தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 மே, 2016

பெருங்காயம்...


பெருங்காயத்தை நாம் பெரும்பாலும் சமையலில் நறு மணம் ஊட்டக்கூடிய பொருளாகவே பயன்படுத்துகி றோம், ஆனால் இதற்கென்று பிரத்யேகமான மருத்துவப் பயன்கள் உண்டு.
பெருங்காயம்,உஷ்ணத்தைத் தரக்கூடியது.உணவை செரி ப்பிக்கிறது ;சுவையை அதிகப்படுத்துகிறது. இது கூர்மை யானதும் ஊடுருவும் தன்மையுமுடையதாகும், இது வாதத் தையும் கபத்தையும் கண்டிக்கிறது.பித்தத்தை உயர்த் துகிறது. இது வயிறு உப்பல், கிருமி ஆகியவைகளின்சிகிச்சைக்கும் குடற் புழுவகற்றியாகவும் பயன்படும்.
உபயோகங்கள் : இது ஒரு நல்ல வாய்வகற்றி; உணவுப் பொருள்களைச் சீரணம் செய்வதில் உதவி செய்கிறது. இது அதிகமாக வாத நோய்களில் உபயோகிக்கப்படுகி றது. இது, வழக்கமான அதாவது எப்போதும் உள்ள இரும லுக்கு கோழையகற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,
நீரேற்றத்தையும் - சவ்வுகளின் வீக்கத்தையும், காசத்தை யும் நீக்குகிறது. சுவாச நோயில் இசிவகற்றியாகவும், வயிற்றில் ஏற்படும் பாதிப்புகட்கும், குடற் கிருமிகளை வெளிப்படுத்தவும் பயனுடையதாகிறது.
இது, குடலின் உப்புதலை குறைக்கிறது. இதன் சிறப்புச் செய்கையினால் வலி உள்ள மாத விடாயின்போது தீட்டை அதிகமாக்குவதற்காகக் கொடுக்கப்படுகிறது.
நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் மூர்ச்சை நோயிலும், வலி ப்பு நோயிலும், இது சம்பந்தமான நரம்புக் கோளாறுகளி லும் மிகவும் பயனுடையதாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நஞ்சக் கொடியை வெளியேற்ற கொடுக்கப்படுகிறது. இதை ( பெருங்காயத்தை ) எண் ணெயில் கரைய வைத்துக் காயங்கட்கு மேலே பூசுவதற் கும், காது நோய்களில் பழக்கமான நேர் மருந்தாகக் காது வலியைக் குறைக்க பயன்படுகிறது.
இதைப் பொரித்து உபயோகப்படுத்தலே நலம். பச்சை யாக உபயோகித்தால் வாந்தியுண்டாகும்.
இதை நீர் விட்டு உரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தை கட்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.
பிரசவத்தின் பின், அழுக்கை வெளிப்படுத்தக் காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லத்துடன் சேர்த்துக் காலையில் கொடுக்கலாம்.
எண்ணெயிலிட்டுக் காய்ச்சி காதுக்கிட, காது வலி தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக