,இவ்வாறு கூறி அனைவருக்கும் இந்த தீர்மானங்களில் ஒப்புமை இருக்கின்றதா ,அல்லது யாருக்காவது மாற்று கருத்து இருக்கின்றதா என்று கேட்டார் .எல்லோரும் ஒருமித்தே ஆதி சக்தி வாழ்க ,,என்று கரகோஷம் செய்து உங்கள் கருத்தில் பூரண சம்மதம் என்றார்கள் ,,,

எப்பிடிதான் இருந்தாலும் ஆதி சக்தி ஒரு மாபெரும் சக்திதான் கடைசியில் கொண்டுவந்து தன்னையும் என்னையும் இணைத்து விட்டார் .இந்த இணைவை தானே நான் எதர்பார்த்து இருக்கின்றேன் என்ற மனக்கோட்டையில் சிவன் சிந்தனைகள் சிரித்தது ,,,,,,,தொடர் வளரும் ,,,,,,,சிவமேனகை ,,,,,

No comments:

Post a Comment