தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 4, 2016

லிங்க அருவி


நீங்கள் நதியின் ஓரம் சிவன் கோவிலை பார்த்து இருப்பீர்கள். நதிக்கு நடுவில் சிவன் கோவிலை பார்த்து இருப்பீர்கள். ஆனால் ஒரு நதியே சிவன் கோவிலாக இருப்பதை பார்த்து இருக்கிறீகளா? அதை நீங்கள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா அருகே இருக்கும் சிர்சியில் மட்டுமே நீங்கள் பார்க்க முடியும். அந்த அருவியின் பெயர் ஷால்மலா அருவி. அந்த அருவியில். ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரம் லிங்கங்கள் இருக்கிறது. 1678- 1718 வரை இந்த பகுதியை ஆண்ட விஜயநகர மன்னரான சதாசிவ ராயர். இந்த அருவியில் உள்ள பாறைகளில் இந்த சிவலிங்கங்களை உருவாக்கினார். கர்நாடகா சுற்றுலா செல்பவர்கள் அவசியம் இதை பார்க்க வேண்டும். காரணம் இது போன்ற இன்னொரு அருவி உலகில் வேறு எங்கும் இல்லை.

இதை தவிர்த்து. கர்நாடகாவில் மிக முக்கியமாக பார்க்க வேண்டிய இடங்கள்.

மைசூரில் ஒரு ஸ்ரீரங்கம் கோவில் இருக்கிறது. பஞ்ச ரங்கங்கள் என்று சொல்வார்கள். அதில் இந்த ஸ்ரீ ரங்க நாதரும் ஒருவர். மற்றும் நிமிஷாம்பா என்கிற மிக.... சக்தி வாய்ந்த ஒரு அம்மன் ஆலயம். மற்றும் அனைவரும் அறிந்த சாமுண்டேஸ்வரி தேவி. இதை தவிர்த்து. குக்கே சுப்ரமண்யா, கட்டீல், உடுப்பி கிருஷ்ணர் கோவில், தர்மஸ்தாலா, கோகர்ணா, இடகுஞ்சி,முருதேஸ்வரா, கொல்லூர் மூகாம்பிகை, சிருங்கேரி, ஹொரநாடு, பெல்லுர், ஹளேபீடு முதலான கர்நாடகத்தில் உள்ள அணைத்து புண்ணிய ஷேத்ரங்களையும் பார்ப்பது என்றால் அதற்கு ஒரு 7 நாட்கள் தாராளமாக தேவைப்படும்.

இன்று அனைத்தும் பாஸ்ட் புட் போல் இருக்க வேண்டும் என்பதே பலரின் எதிர் பார்ப்பு. 4 நாள் சுற்றுலா, 5 நாள் சுற்றுலா என்று செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்தால் முக்கிய கோவில்களை நாம் தரிசிக்க முடியாமல் போய் விடும். அடிக்கடி நமக்கு இது போன்ற இடங்களுக்கு தொடர்ந்து வர முடியுமா என்பது சந்தேகமே. மிஞ்சி போனால் வாழ்வில் ஒருமுறை. அதை நாம் நிறைவாக செய்ய வேண்டும் அல்லவா.

https://www.facebook.com/photo.php?fbid=852826908156678&set=gm.961996197219579&type=3&theater

No comments:

Post a Comment