தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

தமிழர் கணிதத் திறனுக்கு ஒரு சான்று !



தமிழர் கணிதத் திறனுக்கு ஒரு சான்று !

தமிழில் கணிதம் என்று ஒன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆங்கில கல்வியும், ஆரியமும் நம்மை பார்த்து இன்று ஏளனமாக சிரிக்கிறது .

ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்றதோடு நுணுக்கமாக நேர்கோட்டில் வீதிகளையும், வீடுகளையும், கோவில்களையும், சிற்பங்களையும் கட்டி அமைத்தனர். அவை எல்லாம் நுண் கணிதம் இல்லாமல் சாத்தியமாகாது . யானைப் படையை ஏற்றிக் கொண்டு கடல் வழியே கடாரம் வரை சென்றது சோழர் படை . அக்கப்பல்கள் எண் கணிதம் இல்லாமல் வடிமைக்கப்படுமா ? எண்ணியல்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற நிலையில் தமிழர்கள் இருந்தனர் என்பதற்கு இந்தப் படமே சான்று .

பண்டைய தமிழர்கள் பத்தின் பெருக்கம் அனைத்திற்கும் ஒவ்வொரு பெயர் வைத்தனர். ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீட்டை உருவாக்கினர். நூறு, ஆயிரம், பத்தாயிரம் , இலக்கம் , கோடி என விரியும் ஒவ்வொரு நிலைக்கும் ஒரு பெயர் வைத்து வழங்கிய தமிழர்கள் எந்த அளவிற்கு தமிழ் கணித முறையில் தேர்ச்சி பெற்று இருப்பார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும் . தமிழை அறிந்தவர் கணிதத்தையும் அறிந்தவரே ஆவார். மீட்டெடுப்போம் தமிழர் கணித முறைகளை . நம் குழந்தைகளுக்கு தமிழ்க் கணித முறையை சொல்லிக் கொடுப்போம் .

கீழே வள்ளலார் பாடலில் குறிப்பிட்டுள்ளது பத்தின் பெருக்கம் கோடியில் அளவில்லாமல் பெருகும் என்பதற்கு சான்று !
 —


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக