தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 23 மார்ச், 2020

சித்தர் அகத்திரை பற்றி உங்களுக்கு தெரியுமா?



ஒரு நாள் சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசை நோக்கி செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். அப்போது தெற்கே மேருமலை நோக்கி அகத்தியர் செல்கிறார். தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகனை வணங்கினார். அங்குதான் அகத்தியம் என்ற நூலை எழுதினார். அதனாலேயே அது அகத்தியர்மலை என்று பெயர் பெற்றது.
சிவனுக்கு பூஜை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக பறந்து வந்து அந்த கங்கை நீரை சாய்த்துவிட்டார். அப்படி விநாயகர் சாய்த்து கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு பெயர் பெற்றது.
இலங்கை மன்னர் இராவணனை அகத்தியர் தன் இசை திறமையால் வென்றார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது, இந்திரன் ஊர்வசியை நடனமாட சொன்னார். ஊர்வசி இந்திரன் மகனின் மீது வைத்திருந்த காதலால் நடமாடி, தன்னிலையை மறந்தாள். இதனால் கோபமடைந்த அகத்தியர் ஊர்வசியையும், சயந்தனையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார். அவ்வளவு சக்தி வாய்ந்தவர் அகத்தியர்.
சித்தர் அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவர். சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பட்டார். தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவர். முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை.
அகத்தியர் குடமுனி என்ற இடத்தில் பிறந்தவர். ரிக் வேதத்தில் அகத்தியர் மித்திர வருணனின் மகன் என்று சொல்லப்படுகிறது. அகத்தியர் ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை.
அகத்தியருக்கு தமிழ் முனிவர், மாதவ முனிவர், மாமுனி, குருமுனி என்று பல பெயர்களும் உண்டு.
சித்த மருத்துவத்தை தமிழுக்கு வழங்கியவர் அகத்தியர் என்று பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர்கள் தெரிவித்தனர்.
திருவனந்தபுரத்தில் அகத்தியர் அனந்தசயனம் என்ற இடத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி அடைந்தார் என்று கூறுகின்றனர்.
அகத்தியர் புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அப்பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டது. அங்கு பெரிய சிவனுக்கு ஆலயம் கட்டப்பட்டது. அதற்கு அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர்.
அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அகத்தியர் சமரச நிலை ஞானம் என்ற நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் கொடுத்துள்ளார்.
அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
அகத்தியர் வைத்தியத்திற்கான பல நூல்களை எழுதியுள்ளார். அகத்தியர் எழுதிய நூல்களில் அகத்தியர் வெண்பா, அகத்தியர் வைத்தியக் கொம்மி, அகத்தியர் வைத்திய ரத்னாகரம், அகத்தியர் வைத்தியக் கண்ணாடி, அகத்தியர் வைத்தியம் 1500 போன்ற பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.
தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம் பெரிய சித்தராக விளங்கியவர் தமிழ் முனிவர் அகத்தியர். இறைவனாகவே அகத்தியரை சித்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறப்படுகிறது.
அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள் காடுகள், புல்வெளிகள் என இப்பொதிகைமலை தன் அழகை பிரதிபலிக்கிறது. இயற்கை நமக்கு அளித்த கொடை பொதிகை மலை. கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடைந்தால், அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கலாம். இந்த தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற எண்ணம் வரும்.

https://news.lankasri.com/spiritual/03/222742?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக