தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

யாரிடம் இருந்து யாரை பாதுகாக்க இந்த முடக்கம்!??

யாரால் எதற்காக செய்யப்படுகிறது என அறியப்படாத கோழைத்தனமான தற்கொலை,குண்டு வெடிப்புகள் நாட்டின் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் பலர் உயிர்களை காவெடுத்துக்கொண்டிருக்க ,குற்றவாளிகளை முற்கூட்டியே கிடைத்த இந்திய உள்நாட்டு உளவுத்துறை எச்சரிக்கையோடு தேடி அழிக்காமல் பல உயிர்கள் பலியானதும் அதை மறைக்க சமூக வலைத்தளங்களை தற்காலிக தடை செய்தும் ஊரடங்கை அமுல் செய்தும் அராஜகம் செய்யும் அரச விர்வாகத்தின் நோக்கம் என்ன?

இச்சம்பவங்கள் அரசால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளதா?

காரணம் இதை செய்தவர்கள் நிச்சயம் பயங்கரவாதிகளே!தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாத சம்பந்தன் தமிழர் தலைவர்,அவர் தீவிரவாதிகளை கைது செய் என்கின்றார்!

தீவிரவாதிகளால் அரச படைகளும் அவர்கள் எதிரிகலுமே கொல்லப்படுவது தர்பாதுகாப்புக்காகவும் உரிமையை நிலைநாட்டவும் மட்டுமே!

இங்கு நடந்ததோ பொதுமக்கள் வழிபாட்டுத்தலங்கள்,தங்குமிடங்கள்!ஆக இது பயங்கரவாதம்!

இச்செய்தி சிங்கள இணையம்,தமிழ் இணையங்களில் கிடைத்தாலும் உலகிற்கு கொண்டு செல்லும் சமூக வலைத்தளங்கலானfacebook ,twitter,youtube என்பன அரசால் போலிக்காரணங்கள் சொல்லி முடக்கப்பட்டுள்ளமை அடிப்படை உரிமை மீறல்!!

உலகம் இதை தட்டிக்கேட்க அவை என்ன நடுநிலை மனிதநேயம் கொண்டவையா என்ன??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக