தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 19 மே, 2019

4 சொட்டு நல்லெண்ணெய உங்க சிறுநீர்ல விடுங்க! நொடியில் என்ன நோய் இருக்குனு தெரிஞ்சிடும்.. வியக்கும் தமிழன்


பொதுவாக ஏதாவது பரிசோதனைக்குச் சென்றால் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ரத்தப் பரிசோதனையும் சிறுநீர் பரிசோதனையும் தான். அதே பரிசோதனையை நம்முடைய முன்னோர்கள் எளிமையான முறையில் வீட்டிலேயே செய்து பார்த்திருக்கிறார்கள்.
இந்த முறையை பற்றி செய்து பார்த்த தமிழர்களே வியப்பில் மூழ்கியுள்ளனர். சிறுநீரில் நான்கு சொட்டுக்கள் நல்லெண்ணெய் விட்டு பார்த்தாலே போதும் நமக்கு என்ன மாதிரியான நோய்கள் இருக்கின்றன என்பது தெரிந்து விடும்.
அதை எப்படி சரி செய்ய வேண்டும். எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிறுநீர் பரிசோதனை
பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனையின் மூலமும் அதன் முடிவுகளை வைத்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் வைத்து நம்முடைய உடலின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த மருத்துவர்களின் துணையும் இல்லாமல் தங்களுடைய சிறுநீரை வைத்து தாங்களாகவே பரிசோதனை செய்து என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள்.
அவர்கள் செய்யும் பரிசோதனை அவ்வளவு கடினமானதெல்லாம் கிடையாது. மிக எளிமையாக செய்யக்கூடிய பரிந்துரை தான். அந்த முறையை நாமும் எளிமையாக செய்ய முடியும்.
மூன்று விஷயங்கள்
நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று விஷயங்கள் தான் அடிப்படைக் காரணமாக அமைகின்றன.
அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறதோ அதைத் தெரிந்து கொண்டாலே போதும் அதை எளிமையாக நாம் குணப்படுத்திவிட முடியாது.
அதைத் தான் சித்தர்கள் சிறுநீர் மூலம் எதில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்கள். அதை வைத்து நோயையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
எப்படி செய்யலாம்?
முன்னோர்கள் செய்ததை நாமும் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். காலையில் நாம் தூங்கி எழுந்ததும் ஒரு தெளிவான கண்ணாடி டம்ளரில் உங்களுடைய சிறுநீரை எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்பட்ட சிறுநீரில் நான்கு சொட்டுக்கள் நல்லெண்ணெயை விடுங்கள். அதை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிடுங்கள்.
எப்படி கண்டுபிடிப்பது?
ஓரமாக வைக்கப்பட்டிருக்கும் சிறுநீரை எடுத்துப் பாருங்கள். அரை மணி நேரம் கழித்து எடுத்துப் பார்த்தால் போதுமானது. அந்த எண்ணெயில் வடிவம் எப்படி இருக்கிறதோ அதைப் பொருத்து நம்முடைய உடலில் உள்ள பிரச்சினையை சரிசெய்து விடலாம்.
வாதம் அதிகம்
ஓரமாக வைக்கப்பட்ட சிறுநீரின் மேல் நீங்கள் விட்ட நல்லெண்ணெய் கயிறு போல் நெளிந்து காணப்பட்டால் உங்களுடைய உடலில் வாதம் அதிக அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.
  • பித்தம்
அதிகம் கயிறு போல இல்லாமல் இதுவே நீங்கள் சிறுநீரில் விட்ட எண்ணெய் வட்ட வடிவில் மோதிரம் போன்று இருந்தால் உங்களுடைய உடலில் பித்த நோய் அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.
  • கபம் அதிகம்
இவை இரண்டும் இல்லாமல் சிறுநீரின் மீது நீங்கள் விட்ட எண்ணெய் முத்துப் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று கொண்டிருந்தால் உங்களுடைய உடலில் கபம் அதிகமாகி இருக்கிறது என்று அர்த்தம்.
  • எண்ணெய் பரவினால்
இந்த மூன்றுமே இல்லாமல் சிறுநீரில் நீங்கள் விடும் எண்ணெய் சிறுநீருக்குள் வேகமாகப் பரவிச் சென்று விட்டால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடைந்து விடும் தன்மை கொண்டிருக்கிறது என்று பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக