தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 ஜூலை, 2018

25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம்! இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம்


இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும்.
இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது.
சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும்.
ஆனால் தற்போது இது சிங்களவர்களின் பூமி என்று கூறப்படுகின்றது. இங்கு சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் தமிழர்களே வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கில் சான்றுகள் கிடைத்தாலும், அவற்றை மூடி மறைப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.
எவ்வளவுதான் மறைக்க முற்பட்டாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். அந்த வகையில் ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்கள் மூலமாக வெளிவந்துள்ளது.
இந்த புகைப்படம் இலங்கை யாருக்கு சொந்தம், ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் யார்? இலங்கை சிங்கள பூமியா அல்லது தமிழர் பூமியா என்பதற்கு இந்த புகைப்படம் ஒன்றே போதுமானது.
இன்றிலிருந்து சுமார் 25,000 ஆண்டுகளுக்க முற்பட்ட இலங்கை எப்படி இருந்தது? எந்த இடங்களுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருந்தது? என்ன மொழி நடைமுறையில் உள்ளது? இலங்கையில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள் என்பதை இந்த ஒரு புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
இதுவரை யாரும் அறிந்திடாத பல ஆச்சரியங்கள் இந்த புகைப்படத்தில் காணப்படுகின்றன. 25,000 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்.


http://www.tamilwin.com/history/01/189197?ref=rightsidebar-lankasrinews

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக