தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 ஜூன், 2023

 

இஸ்லாம் தனிமனிதர்களை உருவாக்கி அவர்களைக் கொண்ட குடும்பங்களை அமைத்து இறுதியில் தன் கொள்கை வழிச் சமூகம் ஒன்றைக் காண்பதை இலக்காகக் கொண்ட மார்க்கமாகும்.

இஸ்லாத்தின் இலக்குகளில் குடும்பம் பிரதான இடத்தைப் பெறுகின்றது. ஒரு குடும்பம் உருவாவதற்கு அத்திவாரமாக அமைவது ஆண் பெண் உறவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப் பெருக்கத்திற்கும் மனிதக் குலம் உட்பட அனைத்து உயிரினங்களின் இருப்புக்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவேயாகும். அணு முதல் அனைத்திலும் பால் வேறுபாடு காணப்படுகின்றது.

ஆண் பெண் இருபாலருக்கும் இடையே இறைவன் ஒரு வகை ஈர்ப்பை இயல்பாகவே வைத்திருக்கின்றான். இதனை இனக்கவர்ச்சி என்பார்கள். பசி, தாகம் எழுவது போலப் பாலுணர்வும் இயல்பான ஒன்றாகும். மிருக உலகம், தாவர உலகம் உட்பட எல்லா உயிரினங்களைப் பொறுத்தவரையிலும் அவை இயல்பான இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

ஆண் - பெண் உறவு திருமணம் 

இவ்வாறு அவை எத்தகைய கட்டுப்பாடுகளுமின்றி உறவு கொள்வதற்கு இறைவன் அனுமதி அளித்துள்ளான். ஆனால், மனிதனைப் பொறுத்தவரையில் அவன் பாலுணர்வின் கடிவாளத்தைக் கட்டுப்பாடுகளின்றி சுதந்திரமாக விட்டுவிடுவதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மனிதன் கௌரவமானவன். அவனது எல்லா நடவடிக்கைகளும் கௌரவமானதாக அமைதல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. இந்த வகையில் ஆண், பெண் உறவு திருமணம் என்ற உடன்படிக்கைக் கூடாகப் புனிதமான ஒன்றாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

சமூகம் என்ற விருட்சத்திற்கு வித்தாக அமைவது குடும்பம். குடும்பம் என்ற நிறுவனத்தின் நுழைவாயில் திருமணமாகும். இப்பின்னணியிலேயே இஸ்லாம் திருமணத்திற்குப் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கின்றது. இளைஞர்களை மணவாழ்வுக்குத் தூண்டுகின்ற பல அல்குர்ஆன், ஸுன்னா வாக்கியங்களைக் காணமுடிகின்றது. திருமணம் என்பது உலகில் தோன்றிய இறைத்தூதர்கள் அனைவரினதும் வழிமுறையாகும் என்பதை குர்ஆனும் ஸுன்னாவும் உறுதிசெய்கின்றன. இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. மேலும் (நபியே) உங்களுக்கு முன்பு பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்கு மனைவிமார்களையும் குழந்தைகளையும் கொடுத்திருந்தோம்.

இது தொடர்பான ஒரு நபி மொழியும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். நான்கு விஷயங்கள் இறைத்தூதர்களின் வழிமுறைப்பாற்பட்டவையாகும். அவையாவன கத்னா செய்து கொள்ளல், நறுமணம் பூசுதல், பல் துலக்குதல், திருமணம் முடித்தல்.(ஆதாரம் : திர்மிதி) திருமணம் என்பது அல்லாஹ்வின் ஓர் அத்தாட்சி என்றும் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. பொருளாதார பிரச்சினைக்கு அஞ்சி மணம் முடிக்காமல் இருப்பது பிழையானது ஒருவர் குடும்ப வாழ்வைத் துவங்குகின்ற போது அல்லாஹ் அவருக்கு எல்லாவகையிலும் உதவிக்கரம் நீட்டுகின்றான் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இது பற்றி குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு: மூவருக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகும்: கற்பொழுக்கத்தை நாடி திருமணம் முடிப்பவர், உரிமைச் சீட்டு எழுதப்பட்ட அடிமை, இறைப் பாகையில் போராடும் போராளி. (அஹ்மத், நஸாஈ)

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

மணவாழ்வின் பயன்கள்

இளைஞர்களைத் திருமணத்திற்குத் தூண்டும் வகையில் திருமணத்தினால் விளையும் நன்மைகளைப் பற்றியும் இஸ்லாம் பேசுகின்றது. மனிதனிடம் காணப்படும் உணர்ச்சிகளில் பாலுணர்வே மிகவும் பலமானது. அதைத் தீர்த்துக்கொள்வதற்கான இயல்பானதும், கௌரவமானதும். பாதுகாப்பானதுமான வழியாகத் திருமணம் அமைந்திருப்பதாக இஸ்லாம் கருதுகின்றது. குழந்தைச் செல்வத்தைப் பெறுவது திருமணத்தின் மற்றுமொரு விளைவாகும். உலக வாழ்வு நிலைப்பதற்கும் இனப்பெருக்கத்திற்கும் வழியாக அல்லாஹ் அமைத்திருப்பது ஆண் பெண் உறவையாகும். திருமணத்திற்கூடாக குழந்தைச் செல்வம் பெறப்படல் வேண்டும் என்பது ஒரு முக்கிய எதிர்பார்ப்பு என்பதனாலேயே நபி (ஸல்) அவர்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கக் கூடிய பெண்களைத் திருமணம் முடிக்குமாறு தூண்டினார்கள்.

மன அமைதியும் உளத்திருப்தியும் திருமணத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் மற்றுமொரு நன்மையாகும். எந்த மனிதனும் வாழ்க்கைத்துணையின்றி மன அமைதியைப் பெறுவது சிரமசாத்தியமானதாகும். ஓர் ஆணும் பெண்ணும் திருமணத்திற்கூடாக இணைகின்ற போதே இருவரது வாழ்வும் நிறைவு பெறுகின்றது. இவ்வுண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது: நீங்கள் ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களில் இருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும் உங்களுக்கிடையே உவப்பையும் அன்பையும் ஏற்படுத்தி இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

சீரான குடும்பங்கள்

தாய்மை உணர்வையும் தந்தை உணர்வையும் (குயுவுர்நுசுர்ழுழுனு) பெறுவதற்கான வழியாக விளங்குவதும் மணவாழ்வாகும். சகோதரன் சகோதரி (ளுளைவநசாழழன) முதலான உறவுகள் தோன்றுவதும் திருமணத்தின் வாயிலாகும். இத்தகைய உணர்வுகளும் உறவுகளும் இன்றி மனித வாழ்வு நிறைவாக அமையாது. சுறுசுறுப்பு, ஊக்கம், உற்சாகம், பொறுப்புணர்ச்சி முதலான மனித வாழ்வு வளம் பெறத் தேவையான பண்புகளை மணவாழ்வு வளர்ப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருமணம் முடித்தவர்களின் ஆயுள் பிரமச்சாரிகளின் ஆயுளை விடக் கூடியதாக அமைகிறது என்பதும் ஆய்வுகளுக்கூடாக தெரியவந்துள்ளது. அன்றாட வாழ்வின் பொறுப்புக்களைக் கணவன் மனைவிக்கிடையேயும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கிடையேயும் அழகாகப் பகிர்ந்து கொண்டு நிறைவுடனும் நிம்மதியாகவும் வாழ்வதற்கும் திருமண வாழ்வு வழியமைத்துக் கொடுக்கின்றது. சீரான குடும்பங்கள் இணைந்தே பரஸ்பர அன்பும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் கொண்ட ஒரு சிறப்பான சமூகம் தோன்ற முடியும் என்ற வகையிலும் குடும்ப வாழ்வில் நுழைவாயிலாக விளங்கும் திருமணம் முக்கியத்துவம் பெறுகின்றது.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

திருமணம் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பு

மணவாழ்வில் நாட்டமும் அதற்குரிய சக்தியும் கொண்டவர் தொடர்ந்தும் திருமணம் முடிக்காமலிருந்தால் தான் வழிதவறி விடக்கூடும் என அஞ்சும் போது அவர் திருமணம் செய்து கொள்வது கட்டாய கடமையாகும். மணவாழ்வில் நாட்டம் இருந்தும் அதற்கான வாய்ப்பைப் பெறாதவர் தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும். இத்தகையர்களுக்கு நம்பியவர்கள் பின்வருமாறு வழிகாட்டினார்கள். இளைஞர்களே! உங்களில் மணமுடிக்கச் சக்தி பெற்றவர் மணமுடிக்கட்டும். அது பார்வையைத் தாழ்த்திக் கொள்ளவும் கற்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவியாக அமையும். மணமுடிக்க முடியாத நிலையில் இருப்பவர் நோன்பு நோற்கட்டும்.

அது அவரது இச்சையை அறுக்கக்கூடியதாக இருக்கும். பின்வரும் அல்குர்ஆன் வசனமும் இத்தகையர்களுடைய கவனத்திற்குரியதாகும். (திருமணம் செய்து கொள்ளும் வசதியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ் தனது பேரருளால் அவர்களை வசதிபடைத்தவர்களாக ஆக்கும் வரை அவர்கள் கற்புடன் நடந்து கொள்ளவும்.)

(24: 33) ஒருவருக்கு மணவாழ்வில் நாட்டமும் அதற்கான சக்தியும் வசதியும் இருந்த போதிலும் மணமுடிக்காத போது தான் வழிதவறிவிடலாம் என்ற பயம் இல்லாத போது அவர் திருமணம் செய்து கொள்வது சுன்னத்தாகும்.

இத்தகையாவர் கூட மணவாழ்வில் நுழைவதையே இஸ்லாம் வரவேற்கின்றது, வலியுறுத்துகின்றது. ஒரு வணக்கவாளியின் வணக்கம் அவர் திருமணம் முடிக்காதவரை முழுமையடையாது என்ற இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் கூற்றுச் சிந்தனைக்குரியதாகும். தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாதவரும், குடும்பத்திற்குத் தேவையான வாழ்க்கைச் செலவை வழங்க முடியாதவரும் திருமணம் முடித்தல் ஆகாது என்பதும் ஷரீஆவின் நிலைப்பாடாகும்.

மணவாழ்க்கை நடாத்தக் கூடிய சக்தி, வாய்ப்பு வசதிகள் இருந்தும் மணவாழ்வைத் துறந்து பிரமச்சாரியாக வாழ்வதை, துறவறம் பூணுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. குடும்ப வாழ்க்கையைப் புறக்கணித்து வணக்க வழிபாடுகளில் தீவிர ஆர்வம் காட்டிய சில நபித்தோழர்களை நம்பியவர்கள் எவ்வாறு கண்டித்து நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் காணலாம். உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் ஆகிய இருவரும் இந்த வகையில் நம்பியவர்களால் வழிப்படுத்தப்பட்டவர்களாவர்.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

இஸ்லாமியத் திருமண ஒழுங்குகள்: துணைத் தெரிவு

திருமணம் என்பது வாழ்க்கைப் பயணத்தின் ஒருவகைத் துவக்கமாகும். மனைவி என்பவள் வாழ்க்கைத் துணைவியாவாள். கணவன் என்பவன் மனைவியின் வாழ்க்கைத் துணைவனாவான். ஆண், பெண் இருபாலாறும் தமது வாழ்க்கைத் துணையைச் சரியாகத் தெரிவு செய்து கொள்வதில் தான் இல்லற வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது.

ஓர் ஆணோ அல்லது பெண்ணோ தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது நடைமுறையில் கவனத்திற் கொள்ளும் அம்சங்கள் பல காணப்படுகின்றன. பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு என்று இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இஸ்லாம் துணைத் தெரிவில் நற்குணத்திற்கும் நன்னடத்தைக்கும் முக்கியத்துவமும் முன்னுரிமையையும் கொடுக்குமாறு வழிப்படுத்துகின்றது. இஸ்லாமிய நோக்கில் ஓர் ஆண் தனக்குரிய துணையைத் தெரிவு செய்யும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்.

நற்பண்புகளும் நன்னடத்தையும் இறை நம்பிக்கையும் மறுமைப் பற்றிய விசுவாசமும் இல்லாத ஒருவரிடம் நற்பண்புகளையோ நன்னடத்தையையோ எதிர்பார்க்க முடியாது. இந்த வகையில் துணைத் தெரிவில் மார்க்கப் பற்று கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். இது பற்றிப் பேசும் சில நபிமொழிகள் பின்வருமாறு.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

உன்னை மகிழ்விப்பாள்

1. மார்க்கப் பற்றுடையவள் மூக்கறுப்பட்ட அடிமையாக இருப்பினும் அவளே சிறந்தவள் (இப்னு மாஜா)

2. மார்க்கமுள்ள பெண்ணை தேடி அடைந்து கொள், இல்லாத போது நீ அழிந்து விடுவாய் (புகாரி, முஸ்லிம்)

3. உலகம் என்பது இன்பப் பொருளாகும். அதன் இன்பப் பொருட்களுள் சிறந்தது சாலிஹான பெண்ணாகும் (முஸ்லிம்) அழகும் அடக்கமும் பணிவும் கட்டுப்பாடும் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட ஒரு பெண்ணே இஸ்லாமிய நோக்கில் சாலிஹான பெண்ணாகக் கொள்ளப்படுகின்றாள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் சிறந்த, சாலிஹான பெண்ணுக்குப் பின்வருமாறு வரைவிலக்கணம் சொன்னார்கள். 'நீ அவளைப் பார்த்தால் உன்னை மகிழ்விப்பாள். நீ அவளுக்குக் கட்டளையிட்டால் உடன் கட்டுப்படுவாள். நீ அவளை வைத்து சத்தியம் செய்தால் அதனை நிறைவேற்றி வைப்பாள். நீ வீட்டில் இல்லாத போது தன்னையும் உன் பொருளையும் பாதுகாத்துக் கொள்வாள். (நஸாஈ) குழந்தைப் பாக்கியமுடையவளாக இருத்தல், சந்ததியை விருத்தி செய்தல் மணவாழ்வின் நோக்கங்களுள் ஒன்றாகும்.

எனவே ஒருவர் தனக்குரிய துணையைத் தெரிவு செய்கின்ற போது குழந்தைகளைப் பெறக்கூடிய பெண்ணை தெரிவு செய்ய வேண்டும் என்பதும் இஸ்லாத்தின் வழிகாட்டலாகும். இது பற்றிக் குறிப்பிடும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு: அதிக அன்பும் குழந்தைப் பேறும் கொண்ட பெண்களை மணமுடிப்பீர்களாக. மறுமையில் நான் ஏனைய சமூகங்களுக்கு முன்னால் உங்களது எண்ணிக்கையை வைத்துப் பெருமைப்படுவேன். ஒரு பெண் குழந்தைப் பேறுடையவளா என்பதை அவளது குடும்பத்தில் திருமணம் முடித்துள்ள ஏனைய பெண்களை வைத்து உறுதிசெய்து கொள்ளலாம்.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

அழகு

அழகை விரும்புவது மனிதர்களின் இயல்பான பண்பாகும். அழகுணர்ச்சி என்பது அல்லாஹ்வின் பண்பாகவும் கருதப்படுகின்றது. இதற்குப் பின்வரும் நபி மொழி ஆதாரமாக விளங்குகின்றது. (அல்லாஹ் அழகானவன். அவன் அழகை நேசிக்கின்றான்.) அழகை அடைந்து கொள்ளாத உள்ளம் நிறைவு பெறாது. அழகு என்பது ஒவ்வொருவரதும் பார்வை, நோக்கு, இரசனை, விருப்பு வெறுப்பு முதலானவற்றைப் பொறுத்து வேறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த வகையில் திருமணத்தின் போதும் ஒருவர் தனது துணையின் அழகைக் கவனத்திற் கொள்வது பிழையானதல்ல. ஒரு முறை அல்முகீரா இப்னு ஷுஃபா (ரழி) என்ற நபித் தோழர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்க முன்வந்தார். இது பற்றி நம்பியவர்களிடம் அவர் குறிப்பிட்ட போது அவர்கள் பின்வருமாறு ஆலோசனைக் கூறினார்கள்.

நீர் போய் அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும். அதுவே உங்கள் இருவர் மத்தியிலும் அன்பும் பிணைப்பும் நிலைப்பதற்கு வழியமைக்கும். திருமணம் பேசப்படும் பெண்ணைப் பார்த்து அவதானிப்பதற்காக குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை அனுப்பி வைப்பதற்கும் ஸுன்னா அனுமதி வழங்கியிருப்பதைக் காணலாம்.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்தல்

ஒப்பீட்டு ரீதியில் ஏலவே திருமணம் முடித்த ஒரு விதவையை விடக் கன்னிப் பெண்ணைத் தெரிவு செய்வது நல்லது என்பது நம்பியவர்களின் வழிகாட்டலாகும். ஒரு முறை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் ஒரு விதவையைத் திருமணம் முடித்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் அந்நபித்தோழரைப் பார்த்து,'உமக்கு ஒரு கன்னிப் பெண் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் தனது மரணமான தந்தைக்குப் பல சிறு பெண்பிள்ளைகள் இருப்பதாகவும் அவர்களைப் பராமரிப்பதற்கு ஒரு விதவைப் பெண்ணே பொருத்தமானவள் என்றும் அதனால்தான் தான் ஒரு விதவையை மணம் முடித்ததாகவும் விளக்கம் சொன்னார்.

வயது, குடும்பப் பின்னணி, சமூக அந்தஸ்த்து, பொருளாதார நிலை முதலானவற்றைக் கவனத்திற் கொள்ளல் இல்லற வாழ்வு வெற்றிகரமாக அமைய மேற் குறித்த அம்சங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. நபி (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமாவை அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆகியோர் மணமுடிக்க விரும்பிய போதும் அவர்களுக்கு மணமுடித்து வைக்காமல் அலி (ரழி) அவர்களுக்கு மணமுடித்து வைத்தமை கவனிக்கத்தக்கதாகும்.

ஒரு பெண்ணும் தனக்குரிய வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறாள். ஒரு விதவையை அவளது முடிவு பெறப்படாமல் திருமணம் செய்து வைத்தலாகாது கன்னிப் பெண்ணையும் அவளது சம்மதத்தைப் பெறாமல் திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பது நம்பியவர்களின் கட்டளையாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியபோது அல்லாஹ்வின் தூதரே அவளது சம்மதம் எப்படிப் பெறப்படல் வேண்டும் என ஸஹபாக்கள் வினவியபோது நபி (ஸல்) அவர்கள் 'அவளது மௌனமே அவளது சம்மதமாகும் என்றார்கள் (புகாரி, அஹ்மத்) ஒரு விதவை அவளது பொறுப்பு தாரியை (வலி) விட அவளது விவகாரத்தைத் தீர்மானிக்கக் கூடிய அருகதையும் தகுதியும் உடையவளாவாள். ஒரு கன்னிப் பெண்ணைப் பொருத்த வரையில் அவளது சம்மதம் கோரப்படல் வேண்டும். அவளது மௌனமே அவளது சம்மதமாகும் (முஸ்லிம், திர்மிதி, நஸாஈ) என்ற நபிமொழியும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

பெண்ணுக்கு உரிமை 

ஹன்ஸா பின்த கிதாம் அல்அன்ஸாரியா என்ற விதவைப் பெண்ணை அவளின் தந்தை அவளது விருப்பத்திற்கு மாற்றமாக ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார். அப்பெண் இது பற்றி நம்பியவர்களிடம் முறைப்பாடு செய்யவே அன்னார் அத்திருமணத்தைச் செல்லுபடியற்றதாக ஆக்கினார்கள். (புகாரி, திர்மிதி, இப்னு மாஜா)

மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு கன்னிப் பெண் நம்பியவர்களிடம் வந்து தனது தந்தை தனது விருப்பத்திற்கு மாற்றமாகத் தன்னை ஒருவருக்கு மணம் முடித்து வைத்துள்ளதாக முறைப்பட்டாள். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை அந்தப் பெண்ணின் தெரிவிற்கு விட்டார்கள். (அபூதாவூத், இப்னு மாஜா) மேற்கண்ட ஹதீஸ்கள், தான் விரும்பாத தனக்குத் திருப்தி இல்லாத ஒருவரை மணம் முடித்து வைக்க ஷவலி முனைகின்ற போது அதனை மறுக்கின்ற நிராகரிக்கின்ற உரிமை ஒரு பெண்ணுக்கு உண்டு என்பதைக் காட்டுகின்றன.

உண்மையில் தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருப்பவரோ ஒரு பெண்ணை அவள் விரும்பாத ஓர் ஆணுக்கு நிர்ப்பந்தித்து மணம் முடித்துக் கொடுக்கும் உரிமையைப் பெற்றவர் அல்ல.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

மணமுடித்து வைக்கும் பொறுப்பு

ஏற்கனவே திருமணம் முடித்து பின்னர் விதவையான ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் திருப்தி காணாத ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பதற்கு எவருக்கும் எந்த உரிமையோ அதிகாரமோ இல்லை என்பது இமாம்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.

வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையிலும் அவளையும் குறிப்பிட்ட ஓர் ஆணை மணம் முடிக்க நிர்ப்பந்திக்க முடியாது என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாகும். பருவ வயதை அடைந்த ஒரு கன்னிப் பெண்ணின் செல்வத்தை அவளது அனுமதியின்றி கையாள்வதற்கு அவளது தந்தைக்கோ மற்றொருவருக்கோ அனுமதியில்லை என்பது முடிவான கருத்தாகும். பொருள் விடயத்திலேயே ஷரீஅத் இத்தகைய ஒரு நிலைப்பாட்டைக் கொள்வதாக இருந்தால் முழு வாழ்வுடனும் தொடர்பான திருமண விடயத்தில் எவ்வாறு ஷவலி தான் விரும்பிய முடிவை எடுக்கும் உரிமையைப் பெறுவார்?!! உயிர், பொருளை விட மேலானது. திருப்தியில்லாத நிலையில் துவங்கும் குடும்ப வாழ்வினால் விளையும் கேடுகளுக்கு முன்னால் பொருள் நஷ்டம் அலட்டிக் கொள்ளத்தக்கதல்ல.

ஆயினும் ஒரு யுவதி அனுபவ குறைவினாலும் முதிர்ச்சியின்மைக் காரணமாகவும் சிலபோது தனது வாழ்க்கைத் துணைவனைத் தெரிவு செய்வதில் தவறு இழைத்து விட வாய்ப்புண்டு. இதனால் ஷரீஅத், தனது பொறுப்பில் இருக்கும் யுவதிக்கான கணவனைத் தெரிவு செய்து மணமுடித்து வைக்கும் பொறுப்பைத் தந்தை முதலான ஷவலிகளுக்கு வழங்கியுள்ளதோடு தனது ஷவலி யின் தெரிவை ஏற்கும் உரிமையையும் மறுக்கும் உரிமையையும் அந்தப் பெண்ணுக்கு அளித்துள்ளது. அவ்வாறே தகுதியற்ற, பொருத்தமற்ற ஒருவனைத் தனது பொறுப்பில் உள்ள பெண் தெரிவு செய்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரத்தை இஸ்லாம் ஷவலி க்கு வழங்கியுள்ளது.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

எதிர்காலம் 

ஆயினும் இன்று நடைமுறையில் ஒரு பெண் தனக்குரிய கணவனைச் சுதந்திரமாகத் தெரிவு செய்யும் உரிமையைப் பல போது இழந்து விடுகின்றாள். அவளது விருப்பு, வெறுப்பை விடத் தாய், தந்தையின் விருப்பு, வெறுப்பே கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. தான் விரும்பாத போதும் தந்தையின் விருப்பம், தாயின் தெரிவு என்பதற்காக ஒருவருக்கு வாழ்க்கைப்படும் நிலை பெண்களில் பலருக்கு ஏற்படுகின்றது. குடும்ப வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளும் சிக்கல்களும் தோன்றுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.

இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) போன்றோர் இது விடயத்தில் மிகக் கண்டிப்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். ஒரு தகப்பனோ அல்லது ஷவலி ஆக இருக்கும் மற்றொருவரோ வயது வந்த ஒரு கன்னிப் பெண்ணை திருமணத்திற்கு நிர்ப்பந்திக்க முடியாது. தகப்பனாயினும் அல்லது மற்றொரு ஷவலி யாயினும் திருமண விடயத்தில் அவளது சம்மதத்தைக் கோருதல் வேண்டும். அவள் உடன் பட்டாலேயே திருமண ஒப்பந்தம் செல்லுபடியாகும் இல்லாத போது செல்லுபடியாகாது.

இது இமாம் அபூ ஹனிபா போன்றோரின் ஷரீஆ நிலைப்பாடாகும். ஆயினும் ஒரு கன்னிப் பெண்ணைப் பொறுத்தவரையில் அவள் அறிவு அனுபவம், முதிர்ச்சி முதலானவற்றில் குறைந்தவளாக இருக்கும் காரணத்தினால் அவளுடைய எதிர்காலம் பற்றி அவளது தகப்பன் முதலான ஷவலி மாரே தீர்மானிக்க வேண்டும் என வேறு பல இமாம்கள் கருதுகின்றனர். இது விடயத்தில் அவளது விருப்பு வெறுப்பை அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை எனவும் கூறுகின்றனர். இக்கருத்தை உடைய இமாம்களும் அவளது சம்மதத்தைப் பெறுவது வரவேற்கத்தக்கது என்பதை வலியுறுத்துகின்றனர்.

ஒரு கன்னிப் பெண் நன்னடத்தை, குடும்பம், தொழில், சமூக அந்தஸ்த்து, பொருளாதாரம் முதலான ஒன்றில் தமக்குத் தகுதியற்ற ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முற்படும் போது அதனை ஆட்சேபித்து தடை செய்வதற்குத் தகப்பன் முதலான ஷவலி மாருக்கு உரிமையுண்டு என்பதே இமாம் அபூ ஹனிபா போன்ற அறிஞர்களும் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

பிழையான தெரிவு

எனவே, ஒரு பெண்ணுக்குரிய மணவாளனைத் தெரிவு செய்யும் போது பெற்றோர் முதலானோர் மிகவும் விழிப்புடனும் கவனமாகவும் நடந்து கொள்ள வேண்டும். தனது பொறுப்பில் உள்ள பெண் பிள்ளையின் சார்பில் அவளுக்குரிய மணவாளனைத் தெரிவு செய்யும் போது ஷவலி கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்களை இஸ்லாம் கோடிட்டுக் காட்டியுள்ளது. திருமணம் என்பது ஒருவகை அடிமைத்தளையாகும். எனவே ஒருவர் தனது பெறுமதியாக்கப் பெண்ணை தான் யாரிடம் ஒப்படைக்கின்றார் என்பதனைக் கவனத்திற் கொள்ளட்டும் என்பது நபி வாக்காகும். (பைஹகி) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்களின் பின்வரும் கூற்று கனயீர்ப்பைப் பெறவேண்டிய ஒன்றாகும்.

பெண்பிள்ளைத் தொடர்பில் மிகக் கவனமாக நடந்து கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் அவள் திருமணத்திற் கூடாகத் தப்பிக் கொள்ள முடியாத ஒரு வகை அடிமையாக மாறுகின்றாள். ஆனால் ஓர் ஆணைப் பொறுத்தவரையில் அவனுக்கு இலகுவில் விவாகரத்தைப் பெரும் வாய்ப்புண்டு.

இந்த வகையில் ஒருவர் தன் கீழ் இருக்கும் பெண்ணுக்கு ஒரு பாவியையோ அல்லது அநியாயக்காரனையோ அல்லது குழப்பவாதியையோ திருமணம் செய்து வைப்பது பெரும் குற்றமாகும். பிழையான தெரிவை செய்ததற்காக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் உட்பட வேண்டியிருக்கும். 00 எவர் தனது பெண்ணை ஒரு பாவிக்குத் திருமணம் முடித்து வைக்கின்றாரோ அவர் அவளுடனான தனது இரத்த உறவை அறுத்தவராவார் (இப்னு ஹிப்பான்) என்பது நபிமொழியாகும்.

சுருங்கக் கூறின் ஒரு பெண்ணுக்குரிய மணவாளனைத் தெரிவு செய்யும் போது பின்வரும் அம்சங்கள் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். மார்க்கப்பற்று, நல்லொழுக்கம், நன்னடத்தை சன்மார்க்கக் கடமைகளை ஒழுங்காக நிறைவேற்றாத, பாவங்களைத் தவிர்ந்து நடக்காத ஒரு பாவிக்குக் கற்பொழுக்கமுள்ள ஒரு பெண்ணை திருமண முடித்து வைக்கலாகாது.

'பாவத்தில் விடாப்பிடியாக இருக்கும் ஒருவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து வைக்கலாகாது எனக் கூறுகின்றார்கள் இமாம் இப்னு தைமியா அவர்கள். ஒரு முறை ஒருவர் ஹஸன் (ரழி) அவர்களிடம் வந்து, 'எனக்கொரு மகள் இருக்கிறாள். அவளை நான் யாருக்குத் திருமணம் முடித்துக் கொடுக்கட்டும் என வினவினார். அதற்கு அவர்கள், அல்லாஹ்வை பயந்து வாழும் ஒருவருக்கு அவளை மணம் முடித்து வைப்பீராக. அத்தகையவன் அவளை விரும்பிவிட்டால் கண்ணியமாக நடாத்துவான் அவளிள் வெறுப்பு ஏற்பட்டு விட்டாலோ அவளுக்கு அநியாயம் இழைக்க மாட்டான் என்றார்கள்.

பின்வரும் நபி மொழியும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். மார்க்கத்திலும் பண்பாட்டிலும் நீங்கள் திருப்தி காணும் ஒருவர் உங்களிடம் வந்துவிட்டால் அவருக்கு உங்களது பிள்ளையைத் திருமணம் முடித்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்ய வில்லையாயின் பூமியில் குழப்பமும் பெரும் சீர் குழைவும் உருவாகும்.

திருமணம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்! | Islamic Marriage

மணவாளனின் குடும்பப் பின்னணி

அரபிகள் குடும்பப் பின்னணிக்குக் கூடுதல் கவனம் செலுத்துவர். குடும்பம், குலம், கோத்திரம் பார்ப்பதைச் சட்ட அறிஞர்கள் ஷகபாஅத்| எனும் பெயரில் வழங்குவர். தகுதி பார்த்தல், பொருத்தம் பார்த்தல் என்பது இதன் பொருளாகும். இவ்வாறு திருமணத்தின் போது தகுதி பார்க்க முடியுமா? எனும் விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

பொதுவாக நோக்குமிடத்து மார்க்கப் பற்றும் நற்குணமும் நன்னடத்தையும் ஒரு மணவாளனுக்கு போதுமான தகமைகளாகும். இதனாலேயே அபீசீனிய அடிமையாக இருந்த பிலாலுக்கு குறைஷியரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்களின் சகோதரி திருமணம் முடித்து வைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் தனது மாமி மகளான ஸைனபை தனது அடிமையாக இருந்த ஸைதுக்கு மணம் முடித்து வைத்தார்கள்.எந்தவொரு முஸ்லிம் ஆணும் எந்தவொரு முஸ்லிம் பெண்ணுக்கும் பொறுத்தமானவர்ளூ தகுதியுடையவர் என்ற மிக முற்போக்கான மார்க்கத் தீர்ப்பை இமாம் இப்னு ஹஸ்ம் வழங்கியுள்ளார்.

ஆயினும் நடைமுறையில் குடும்ப வாழ்க்கையில் உயர்வுச் சிக்கல், தாழ்வுச் சிக்கல் முதலான உளவியல் பிரச்சினைகள் உருவாகி குடும்ப வாழ்வு சிக்கலாகி விடக் கூடாது என்பதற்காகவே சில இமாம்கள் திருமணத்தின் போது தகுதி பார்த்தலை ஒரு நிபந்தனையாகக் குறிப்பிட்டார்கள்.

மேற்குறிப்பிட்ட அம்சங்களோடு பெண் கன்னிப் பெண்ணாக இருந்தால் ஏலவே திருமணம் முடிக்காத ஒருவரை மணவாளனாகத் தெரிவு செய்வது வரவேற்கத்தக்கது. அவ்வாறே அவரின் பொருளாதார வசதியைக் கவனத்திற் கொள்வதும் பிழையானதல்ல. ஆனால் மார்க்கப்பற்றும் நற்குண, நல்லொழுக்கமுமே முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெறல் வேண்டும். வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதில் இஸ்லாம் கூறும் இத்தகைய வழிகாட்டல்களைக் கவனத்திற் கொண்டு செயற்பட்டால் திருப்தியான, நிறைவான இல்லற வாழ்வு கிட்டும். இவை புறக்கணிக்கப்படும் போது குடும்ப வாழ்வு கசக்கும் கவலையும் கைசேதமுமே கடைசி வரைத் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.   


https://muthanmai.com/article/islamic-marriage-1681098528

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக