தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, April 30, 2018

கண்டி நாயக்கரும் கண்டி சிங்களவரும் !

ஆண்டு 1814.

கொலைஞர்கள் உறுவிய வாளுடன் நின்றிருந்தனர்.

குமாரிஹாமி என்ற சிங்களப் பெண் மார்பில் பால் குடிக்கும் குழந்தையுடன் இழுத்துவரப்பட்டாள்.
கூடவே அவள் பெற்ற மூன்று சிறுவர்களும்.

கண்டியின் ராணிமாளிகை முன்னால் நாத தேவாலயம் மற்றறும் விஷ்ணு தேவாலயம் இரண்டிற்கும் மத்தியில் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

மக்கள் அங்கே குழுமிவிட்டனர்.

கண்டியின் கடைசி (தெலுங்கு நாயக்க) மன்னனான கண்ணுச்சாமி நாயுடு (விக்கிரம ராஜ சிம்மன்) உத்தரவு நிறைவேற்றப்பட்டது.

முதலில் மூத்தமகன் பதினோரு வயது பாலகன் லொக்குபண்டாவை இழுத்து வந்து தலையை வெட்டினர்.

பிறகு இரண்டாவது மகன் ஒன்பது வயது சிறுவன் தானே முன்வந்து நின்றான்.
அவன் தலையையும் வெட்டப்பட்டது.

மூன்றாவது மகன் டிங்கிரி மெனிக்கே.
அக்குழந்தை தாயை இறுகப் பற்றிக்கொண்டு கதறி அழுதுகொண்டிருந்தது.
அதையும் இழுத்துவந்து தலையை வெட்டினார்கள்.

மார்பில் இறுக்கமாக அணைத்துக்கொண்டு இந்த குழந்தையையாவது விடும்படி கேட்டாள் அந்த தாய்.
வடுக மன்னன் மனம் இரங்கவில்லை.
பறித்து வந்து அதன் தலையையும் வெட்டினர்.

வெறியடங்காத மன்னன் தலைகளை எடுத்து உரலில் போட்டு இடிக்கச் சொன்னான்.
தெருவில் உருண்டுசென்று கிடந்த தலைகள் எடுத்துவரப்பட்டு உரலில் போட்டு இடித்து சிதைக்கப்பட்டன.

கூடியிருந்த மக்கள் மூச்சுவிட மறந்திருந்தனர்.
அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சிலைகளாகினர்.
அடுத்து என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.

"ராஜதுரோகத்திற்கு இதுதான் தண்டனை" என்று கூறினான் கண்ணுச்சாமி.

குமாரிஹாமியும் மேலும் இருபெண்களும் கைகால்கள் கட்டப்பட்டு வண்டியில் தூக்கிப்போடப்பட்டனர்.

கணமான கல்வைத்து கட்டப்பட்டு நுவரவாவியில் மூன்று பெண்களும் வீசப்பட்டதை மக்கள் கண்டார்கள்.

இந்த கண்ணுச்சாமி என்ற தெலுங்கனுக்குதான் தமிழகத்தில் தெலுங்கினத் தலைவன் கருணாநிதி மணிமண்டபம் கட்டியுள்ளான்.
--------------------
ஏன் இந்த கொடூரமான கொலைகள் நடந்தன என்றறிய வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம்.

தமிழகத்தில் தெலுங்கு ஆட்சி வந்தபிறகு தெலுங்கு நாயக்க மன்னர்கள், கண்டி சிங்கள மன்னருக்கு தமது பெண்களை மணமுடித்துக் கொடுத்து வந்தனர்.

பெண்களுடன் சில உறவினர்களும் கண்டி சென்று தங்கினர்.
நாளடைவில் அவர்கள் மந்திரி சபையிலும் படையிலும் பதவிகள் பெற்றனர்.
இதன்மூலம் கண்டி அரசில் தெலுங்கர் ஆதிக்கம் தலைதூக்கியது.
சிங்களவருக்கும் தெலுங்கருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.

கண்டி தெலுங்கர்கள் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியை பேசினாலும் சிங்களவர் அவர்களைத் தங்கள் இனமாக எண்ணவில்லை.

சிங்களம் பேசும் தெலுங்கர், "சிங்கள இனவெறி" என்ற முகமூடியை அணிந்துகொண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவும்வரை சிங்களவர்கள் அவர்களிடம் ஏமாறவில்லை.

மேலும் கண்டி தெலுங்கர் தமிழகத் தெலுங்கருடன் தொடர்பினைத் தொடர்ந்து பேணிவந்தனர்.
குறிப்பாக மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்களுடன் தொடர்ச்சியாக கொடுக்கல் வாங்கல் இருந்தது.

திருமலை நாயக்கரின் உறவினர் நரேனப்பநாயக்கர் சிங்கள மன்னனுக்கு பெண் கொடுக்கும்போதே தன் மகன்களுடன் கண்டிக்கு வந்து அங்கேயே தங்கி இருந்தார்.

1708 ல் ஆண்வாரிசு இல்லாத கண்டி மன்னன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மைத்துனனை அரசனாக்கினான்.
இவனே சிங்களக் கலப்பில்லாத முழு தெலுங்கன்.
விஜயபாலன் என்ற இயற்பெயரை மறைத்து சிறீ விஜயராஜ சிம்மன் என்ற சிங்களப் பெயரை சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான்.
(அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய வடுக வீரபாகு என ஏற்கனவே முகநூலில் இது தொடர்பான பதிவு வளையவந்தது நினைவிருக்கலாம்)

சிங்கள அமைச்சர்கள் மன்னனின் வைப்பாட்டிக்குப் பிறந்த உனம்பு பண்டாரவுக்கு முடிசூட்ட வலியுறுத்தினர்.
இது நடக்கவில்லை.

சிங்களவரைச் சரிகட்ட தமிழர் மட்டுமே வணங்கிவந்த சிவனொளிபாத மலையை பௌத்தருக்கும் சொந்தம் என அறிவித்து சிங்களவருக்குத் திறந்துவிட்டான்.

நில நிர்வாக அதிகாரங்கள் நரேந்திரசிம்மன் என்ற தெலுங்கனுக்கு வழங்கப்பட்டது.
சிங்கள பிரதானிகள் இவருக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

இந்த நேரத்தில் மேற்கு இலங்கையை டச்சுக்காரர்கள் பிடித்திருந்தனர்.

இவனுக்கு அடுத்து அவனது சகோதரன் கீர்த்தி சிறீராஜ சிம்மன் அரியணை ஏறினான்.
இவனும் தமிழகத்தில் பிறந்த தெலுங்கனே.
தமிழக நடுகாட்டுச்சாமியார் என்ற வடுகரின் மகளை 1749 ல் திருமணம் செய்தான்.
நடுகாட்டு சாமி குடும்பமும் கண்டிக்கு வந்து தங்கியது.
கண்டியின் ஒரு பகுதியே தெலுங்கு மயமானது.

இந்த கீர்த்தி ராஜசிம்மனைக் கொல்ல சிங்கள மந்திரிகள் திட்டம் தீட்டினர்.
இது அரசனுக்குத் தெரிந்துவிட்டது.
மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகிய சிங்கள மந்திரிகள் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.

இவர்களுடன் சதியில் ஈடுபட்ட புத்த மதகுருவும் சங்கராஜா என்பவரும் தலைவெட்டிக்கொல்லப்பட்டனர் பிறகு அரியணை ஏறிய இரண்டாம் ராஜசிம்மன் என்பவனால்.
கண்டியில் தெலுங்கு ஆதிக்கம் உச்சநிலையை அடைந்தது.

1764 டச்சு படையெடுப்பு வானென்
என்பவன் தலைமையில் நடந்தது.
மன்னன் ஓடிப்போய் தலைமறைவு ஆனான்.
கண்டியை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
ஆனால் மழை பெருமளவில் பெய்து வெள்ளம் ஏற்பட்டது.
டச்சுக்காரர்களுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தது.
1766 டச்சுக்காரர்கள் மன்னனுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பின்வாங்கினர்.

கீர்த்தி ராஜசிம்மன் மீண்டும் அரியணை ஏறினான்.
இவனுக்குப்பின் இவனது சகோதரன் ராஜாதி ராஜசிம்மன் என்ற தமிழகத்தில் பிறந்த தெலுங்கன் அரியணை ஏறினான்.

1795 திருகோணமலை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
கண்டியுடன் சமாதானமாக இருக்க தூது அனுப்பினர்.
இது சிங்கள அமைச்சரான பிலிமத்தலாவை மூலம் நடந்தது.
மன்னனுக்கு அடுத்த செல்வாக்கு பெறலானார் பிலிமத்தலாவை என்னும் இந்த சிங்களர்.
கண்டி மன்னன் மரணமடைந்தான்.

இதுவரை காத்திருந்த சிங்களர்கள் காய்நகர்த்தினர்.
அரியணைக்கு வரவேண்டிய மூத்தவரான முத்துசாமி என்ற தெலுங்கரை கொலை செய்ய முயற்சித்தனர்.
பயந்துபோன முத்துசாமி ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தான்.
தெலுங்கு மந்திரிகள் ஆவேசம் கொண்டனர்.
இதைச் சரிகட்ட
மன்னனின் எட்டு வாரிசுகளில் கடைசியானவனும் வயதில் இளையவனுமான கண்ணுச்சாமியை அரியணையில் பெயருக்கு உட்காரவைத்துவிட்டு மூடிசூடா மன்னராக விளங்கினான் பிலிமத்தலாவை.

தனக்கு மைத்துன முறைகொண்ட எகலப்பொல என்ற சிங்கள இளைஞனை முக்கிய பொறுப்பில் நியமித்தான்.
முன்னாள் அரசியை சிறையிலிட்டான்.
மன்னனின் தெலுங்கு உறவினர் பலரையும் சிறையிலடைத்தான்.
கம்பளை நாயக்கர் என்ற செல்வாக்கு மிக்க தெலுங்கரையும் சிறையிலடைத்தான்.
அரவாளை என்பவரைக் கொலை செய்தான்.
பல மன்னர் குடும்ப உறவினர்கள் ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தனர்.

கண்டியில் மீண்டும் சிங்கள ஆதிக்கம் கை ஓங்கியது.

ஆங்கிலேயர் பிரட்ரிக் நோர்த் என்பவன் தலைமையில் கண்டிமீது படையெடுத்தனர்.

இந்த முறையும் மன்னன் ஓடி ஒளிந்தான்.
கண்டி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.

தங்களிடம் தஞ்சமடைந்திருந்த முத்துசாமியை மன்னன் ஆக்கினர்.
டச்சுக்காரர்களைப் போல மக்கள் ஆங்கிலேயரையும் வெறுத்தனர்.
இந்த முறை மழை பெய்ததோடு நில்லாமல் காட்டு மலேரியா பரவியது.

இந்தநிலையை பயன்படுத்திக்கொண்டு பிலிமாத்தலாவை சிங்கள மக்களின் ஆதரவுடன் படையைத் திரட்டி ஆங்கிலேயரைத் தோற்கடித்தான்.
கண்டியை மீண்டும் கைப்பற்றினான்.
தெலுங்கன் முத்துசாமியை தலையை வெட்டிக் கொன்றான்.
இது நடந்தது 1803.

விக்கிரம ராஜசிங்கன் (கண்ணுசாமி) மீண்டும் அரியணை ஏற்றப்பட்டான்.
பிலிமத்தலாவை தெலுங்கர் வழியிலேயே சென்று தலைமையைக் கைப்பற்ற நினைத்தான்.
தன் மகளை மன்னனுக்கு மணமுடித்துவைத்தான்.

பிறகு மன்னனைக் கொல்ல சதி செய்தான்.
மூன்றுமுறை முயற்சி செய்தும் மருமகனை கொலை செய்யும் திட்டம் வெற்றிபெறவில்லை.

இதை அறிந்த கண்ணுச்சாமி பிலிமத்தலாவையை தலையை வெட்டிக் கொன்றான்.

கொதித்துப்போயிருந்த சிங்களவரைச் சரிகட்ட பிலிமத்தலாவை அரசு பதவியில் நியமித்த அவனது மைத்துனனான எகலபொல அவனது இடத்தில் நியமிக்கப்பட்டான்.

எகலபொல மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்தான்.
மன்னனை மதிக்காமல் மன்னனைப் போலவே நடந்துகொண்டான்.
அவனது அதிகாரமே எங்கும் கொடிகட்டிப்பறந்தது.
சிங்கள மந்திரி பிரதானிகள் இன்னொரு பிலிமத்தலாவையாக எண்ணி இவனுக்கு ஆதரவு தந்தனர்.

கண்ணுச்சாமிக்கும் எகலபொலவுக்கும் மோதல் அதிகரித்தது.
எகலபொல ஆங்கிலேயர் உதவியுடன் மன்னனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.

இதையறிந்த மன்னன் எகலபொல குடும்பத்தை சிறையடைத்தான்.
ஆங்கிலேயருடன் படை திரட்டிக்கொண்டு கண்டி நோக்கி முன்னேறினான் எகலபொல.
தமிழக தெலுங்கு மன்னர்களும் வலு இழந்துவிட்ட காலம்.
இருந்தாலும் அவர்கள் 100 போர்வீரர்களையும் சில உதவிகளையும் அனுப்பினர்.

அப்போதுதான் எகலபொல குடும்பத்தைக் கொலை கொடூரமாகக் கொலை செய்தான் கண்ணுசாமி.
இதனால் இம்முறை மக்கள் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.
கண்ணுச்சாமி வழக்கம்போல ஓடிப்போய் தலைமறைவானான்.

ஒரு குகையில் தன் மூன்று மனைவிகளுடன் மறைந்திருந்தான்.
ஆங்கிலேயருடன் எகலபொல படையில் இருந்த சிங்கள படைவீரர்கள் அவனைக் கண்டுபிடித்து அடித்து துவைத்தனர்.

ஆங்கிலேயர் வந்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
"தண்ணீர் வேண்டுமா?" எனக் கேட்டனர்.
"இல்லை மது வேண்டும்" என்றான். மது கொடுத்து பல்லக்கில் மரியாதையுடன் அழைத்துச் சென்று தமிழக சிறையில் அடைத்தனர்.
அவனை அழைத்துச் செல்லப்பட்ட கப்பலில் மன்னனுடன் ஏறத்தாழ முப்பது மனைவிகளும் மாமியாரும் உறவினருமாக பெரிய கூட்டம் ஏற்றப்பட்டது.
இது நடந்தது 1815.

எகலபொல தன்னை ஆங்கிலேயர் அரசனாக்குவர் என்று எதிர்பார்த்தான்.
ஆனால் அது நடக்கவில்லை.
ஆங்கிலேயர் தமது நேரடி ஆட்சியை அங்கே ஏற்படுத்தினர்.

17 ஆண்டுகள் சிறையில் முழு குடும்பத்துடனும் தாராளமான மதுவுடனும் இராஜவாழ்க்கை வாழ்ந்தான் கண்ணுச்சாமி.
சிறையில் அவனுக்கு குழந்தைகளும் பிறந்தன.
அளவுக்கதிமாக மது குடித்ததாலேயே இறந்தும் போனான்.

கண்டி நாயக்கர் கதையில் தெலுங்கருக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்த சிங்களர் இருக்கின்றனர்.
ஆனால் சிங்களுக்கு ஆதரவான ஒரு தெலுங்கர் கூட இல்லை.
சிங்களரை விடவும் இனப்பற்று உள்ளவராக தெலுங்கர்கள் இருக்கின்றனர்.

கண்ணுசாமியின் வீர(?)வரலாறு மறக்காமல் இருக்கத்தான் இலங்கையின் கடைசித் தமிழ்(?)மன்னன் என்று தெட்சிணாமூர்த்தி (கருணாநிதி) தமிழகத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளான்.

இதன் மூலம் இவன் சிங்களருக்குச் செய்த கொடுமைகள் தமிழர் தலையில் வந்து விழுந்தன.

கண்டியில் குடியேறிய தெலுங்கு குடும்ப வாரிசுகளே இன்று இலங்கையில் அரசு செய்யும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும்.

பண்டாரநாயக, சேனநாயக, ராஜபக்ச ஆகிய குடும்பங்கள் சிங்களம் பேசும் தெலுங்கரே.

300 ஆண்டுகள் முன்பு இலங்கைக்கு வந்த இந்த வந்தேறிகள்,
2500 ஆண்டுகள் முன்பு குடிவந்த சிங்களவருக்குள் மறைந்துகொண்டு "இனவெறி" முகமூடியை அணிந்துகொண்டு
இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்துவருகின்றனர்.
 — with Dhakshinamoorthy B.

https://www.facebook.com/photo.php?fbid=691985957571727&set=a.108935022543493.9865.100002809860739&type=3&theater

கண்டி நாயக்கர் - தமிழ்தேசிய ஆவணப்படம்

https://youtu.be/cqoR71un8ao


https://youtu.be/C4UnJcIW4hk

https://youtu.be/EQiYKdRRmow

https://youtu.be/tP2nz6YPy1Y

https://youtu.be/ZACgsYj8glA

முழுமையாகக் காண- 
https://youtu.be/ybOuXKeeIQ0


இலங்கையில் தெலுங்கு மரபினர்

தமிழகத்தை நாயக்க மன்னர்களும், தொடர்ந்து கிழக்கிந்தியக் கம்பெனியினரும் வழித்தெடுத்து நக்கியதால் ஏற்பட்ட பஞ்சத்தையடுத்து மலையகத்திற்குப் பிழைக்கப்போன தமிழர்களைச் சந்தித்திருக்கிறீர்களா? 
எங்கள் பகுதியில் நிறைய உன்டு.
பால்யவயதில் மின்சாரமற்ற நிலவொளி வேளைகளில் கையகல உரலிலிட்ட 'மட்டைக்குச்சி' புகையிலைத் துண்டுகளை இடித்துக் கொண்டே தாங்கள் வாழ்ந்த கதை சொல்வார்கள்.
வெற்றிலையின் ரத்தச்சிவப்பாய் வழியும் துன்பம்.

இது உழைக்கப் போனவர்கள் தங்கள் வாழ்க்கையை வீனாக்கி கண்டியில் குடியுரிமை மறுக்கப்பட்டுத் திரும்பிய கதை.

அக்காவைக் கொடுத்து நாட்டைப் பிடித்த வடுக வீரபாகுகள் கதை தெரியுமா?
படியுங்கள்..
1605 முதல் 1635வரை இலங்கையின் 'கண்டி'யை ஆன்ட சிங்கள மன்னன் செனரதன்.
இக்காலத்தில் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் கொடுத்த இம்சையால் துறைமுகப் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டிருந்தன.
கண்டி மன்னர்களுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் யாழ்ப்பாண மன்னன் வழி மட்டுமே கிடைத்து வந்தது.
அவ்வாறு கிடைத்த மற்றுமொரு உதவி மதுரை நாயக்க மன்னர்களின் இரு அரசிளங்குமாரிகள்.
கண்டிமீதான தென்னிந்திய நாயக்கர்களின் படையெடுப்பு இவ்விதம்தான் துவங்கி வைக்கப்பட்டது.
அந்தோ பரிதாபம்.. செனரத்தனுக்கு பின்பு அவனது இளையமகன் இராசிங்கன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டான்.
இவர்களை மணந்த மன்னனின் முதல் இரு புதல்வர்கள் ஊவா, மாத்தளைப் பிரதேசங்களுக்கான இளவரசர்களாக மட்டுமே நியமிக்கப்பட்டனர்.
இப்படியாக பேக்கரி டீலிங்கின் முதல் அத்தியாயம் பிசுபிசுத்துப் போனது.
செனரதனுக்குப் பின்பு கண்டியின் ஆட்சிக்கு வந்த ராசசிங்கன் தொடர்ச்சியாக 52ஆண்டுகள் (1635-1687) கண்டியை ஆண்டிருக்கிறான்.
இவன் தொடர்ச்சியாக டச்சுக்காரர்களிடம் போர்நடத்திக் கொண்டிருந்ததால் வடுக பேக்கரியின் ஷட்டர் இழுத்து மூடப்பட்டே இருந்தது.
ராசசிங்கன் மண்டையைப் போட்டபின்பு ஆட்சிக்கு வந்தவன் அவனது இரண்டாவது மகன் விமலதர்ம சூரியன் (1687-1706).
இவனது காலத்தில்தான் வடுக வியாபாரம் சூடு பிடித்தது.
முப்பது ஆண்டுகாலம் அமைதிவழியிலும், பின்பு ஒரு முப்பதாண்டுகாலம் ஆயுத வழியிலும் போராடி நாம் வெல்லமுடியாத சிங்களத்தை வீரபாகு பாணி வியாபாரத் தந்திரத்தால் வீழ்தினார்கள்.
டச்சுக்காரர்கள் மற்றும் உள்நாட்டுக் குழப்பங்களால் டரியலாகிக் கிடந்த விமலதர்மனிடம் தஞ்சைநாயக்கர்கள் புது வகை வெண்ணை தடவிய ரொட்டியை விற்றனர்.
அதாவது, தஞ்சை நாயக்க இளவரசியை விமலதர்மன் மணந்து கொள்வது.
வரதட்சனையாக ஆயிரக்கணக்கான நாயக்கப் போர்வீரர்களை அளிப்பது.
டீலிங் வெற்றி பெற்று பின்பு போர்வீரர்களுடன் கொசுராக தஞ்சை நகர நாயக்கப் பிரதிநிதிகளும் அனுப்பி வைக்கப் பட்டனர்.
இக்குடியேற்றத்தின் பலனாக கண்டி நகரின் ஒரு பகுதியே நாயக்கப் பிரதேசமானது.
அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குமார ரூப வீதியில் வாழ்ந்தனர்.
இது பிற்காலத்தில் மலபார்வீதி என அழைக்கப்பட்டது.
இப்போதைய யட்டிநுவர வீதி இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒருபகுதி யட்டிநுவரையெனவும் மறுபகுதி தஸ்கராவீதி எனவும் அழைக்கப்பட்டது.
படிப்படியாக சேர்பெணற்செய்சா வீதி, கொடு கொடல்ல, ஹன்ன பெரன என கண்டியின் அனைத்து வீதிகளும் ஒரிஜினல் சிங்களனுக்கே இருட்டுக்கடை அல்வா கொடுத்து ஆக்கிரமிக்கப்பட்டது.
இதுவே பிற்காலத்தில் கண்டிநகரம் முழுவதும் தஞ்சாவூர் நாயக்கர் மயமாக்கப்பட்டதற்கும், தொடர்ச்சியான பேக்கரி டீலிங்க்களுக்கும் இடப்பட்ட வலுவான அடித்தளம்.
விமலதர்மன் 1706ல் இறந்தபின்பு அவனது தஞ்சாவூர் நாயக்க அரசிக்குப் பிறந்த சிறீநரேந்திரசிங்கன் கண்டியின் ஆட்சிக்கு வருகிறான்(1706-1739).
வடுகம் கிட்டத்தட்ட பாதிக்கினறு தாண்டியாகி விட்டது.
இவனது காலத்தில்தான் வடுகர்கள் கண்டியின் தலையெழுத்தை திசைதிருப்பி எழுதினர்.
சுதேசிகளான உள்ளூர் சிங்களவாசிகளுக்கும் கண்டிக்கு வந்தேறிய நாயக்க அரசியல் பிரதிநிதிகளுக்கும் அடிக்கடி முறுகல் ஏற்பட்டது.
அந்தச் சிக்கலையும் நரேந்திரசிங்கனை வைத்தே திடீர்ச் சட்டதிருத்தம் கொண்டுவரச் செய்து சரிக்கட்டினர்.
அதாவது, அரசவாரிசாக தனது நெருங்கிய உறவினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அரசனுக்கே உரியது.
இந்தச் சட்டமே பின்னாளில் சுதேசிச் சிங்களவர்கள் குழப்பம் விளைவித்த போதும் வடுகர்கள் தற்காத்துக்கொள்ள கேடயமானது.
(இந்தக் காலகட்டத்திலெல்லாம் வடுகம் வடுகமாகவே இருந்தது. சிங்களமாக உருமாறவில்லை)
தொலைநோக்குப் பார்வையாக நாயக்க பார்வையாக நாயக்க இளவரசியை மணம்முடித்துக் கொடுக்கப்பட்ட போதே அவளின் தம்பியும் கண்டிக்கு அனுப்பப்பட்டு அரண்மனையிலேயே வளர்க்கப்பட்டு வந்தான்.
இவ்வாறு அனைத்து வழியும் செப்பனிடப்பட்ட பின்புதான் வடுக பேக்கரியின் ஷட்டர் திறக்கப்பட்டது.
13-5-1739ல் நரேந்திர சிங்கன் இறந்தபின்பு,
அவனால் தேர்ந்தெடுக்கப் பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட வைக்கப்பட்ட அவனது தஞ்சாவூர் நாயக்க இளவரசியின் தம்பி பாலவிஜயன் தனது நாயக்க பெயரைத் துறந்து விஜயராஜசிங்கம் எனும் சிங்களப் பெயரோடு அரியனை ஏறுகின்றான்.
(பெயர் மாற்றி வைத்து குரளிவித்தை காட்டுவது வடுகத்தில் இன்று வரை தொடர்கிறது.
தெட்சினாமூர்த்தி -கருணாநிதி,
கோபால்சாமி-வைகோ,
விசயராஜுலு- விஜயக்காந்த்,
கோமளவள்ளி-ஜெயலலிதா,
சிவாஜிராவ் - ரஜினிக்காந்த்)
கண்டியை ஆண்ட வடுகத்தை உள்நோக்கிப் போனால் கடலளவு பேக்கரிடீலிங் தெறித்து நிற்கிறது.
முழுவதும் எழுதுவதென்றால் தலைசுத்தி மயக்கம் வருகிறது.
அதனால் முந்தையப்பதிவுகளின் தொடர்ச்சிக் கச்சேரியைப் பிரிதொருமுறை வைத்துக் கொள்வோம்.
இப்போ ஹைலைட் மேட்டர்.
கண்டியை வடுகம் ஆண்டபோது சுதேசிச் சிங்களர்களால் பிரச்சினை வந்ததல்லவா?
அதனை அவர்கள் எதிர்கொள்ள கையாண்டமுறை மிகவும் எளிது.
தமிழகத்தில் கையாண்ட அதே உருமாற்ற முறை.
மொத்தமாக புத்தமதத்தைத் தழுவுவது.
பெயரும் சிங்களத்தில்.
சிங்களத்தின் கொடி, உடை அனைத்திலும் வடுகக்கலப்பு.
நிலங்களை சிங்களர்களுக்குப் பகிர்ந்தளித்து புத்தவிகாரைகளை எழுப்பினார்கள்.
சிங்களத்தையும் வடுகத்தையும் எளிதில் கண்டுபிடிக்க இயலா உருமாற்றம்.
கண்டி நாயக்க மரபு 1739 ஆம் ஆண்டில் தொடங்கியது. இம்மரபில் வந்த கண்டியரசர்களில் பட்டியலைக் கீழே காணலாம்.
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் (1739 - 1747)
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (1747 - 1782)
ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் (1782 -1798)
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் (1798 -1815)
இதில் கடைசி வடுக சிங்கள மன்னன் விக்கிரமராச சிங்கன் மற்றும் அவன் குடும்பத்தினர் மட்டும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் 18ஆண்டுகள் அடைபட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.
அப்படியென்றால், காலகாலமாக அங்கு குடியேற்றப்பட்ட ஆயிரக் கணக்கான வடுகர்கள்??????
அந்தக் கேள்வியின் பதிலில் தேங்கிநிற்கிறது தமிழர் இனப்போராட்டத்தை திராவிடம் வீழ்த்தத் துடிப்பதன் மர்மம்.
சிங்களத்தின் பெயரில் சமீபம்வரை ஆண்டு தமிழர் குருதியைச் சுவைத்து நிற்கிறது!

நன்றி: இசைப்பிரியா தம்பி


https://www.facebook.com/photo.php?fbid=678521142251542&set=a.108935022543493.9865.100002809860739&type=3&theater

1 comment:

  1. கண்டிராசன் கதைகள், கண்டி மாவட்ட தமிழர் வரலாறு பதிவு புத்தகங்கள் வாங்கி படிங்க, தெலுங்கர் மீது அவதூறு பரப்பு வேண்டும்.

    ReplyDelete