தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 டிசம்பர், 2012

கணித மேதை இராமானுஜம் - 125 வது பிறந்தநாள் !


வீட்டிற்கு முன்பு பெண்கள் போடும் கோலம் முதல் வானில் சுற்றித்திரியும் கோளங்கள் வரை எல்லாமே ஒருவித கணக்கில் தான் இயங்கிங்கொண்டிருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலங்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு கணிதம் என்பது பெரும் துயரம் என்பதை நாம் உணர்வோம். அவர்களுக்கு ஆசிரியர் சொல்லும் ஒரே அறிவுரை, "கணிதத்தை காதலி... விரைவில் முடிக்கலாம் என.."
எனவே அந்த வகையில் உலகத்தை கணிதம் மூலமாக புரட்டிப்போட்டவர்கள் மூவரே.
1. லியோனார்டு ஆய்லர் (1707-1783), 
2. கார்ல் குஸ்டாவ் ஜாகோபி (1804-1851),
3.பிரமாண ஆத்தில் பிறந்த சீனிவாச இராமானுஜன்(டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920).
இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினமான டிசம்பர் 22 "தேசிய கணித தினமாக" கடைபிடிக்கப்படும் என கடந்தாண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.
உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். எனவே நாம் பூஜ்ய தேசத்தவர்கள் என சொல்லிக் கொள்ளலாம். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. பின்னர் 20ம் நூற்றாண்டில் இராமானுஜன் மூலம் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.
பிறப்பு மற்றும் வாழ்க்கை
இவர் 1887ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் திகதி தமிழக மாநிலத்தில் ஈரோட்டில் பிறந்தார். 2வது வயதில் லோனி எழுதிய முக்கோணவியல் (Trigonometry) என்ற பாட புத்தகத்தை கல்லூரியில் இளங்கலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த தன் அண்டை வீட்டு மாணவனிடமிருந்து கடன் வாங்கி படிக்கத் தொடங்கினார்.
விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்ற போது மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேனேஜர் எஸ்.என்.அய்யர், இராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். அதற்கு பதில் இல்லை. இருப்பினும், 1913ல் ராமானுஜன் கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும் அனுப்பினார்.
அதைக் கண்ட ஹார்டி, இதை படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து இராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று 1914ம் ஆண்டு பிரித்தானியா சென்ற ராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. இராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.
உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் பிரித்தானியா வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு 1917ல் இந்தியா திரும்பினார். பின்னர் இரண்டு, மூன்று வருடங்கள் வாழ்ந்த கணிதமேதை இராமானுஜம் 1920ல் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக