தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, September 1, 2017

1000 லிங்கங்களுக்கு அபிசேகம் செய்யும் இயற்கையின் அதிசயம்!

1000 சிவலிங்கங்களுக்கு இயற்கையே அபிசேகம் செய்யும் அற்புதக் காட்சி கர்நாடக மாநிலத்தின் பகுதியில் சீர்சி கிராமத்தில் அமைந்துள்ள சால்மலா எனும் ஆற்றில் உள்ளது.
இயற்கையே 1000 சிவலிங்கங்களுக்கு நீர் அபிஷேகம் செய்யும் அதிசயம் நடக்கின்றது.
பொதுவாக, தானாக தோன்றும் சிவலிங்கங்களை இந்துக்கள் சுயம்பு லிங்கம் என்று கூறுவார்கள்.
ஆனால் ஒரே இடத்தில் காணப்படும் 1000 லிங்கங்களும் தானாகவே தோன்றி உள்ளனவா? அல்லது யாரேனும் உருவாக்கினார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு ஒரே இடத்தில் 1000 சிவலிங்கங்கள் காணப்படும் காட்சி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீரோட்டம் உள்ள பகுதிகளில் தான் இந்த லிங்கங்கள் அனைத்தும் உள்ளன.
ஓடும் நதியும், அதன் நடுவே அமைந்திருக்கும் லிங்கங்களும் ஆத்ம திருப்தியைக் கொடுப்பதாக உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சீர்சி கிராமத்தில் அமைந்துள்ள சால்மலா எனும் ஆற்றிலேயே இந்த 1000 லிங்கங்கள் அமைந்துள்ளன.
இந்த ஆறு சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. குறித்த இடம் சஹஸ்கர ஷேத்திரம் என அழைக்கப்படும்.
இதனுடன் ராமர், லட்சுமி, பிரம்மன் போன்ற சுவாமி சிலைகளும் உள்ளன.
சிவலிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவ மழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும்.
அந்த சந்தர்ப்பத்தில் இந்த லிங்கங்களுக்கு எந்த நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம் தான். இதுவே சிறப்பம்சமாகும்.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரியின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இந்த இடத்திற்கு செல்வது ஒருவித மன அமைதியை கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பது இது வரையும் அறிய முடியாதுள்ளது.
இருப்பினும், யாராக இருந்தாலும், இப்படியொரு சிந்தனையை வெளிப்படுத்தியவர், மிகப்பெரிய மகானாகவே இருக்க வேண்டும் இந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/special/01/157093

1 comment: